வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Monday 27 November 2017

அகநானூறில் பரதவர்

அகநானூறில் பரதவர் பற்றிய வரலாற்று சான்றுகள். 


30 நெய்தல்

நெடுங் கயிறு வலந்த குறுங் கண் அவ் வலை,

கடல் பாடு அழிய, இன மீன் முகந்து,

துணை புணர் உவகையர் #பரத மாக்கள்

இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி,


5
உப்பு ஒய் உமணர் அருந் துறைபோக்கும்

ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ,

அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கி,

பெருங் களம் தொகுத்த உழவர் போல,

இரந்தோர் வறுங் கலம் மல்க வீசி,


10
பாடு பல அமைத்து, கொள்ளை சாற்றி,

கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவ!

பெருமை என்பது கெடுமோ ஒரு நாள்

மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத்

தண் நறுங் கானல் வந்து, ''நும்


15
வண்ணம் எவனோ?'' என்றனிர் செலினே?

பகற்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்

30 உரை

(சொ - ள்.) 1-11. நெடுங் கயிறு வலந்த குறுங்கண் அவ்வலை-நெடிய கயிறு கட்டப்பெற்ற குறிய கண்களையுடைய அழகிய வலையில், கடல் பாடு அழிய இனமீன் முகந்து - கடலின் பெருமை குன்ற இனமாகிய மீன்களை முகந்து, துணை புணர் உவகையர் பரத மாக்கள் இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி - துணையுடன் கூடிய மகிழச்சி யுடையராய் இளையரும் முதியருமாய நுளையர்கள் சுற்றத்துடன் நெருங்கி, உப்புஒய உமணர் அருந்துறை போக்கம் ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ - உப்பினைச் செலுத்தும் உப்பு வாணிகர் அரிய துறைகளிற் செலுத்தும் சகடுகளிற் பூட்டப்பெற்ற வலிய எருதுகளை யொப்பக் கூடி, அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கி - நுண்மணல் செறிந்த பக்கத்துள்ள கரையில் ஆரவாரம் பெருக இழுத்து, பெருங் களம் தொகுத்த உழவர் போல - பெரிய களத்திலே நெல்லைத் தொகுத்த உழவர்களைப் போன்று, இரந்தோர் வறுங் கலம் மல்க வீசி - தம்மிடம் வந்து இரந்தோர்களுடைய வறிய கலன்கள் நிறைய அம் மீன்களைச் சொரிந்து, பாடு பல அமைத்துக் கொள்ளை சாற்றி - எஞ்சிய வற்றைப் பல கூறுகளாகச் செய்து விலைகூறி விற்று, கோடு உயர்திணி மணல் துஞ்சும் துறைவ - கரை உயர்ந்த திண்ணிய மணற் பரப்பில் தூங்கும் துறைவனே;
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com