வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Monday 11 January 2016

சந்த செபஸ்தியார் பேரில் விருத்தாப்பா
வேம்பாறு சித்திரக்கவி முத்தையா ரொட்ரிகோ அவர்களின்
எழுத்தோவியத்தில் உருவாகிய 
சந்த செபஸ்தியார் பேரில் விருத்தாப்பா



வரத்தினால் உயர் மாதவனே உனை

வண்கணாளர் வளைந்து வளைந்து கூர்ச்

சரத்தினால் எய்ய உன் திருமேனியில்

தைத்த அம்புகள் தாம் எங்கள் காவலாம்



வருத்தமாக வரும்பிணி கொள்ளைநோய்

வந்தடர்ந்து வலிமை செய்யாமலே

துரத்துவாய் சந்த செபஸ்திய நேயனே உன்

துணைப் பதத்தில் அடைக்கலம் நாங்களே!
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com