ஆர்மீனியர்களுக்கு அடைக்கலம் தந்த பரதவர்கள்:
துருக்கியின் அண்டை நாடான ஆர்மீனியா உலகின் முதல் கிறிஸ்துவ நாடாகும். இவர்கள் சார்ந்திருக்கும் கிறிஸ்தவ பிரிவின் பெயர் "ஆர்மீனிய அப்போஸ்தலிக் திருச்சபை" என்பதாகும். கிபி ஏழாம் நூற்றாண்டில், முகமதியர்கள் ஆர்மீனிய தேசத்தின் மீது படையெடுத்து வந்து, அந்நாட்டை பிடித்து கொண்டனர்.
ஆர்மீனியாவை கைப்பற்றி இருந்த முகமதியர்கள், அங்குள்ள கிராமங்களை தீக்கிரையாக்கி, ஆயிரமாயிரம் ஆயிரமாயிரம் பூர்வகுடி ஆர்மீனியர்களை படுகொலை செய்தனர். ஆர்மீனியாவில் உள்ள ஒரு நகரில் மட்டும் 12,000 மக்களை படுகொலை செய்ததுடன் 35,000 மக்களை அடிமைகளாக பிடித்து சென்றனர் முகமதியர்கள்.
முகமதியர்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு தப்ப ஆர்மீனியர்கள் பலர் உலக முழுவதும் பல நாடுகளில் சென்று தஞ்சமடைந்தனர். இப்படி உலக முழுவதும் தஞ்சமடைந்த ஆர்மீனியர் சிலருக்கு கன்னியாக்குமரி பரதவர்கள் தங்கள் நிலத்தில் அவர்களுக்கு அடைக்கலம் தந்துள்ளனர். இங்கு அவர்கள் தங்களுக்கென்று தேவாலயம், குடியிருப்புகள் அமைத்து பரதவர்களோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
கி.பி.1514ல் இந்தியா வந்திருந்த "டுவார்டே பார்போசா" என்ற போர்சுகீசிய பயணி தமது நூலில் கன்னியாகுமரியில் பரதவர்களோடு வாழ்ந்து வந்த ஆர்மீனியர்களை பற்றி குறிப்பிடுகிறார்.
அவற்றுள் சில.....
* பண்டைய காலத்தில் ஆர்மீனியர்கள் கட்டியிருந்த தேவாலயம் ஒன்று கன்னியாகுமரியில் உள்ளது.
* இன்றும் அந்த தேவாலயத்தில், சிலுவைகள் பொறுத்தப்பட்டுள்ள பலிபீடம் முன்பு ஆர்மீனிய இன குருக்கள் பலிபூசை நிறைவேற்றி வருகின்றனர்.
* கன்னியாகுமரியில் உள்ள இந்த ஆர்மீனியர்களின் தேவாலயத்தை கடந்து செல்லும் மாலுமிகள் அங்கு சென்று காணிக்கை அளிப்பது வழக்கமாக இருக்கிறது.
* இவ்வழியாக செல்லும் போர்ச்சுகீசியர்களும், இந்த ஆர்மீனிய தேவாலயத்தில், ஆர்மீனிய குருக்களால் நிறைவேற்றப்படும் திருப்பலி பூசையில் பங்கெடுக்கின்றனர்.
*கன்னியாகுமரியில் ஆர்மீனிய தேவாலயத்துக்கு அருகாமையில், அவர்களுடைய பல கல்லறைகள் காணப்படுகிறது. அவற்றில் ஒரு கல்லறை மீது இவ்வாறு லத்தீன் மொழியில் பொறிக்கப்பட்டள்ள எழுத்து
"Hic jecet Catuldus Gulli fillius qui obiit ano"
கன்னியாகுமரியில் பரதவர்களோடு வாழ்ந்து வந்த ஆர்மீனியர்கள் பிற்காலத்தில் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.
