அமலோற்பவத் தாயார் மீது அகர குற்றுயிர் மடக்கு வெண்பா
வேம்பாறு சித்திரக்கவி முத்தையா ரொட்ரிகோ அவர்களின் எழுத்தோவியத்தில் அமலோற்பவத் தாயார் மீது
அகர குற்றுயிர் மடக்கு வெண்பா
ககன பரம கரம மரப
வகன லகல மகத வகன
வபல சனன வரச மரப
கமல சரண மபய
பொருள் :
விண்ணாட்டின் பரமனாகிய
கடவுளின் திருக்கரத்தில் அமர வரம் பெற்றவளும், பாவக் கனலாகிய நரக ஆக்கினை ஒழியும்படி
மகாதவத்தின் மேன்மையைக் கொண்டு அமல உற்பவமாய் அவதரித்தவளும், அரச குலத்தவளுமாகிய
தேவ தாயின் தாமரை மலரையொத்த திருவடிகள் எனக்கு அடைக்கலம்.