வேம்பாற்றுறையின் பெருவிழா அழைப்பிதழ்
எழு கடற்றுறையின் முதற்றுறையாம் வேம்பாற்றுறையில் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் திவ்ய இஸ்பிரீத்துசாந்து சர்வேஸ்பரனின் மகோற்சவப் பெருவிழா வரும் மே மாதம் 20 ஆம் திகதி அன்று மகா கெம்பீரத்துடன் கொண்டாடப்படுகிறது.
19 திகதியன்று மாலை 6.30 மணியளவில் கெம்பீர மாலையாராதனையும்,
20 ஆம் திகதியன்று ஆடம்பர கூட்டுத் திருப்பலியும்,
அதைத் தொடர்ந்து பங்கு மக்கள், பங்கு சுவாமிகளை சந்திக்கும் 'சந்திப்பு' நிகழ்ச்சியும்,
அன்று மாலையில் திவ்ய சர்ப்பிரசாத பவனியும் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுவதுடன், இதில் அனைத்து மக்களும் பக்தி சிறப்புடன் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
அழைப்பில் மகிழும்
வேம்பாற்றுவாசிகள்