யூகப்படி, கிபி1544 ஆம் ஆண்டு நடைபெற்ற வடுகர் படையெப்பில் கன்னியாகுமரி நகரம் தாக்குதலுக்கு உள்ளாகி சூறையாடப்பட்டது. இச்சமயம் ஆர்மீனிய தேவாலயம் இடிக்க பட்டிருக்கலாம், அதன்பிறகு ஆர்மீனியர்களும் பாதுகாப்பான இடம் தேடி போயிருக்கலாம் என்பதே.
_______________________________________________
ஆதாரம்:-
The Book Of Duarte Barbosa, Vol 2, Pg.102, 103
- UNI
கிமு மூன்றாம் நூற்றாண்டில் வடவடுகரை வீழ்த்த சோழருக்கு படையுதவி செய்த பரதவர்கள்:
பிந்துசாரர் என்பவர் மௌரியப் பேரரசின் இரண்டாவது மன்னர் ஆவார். கி.மு. 297 முதல் கி.மு 273 வரையிலான கி.மு மூன்றாம் நூற்றாண்டுக் காலத்தில் இவர் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இவர் சந்திரகுப்த மௌரியரின் மகனும் மாமன்னர் அசோகரின் தந்தையுமாவார். பிந்துசாரரின் ஆட்சியானது தெற்கே தமிழகத்தின் வட எல்லை வரை இருந்தது.
தமிழக அரசுகளை கைப்பற்ற விரும்பிய பிந்துசாரர் தனது சாம்ராஜ்ஜியத்தில் மேற்கு தக்காணத்தில் வாழந்த கோசர்களை தமிழகத்திற்குள் அனுப்பி வைக்கிறார். இந்த கோசர்கள் முதலில் தமிழகத்தின் வடமேற்கு எல்லை வழியாக நுழைந்து துளுவ நாட்டை அடைந்தனர்; அந்நாட்டரசனான நன்னன் என்பவனைக் காட்டிற்கு விரட்டினர்; அவனது பட்டத்து யானையைக் கொன்றனர், அவனது காவல் மிகுந்த பாழி நகரை வென்று துளு நாட்டை கைப்பற்றினர்.
(குறிப்பு: கோசர் என்ற இனக்குழு கோவாவிற்கு அருகிலுள்ள கோலாப்பூரை பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஆகலாம் என்று சிலர் கருதுகிறார்கள்.)
நன்னனை வென்ற கோசர்கள், சேரன் தானைத் தலைவனும் முதிரமலைத் தலைவனுமான பிட்டங் கொற்றன் என்பவனைத் தாக்கினர். இதன்பிறகு கோசர்கள் சோழ நாட்டை அடைந்து அழுந்துரர் வேளான திதியனைத் தாக்கினர்; திதியனோ கடும்போர் புரிந்து பகைவரைப் புறங்காட்டச் செய்தான். பின்னர் அக்கோசர்கள் மோகூரைத் தாக்கினர். மோகூர் பணியமறுத்தது.
(குறிப்பு: இம்மோகூர் தென் ஆர்க்காட்டுக் கோட்டத்தில் ஆத்தூர்க் கணவாய்க்கு அண்மையில் உள்ள மோகூராக இருக்கலாம் என்று அறிஞர் கருதுகின்றனர்.)
அப்பொழுது மோகூர் பணியாததை குறித்து கேள்வியுற்ற வம்பவடுகரான வம்பமௌரியர்கள் பெரும்படையுடன் வந்து துளு நாட்டில் அமைந்துள்ள பாழி கோட்டையில் தங்கியிருந்து தமிழகத்தின் மீது படையெடுக்க தயாராகின்றனர். பின்பு அங்கிருந்து வம்பவடுகர், வடவடுகர் என்றெல்லாம் அறியப்பட்ட வம்பமௌரியர்கள் திருவேங்கடத்திற்கு வடக்கில் வாழ்ந்த ஆந்திர வடுகர் துணையுடன் தமிழகத்திற்குள் நுழைந்து மேற்கூறிய மோகூரை தாக்கினர்.
