அகநானூறில் பரதவர்
அகநானூறில் பரதவர் பற்றிய வரலாற்று சான்றுகள்
10 நெய்தல்
[இரவுக்குறிவந்து தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டு நின்று தோழி சொல்லியது.]
வான்கடற் பரப்பில் தூவற் கெதிரிய
மீன்கண் டன்ன மெல்லரும் பூழ்த்த
முடிவுமுதிர் புன்னைத் தடவுநிலை மாச்சினைப்
புள்ளிறை கூறும் மெல்ல புலம்ப.நெய்தல் உண்கண் பைதல கலுழப்
பிரிதல் எண்ணினை யாயின் நன்றும்
அரிதுதுற் றனை யாற் பெரும உரிதினிற்
கொண்டாங்குப் பெயர்தல் வேண்டுங் கொண்டலொடு
குரூஉத்திரைப் புணரி உடைதரும் எக்கர்ப்.
பழந்திமில் கொன்ற புதுவலைப் #பரதவர்
மோட்டுமணல் அடைகரைக் கோட்டுமீன் கொண்டி
மணங்கமழ் பாக்கத்துப் பகுக்கும்
வளங்கெழு தொண்டி யன்ன இவள் நலனே.
-அம்மூவனார்.
(சொ - ள்.) 1-4. வான் கடல் பரப்பில் தூவற்கு எதிரிய-பெரிய கடற்பரப்பில் எழும் திரைத் திவலைகளை ஏற்றுக் கொண்ட, மீன் கண்டன்ன - விண்மீனைக் கண்டாலொத்த, மெல் அருபு ஊழ்த்த - மெல்லிய அரும்புகள் மலர்ந்த, முடிவுமுதிர் புன்னை - முடம் பட்ட முதிர்ந்த புன்னைமரத்தின், தடவுநிலை மாசினை - பெரிய நிலையை
அகம், புறம் என்னும் பொருட் பாகுபாடு பற்றித் தொகுக்கப் பெற்றவை அகநானூறும் புறநானூறும். இவ் இரண்டும் அகவற் பாக்களினால் இயன்றவை. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகியவை அகப்பொருள் பற்றியவையே ஆயினும், எட்டுத்தொகை நூல்களுள் ‘அகம்’ என்னும் பெயரையே இத் தொகைநூல் பெற்றிருத்தல் இதன் சிறப்பு நோக்கி எழுந்தது போலும். இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் எட்டுத் தொகை நூல்களைக் கூறுமிடத்து, ‘நெடுந்தொகை நானூறு, குறுந்தொகை நானூறு. . .’ என இந் நூலை முதலாவதாக எடுத்து ஓதுதலும் நோக்கத் தக்கது.