சேரநாட்டில் பரவர்கள்
பண்டைய சேரநாட்டில் பரவர்கள் பெயரில் வழங்கிவந்த வயல் நிலங்கள்:
ஸ்ரீ வல்லவங்கொதை என்பவன் கிபி பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த வேணாட்டு அரசன் ஆவான். இவன் கேரளா மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் திருவண்வண்டூர் நகரில் அமைந்துள்ள கோவிலுக்கு பரவர்களுடைய வயலிலிருந்து ஆண்டுதோரும் இருபது கலம் நெல் தானமாக ஒதுக்கியுள்ளதை பற்றி.....
"கோவிந்தனார்கரி நூற்றுக்கலமும் #பரவனார்கரி இருபது கலமும்.... "
என்று திருவண்வண்டூர் கோவில் கல்வெட்டு பதிவு செய்கிறது.
இதன்மூலம் சேரநாட்டில் வாழந்த பரவர்கள் தங்களுடைய வயல்களுக்கு தங்களுடைய இனப்பெயரையும் அதற்கு பெயராக வைத்துள்ளனர் என்பதனை ஆதாரபூர்வமாக அறியமுடிகிறது.
०००००००००००००००००००००००००००००००००००००००००००००००
Foot Notes:-
Travancore Archaeological Series Vol II Part II Pg. 23, 24
- UNI