தமிழகத்திற்கு வந்திருந்த பேராபத்துகளை உணர்ந்த பரதவர்கள் வம்பவடுகரான வம்பமௌரியர்களை விரட்டியடிக்க சோழன் இளஞ்சேட்சென்னிக்கு ஆதரவாக களமிறங்கினர். சோழன் இளஞ்சேட்சென்னி தன்பக்கம் அணி சேர்ந்த தென்பரதவரை கொண்டு தென் ஆர்க்காட்டுக் கோட்டம் வரை வந்திருந்த வடவடுகரான வம்பமௌரியர்களுக்கு எதிராக பல போர்கள் புரிந்து அவர்களை தோல்வியுற செய்தார் .
இதன்பிறகு வம்பவடுகரான வம்பமௌரியர்கள் துளு நாட்டில் அமைந்துள்ள காவல் மிகுந்த பாழி நகர் கோட்டைக்கு பின்வாங்கினர். சோழன் இளஞ்சேட்சென்னி தென்பரதவர் துணையுடன் பாழி நகர் வரை பகைவரைத் தொடர்ந்து சென்று, வம்பவடுகர் தங்கி இருந்த பாழியை எறிந்து, வம்பவடுகரான வம்பமௌரியர்கள் தலைகளை அறுத்து அழித்தான்.
காவல் மிகுந்த ‘பாழி’யை வென்ற காரணத்தினால் இச்சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி எனப்பட்டான். சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி தென்பரதவரை கொண்டு வடவடுகரான வம்பமௌரியர்களை வென்றதை பற்றி புறநானூறு பாடல் 378, இவ்வாறு பதிவு செய்கிறது...
"தென்பரதவர் மிடல் சாய, வடவடுகர் வாள் ஓட்டிய"
இது ஊன்பொதி பசுங்குடையார், சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னியை பாடியது.
००००००००००००००००००००००००००००००००००००००
சிலர் அப்பாடலில் வரும் "தென்பரதவர் மிடல் சாய" என்பதை சோழன் தென் பரதவரின் வலிமையை சாய்த்தார் என்று தவறாக பொருள் கூறி திரித்து வருகின்றனர்.
சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னிக்கும், தென்பரதவருக்கும் பகை இருந்ததாகவோ, தென்பரதவர் அவ்வரசனுக்கு தொல்லை கொடுத்து வந்ததாகவோ எந்த சங்க பாடல்களும் பதிவு செய்யவில்லை. அப்படி இருக்க இந்த புறநானுற்று பாடலில் வரும் சாய என்பதை தவறாக பொருள் கூறி திரிக்கும் நபர்களுக்கு மாங்குடி மருதனார் இயற்றிய மதுரை காஞ்சியில் இருந்து பாடல் வரி சிறந்த எடுத்துக்காட்டாகும்.
"இரு பெரு வேந்தரொடு வேளிர் சாய பொருதவரைச் செருவென்றும்"
பொருள்: வேந்தர்(சேரர், சோழர்) பக்கம் வேளிர்கள்(ஐவர்) நின்ற போதிலும் பாண்டிய நெடுஞ்செழியன் அவர்களை வெற்றி கொண்டார் என்பதே அதன் அர்த்தம். அதேபோல் தான் "தென்பரதவர் மிடல் சாய வடவடுகர் வாள் ஓட்டிய" என்பதும், தென்பரதவர் சோழன் இளஞ்சேட்சென்னி பக்கம் அணிசேரவே, அவர் அவர்கள் உதவியுடன் வடவடுகரான வம்பமோரியர்களை வாட்போரில் வென்றார் என்பதே அதன் பொருள்.
