வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Wednesday, 16 October 2024

காலிங்கராயன்

பரதகுல காலிங்கராயன் கல்வெட்டு:

காலிங்கராயன் என்னும் பட்டப் பெயரை இன்றும் திருநெல்வேலி சீமை மற்றும் நாஞ்சி வளநாட்டில் பரதவர்கள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். "சூசன் பெய்லி" என்னும் ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர் தனது "புனிதர்கள், பெண் தெய்வங்கள் மற்றும் அரசர்கள்" என்னும் நூலில்....

"பரதவர்கள் மத்தியில் இன்றும் பொதுவாக பயன்படுத்தப்படும் கிறிஸ்துவமல்லாத பரம்பரை பட்டப் பெயர்களாக காலிங்கராயர், வில்லவராயர், பூபாலராயர் மற்றும் ராயர் ஆகியவை" என்று பதிவு செய்கிறார்.

நாஞ்சி வளநாட்டில் காலிங்கராயர் என்னும் பட்டப் பெயர் உள்ள பரதகுல மன்னர்கள் ஆட்சி புரிந்ததையும், அவர்களுள் 17 ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற மன்னர் செண்பகராமன் காலிங்கராயனை பாட்டுடைத் நாயகனாக பாடப்பெற்ற தமிழ் சிற்றிலக்கிய வகையில் ஒன்றான "செண்பகராமன் பள்ளு" பதிவு செய்கிறது.

காலிங்கராயன் கல்வெட்டு:-

மாவட்டம்: திருநெல்வேலி
வட்டம்/ஊர்: பாளையங்கோட்டை
அரசு: பிற்கால பாண்டிய பேரரசு(கிபி900-1293)
அரசன்: -
இடம்: கோபாலசாமி கோயில் கருவறை மேற்கு ஜகதிப் படையிலுள்ளது

கல்வெட்டு குறிப்புரை: துண்டு கல்வெட்டுகள் நிலக்கொடை பற்றிக் கூறுகின்றன. முன் கல்வெட்டில் இடம்பெற்ற காலிங்கராயன் என்னும் பாண்டியர் அதிகாரி இக்கல்வெட்டில் குறிப்பிப்படுகிறான்.




 - UNI
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com