வேம்பாற்றுறையின் பெருவிழா அழைப்பிதழ்
எழு கடற்றுறையின் முதற்றுறையாம் வேம்பாற்றுறையினை
"பாதமலர்க் காவல் தந்து ஏதமறவே புரந்து காக்கும்"
ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரனின் மகோன்னத பெருவிழாவானது வரும் 11.01.2016 அன்று மாலை 6.30 மணியளவில் திருகொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பாதுகாவலரின் மகோற்சவ நகர்வலப் பவனியானது 19.01.2016 இரவிலும் 20.01.2016 அதிகாலையிலும் நடைபெறுகிறது.
மகா ஆடம்பர பெருவிழா திருப்பலியானது 20.01.2016 அன்று நண்பகல் 11.30 மணியளவில் நடைபெருகிறது.
ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரனின் திருத்தலைமுடி 20.01.2016 அன்று இரவு முத்தி செய்ய தரப்படும்.
இவ்விழா நிகழ்வுகளில் கலந்து கொண்டு பாதுகாவலரின் அருகிருப்பினைப் பெற அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
அழைப்பில் மகிழும்
வேம்பாற்றுவாசிகள்