- UNI
வடவடுகரை வீழ்த்த உதவிய பரதவர்
Dev Anandh Fernando
07:11

AFTER an interval of more than twenty-seven years, the pearl-oyster (Avicula fucafa, Gould) has produced pearls off the Madras coast of the Gulf of Manaar, in sufficient quantities to be worth the expense of fishing. The last fishery of the Tuticorin banks took place in the years 1860-62, and resulted in a net profit to Government of Rs. 3,79,297 ( 37,929 at par). In olden times, when Tuticorin was in the possession of the Portuguese and Dutch, the fishery used to be carried on much more frequently than it is at the present day, and a difficult problem, which remains to be solved, is, What are the causes of the decline of the pearl fishery, and how can the Tuticorin banks be made to yield a more frequent harvest? Whether the baneful influence of the Mollusca known locally as sooram and killikov (Modiota sp., and Avicula sp.), the ravages of the file-fishes (Balistes) and Rays (Trygon, &c.), poaching, or currents, are responsible for the non-production of an abundant crop of adult pearl-producing oysters during more than a quarter of a century, it would be impossible to decide until our knowledge of the conditions under which the pearl- oysters breed, develop, and live, is more precise than it is at present.
Superstition, as of old, still clings to the native divers ;
and 1 read, in a recent issue of the Times of Ceylon , that
“ at present there are said to be 1 Jo boats, with their full
complement of men, all waiting at Kilakarai in readiness to proceed to Dutch Bay, but they will not leave until
after some festivities which occur on the 15th instant,
when it is customary for them to pray for protection from
sharks, &c., while engaged in diving.” I can find no
record of a diver being killed, in recent years, by
a shark. But a case is cited, in which a native died
at Tuticorin from the poisonous stings of a jelly-fish.
At certain seasons of the year, jelly-fish are very abundant in the Tuticorin harbour, and a resident merchant
tells me that, so great is the dread of them among the
natives, that he has known coolies, engaged in carrying
loads of palmyra jaggery through the shallow water to
the cargo-boats, refuse to enter the water till a track
free from jelly-fish was cleared for them by two canoes
dragging a net between them.
The pearl-bank which is being fished at the present
time, is known as the “ Tholayiram Par,” which covers
an area of about five square miles, and lies more than ten
miles east of Tuticorin, in from 8 to 10 1/2 fathoms. The
following record, by the Superintendent of the Pearl
Banks, shows the condition of this bank as regards oyster-supply from the year 1560 to 1884, the oysters
which are now being obtained having been first noticed
at an early stage of growth in the latter year :—
April 1560.—Plenty of oysters three and a half years old.
November 1861.—Oysters scarce; nearly all gone.
April 1563 .—Sooram and killihoy with some young oysters.
November 1865 to April 1869.—Blank.
March 1571.—Five oysters with a quantity of sooram.
February 1872.—Five oysters of three years old found.
May 1873.—Three oysters found.
January 1875.—Three oysters of two years old found.
March 1876.—North part blank.
April 1877.—South part blank.
April 1878.—Thickly stocked with oysters one year old.
May 1579.—Blank.
May 1850.—Blank.
May 1881. — Some oysters mixed with killihoy.
May 1552.—No oysters; dead shells and sooram.
April 1883.—Three oysters found.
March 1584.—Plenty of oysters one year old; clean and
healthy.
This record shows very clearly how capricious is the
life of the pearl-oyster, how easily the hopes of a productive bank may be banished (witness the total disappearance of the oysters in 1879), and points to the evil
influence of sooram, which, spreading in dense masses
along the rocky bottom, crowds out the young pearl-
oysters.
Since 1584, the “Tholayiram Par” has been carefully
watched, and the growth of the oyster, from the young to
the adult stage, has steadily advanced.
In November last, 1
5,000 oysters were taken from
bank for the purpose of valuation by pearl-merchants, and
the product was valued at Rs. 13,12,8 per 1000 oysters.
The shells of the oysters which are now being brought
in daily are in crusted with various marine animals
(Sponges, Polyzoa, &c.), and enveloped in masses of
delicate Algee ; but, among very many thousands which
I have examined, I have met with no sooram , and only
very few specimens of killikoy. The oysters are living
either on sand, by which they are partially buried, or on
coral rocky ground (Turbinaria, Montipora, Porites, &c.),
and are often brought up attached by their bussus to dead
branches of Madrepores, or Melobesian nodules. Large specimens of the big anai mullu shanku (Murex sp.) are
frequently brought up by the divers, and the tough
animal, when removed from the shell, is served up for
the evening meal.
