வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Sunday 26 November 2017

உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களுக்காக ஓதுதல்

வேம்பாற்றில் காலம் காலமாக மரித்த விசுவாசிகளுக்காக நவம்பர் மாதம் ஒவ்வொரு திங்கள் கிழமை அன்றும் ஊர் கூடி வந்து ஊர் சுற்றி செபிக்கப்படும் செபம்....

உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களுக்காக ஓதுதல் 



நமதாண்டவராயிருக்கிற சேசுக் கிறிஸ்துவின் பேரில் பக்தி விசுவாசமுள்ள உத்தமக் கிறிஸ்தவர்களே! உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருக்கிற ஆத்துமாக்கள் அவதி குறைந்து நித்திய ஆறுதல் அடையத்தக்கதாகவும், கத்தோலிக்கு ரோமன் திருச்சபையானது கால காலத்திலும் வர்த்தித்து வரத்தக்கதாகவும், ஈனப் பசாசினுடைய சுவாமி துரோகத்திற்கு ஏதுவாயிருக்கிற நீசப்பாவிகள் பிரமையாகிற தங்கள் தப்பிதத்தை விட்டு ஆரோசித்து பரம ஞான சுகிர்த வழியிலே திரும்பத்தக்கதாகவும், அர்சிஷ்ட பாப்பானவருடைய சுகிர்த நற்கருத்துக்கள் நிறைவேறத்தக்கதாகவும், சுவாமியைப் பார்த்து மிகுந்த பக்தியோடே பரலோக மந்திரம் ஓதிக் கொள்வோம்..... (பரலோகத்தில்.........)

பாவிகளாயிருக்கிற நாமெல்லோரும் பாவத்தின் மயக்கமென்கிற நித்திரை செய்யாமலும் அந்த நித்திரை நேரத்தில் சாவானது நம்மைத் தெரிந்து கொள்ளாமலும், சர்ப்பன பயபக்தியாய் விழித்துக் காக்கக் கடவோம். அதேனென்றால் சாவு வருவது சத்தியம், ஆவி இருப்பது அசத்தியமாகுமே. ஐயையோ எனது பிறவிகளே இன்றைக்கோ இருக்கிறோம், நாளைக்கோ மரிக்கிறோம் என்று ஸ்திரமாக நினைத்துக் கொள்கிறது. ஆ! என் சர்வேஸ்ரா மோட்சமென்கின்ற சம்பாவனையும், நரகமென்கின்ற ஆக்கினையும் இவ்விரண்டும் சதாகாலத்திலும் அருதிகளுக்கு மாத்திரமே நிச்சயமாயிருக்கிறது. ஐயையோ, அந்நேரம் மகா கடினதோடும், உக்கிரமத்தோடும் சுமுத்திரையான கணக்குக் கேட்கும் திருநடுவிலே நீங்களும், நாங்களும் என்ன கணக்கு சொல்லப் போகிறோமோ என்றெண்ணி, இந்நேரமும், எந்நேரமும் முழுமனதோடு விதனப்பட்டு தபசு பண்ணக் கடவோம்.....

ஐயோ நீங்களும், ஐயோ நாங்களும் ஆண்டவருடைய திருநடுவிலே என்ன கணக்கு சொல்லப் போகிறோம்.....

சர்வேஸ்ரா சுவாமி, இரக்கமாக உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களுக்கு நித்திய ஆறுதலைக் கொடுத்தருளும் சுவாமி.... 

சர்வேஸ்ரா சுவாமி, இரக்கமாக உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களின் வேதனை குறைய அனுகிரகம் செய்தருளும் சுவாமி......

சர்வேஸ்ரா சுவாமி, இரக்கமாக உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களுக்கு நித்திய மோட்ச பாக்கியத்தைக் கொடுத்தருளும் சுவாமி.....

எங்கள் சிநேகிதரே! நீங்களாயினும் எங்கள் பேரிலே இரக்கமாயிருங்கோ.... இரக்கமாயிருங்கோ........ எப்போதும் எப்போதும் உள்ள ஆறுதலை, உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களுக்கு கொடுத்தருளும் சுவாமி.......
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com