The improvised camp, from which the fishery' is conducted, is situated on the coast about two miles north
of Tuticorin, and, on the way thither across a long
stretch of sand, the kilns in which coral and shells are
converted into chunam are passed, and the chank
godowns, in which the chunks (Turbinetla rapa), whose
shells afford an annual source of revenue to Government,
are.stored, the animal matter being got rid of by the combined influence of insects and bacteria. The camp, which
is built of bamboo and palmyra, is made up of residential
huts, tents, and bungalows, offices (treasury, dispensary,
He.), sheds called kottoos, in which the oysters are
counted and submitted to the unsavoury washing process,
and the native basar, gaily decorated with flags, in which
the product of the oysters is exposed for sale.
As soon after midnight as the land wind sets in, the
signal gun is fired on the shore by the native beach
master, and, amid a good deal of shouting, all sail is set,
and the fleet, which is unfortunately composed of less
than fifty boats, with its complement of divers, makes for
the bank, which should be reached by daylight. The
hoisting of a flag on the schooner which is stationed on
the bank is the signal for the day’s fishery to commence.
The limits of the entire bank are marked out by' buoy's,
and the divers are supposed only to work, on any given
day', over an area which is also indicated by buoys ; but,
owing to adverse winds and other causes, it is sometimes
found impossible to keep the boats within the prescribed
area. A stone, to which a rope is attached, is put over
the boat’s side, and a basket or net fastened in a similar
way. These ropes the diver takes in one hand, and,
placing one foot on the stone, he draws in a deep breath,
closing his nostrils with his other hand ; or the nose is
inserted into a clip, which tightly' compresses the nostrils.
At a given signal the ropes are let go, and the diver
descends to the bottom. The slacking of the ropes shows
that this is reached. The diver then lets go the stone,
which is drawn up to the surface, and, after filling the
basket or net with oysters, he ascends to the surface to
regain his breath. The divers work in couples, two to
each stone, and the oysters brought up are kept carefully
separated from those of other divers. The other day
237,000 oysters were brought up by 454 divers, in about
5 A hours, giving an average of 524 oysters to each
diver. A European diver is engaged experimentally
on the bank, but his greatest haul in a day' has been
only 1500 oysters.
The diving operations cease for the day about 1.30 p.m.,
and the boats start for the land, the signal gun being
fired and the Union Jack run up on the flagstaff as soon
as they are sighted. On reaching the shore the boats are
secured, the oysters carried to the shed, rapidly counted,
and divided into three heaps. The superintendent of the
fishery, or some other responsible officer, touches with his
stick one of these heaps, which becomes the property of
the divers, who receive a pass and carry their hard-
gained earnings outside the shed, where a swarming
crowd of natives is waiting, eager to try their luck by
purchasing a few oysters at a rate varying from about
fifteen to forty for a rupee. Until long after dark crowds
of natives may be seen squatting in circles on the sand,
opening .their oysters and carefully examining the flesh
with a knife in search of even the smallest pearls. The
utmost good temper prevails, and the possessor of only a
few seed pearls is, apparently, perfectly happy. The two
heaps which are left by the divers constitute the Government share, and are carefully counted by' Government
coolies. The beating of the tom-tom then announces
that the Government auction is about to commence.
The oysters are put up for sale in lots of 1000, and the purchaser has the option of taking a certain number of
thousands at the same rate. As soon as the purchase
money has been paid, the oysters are handed over to the
purchaser, who sends them off by train, or deposits them
in the kottoo at the northern end of the camp, where
various natural agents bring about the requisite process
of dissolution of the animal matter. After some days
the residue is carefully washed, the prevailing maggots
skimmed off, and a careful search made for the pearls.
Pearl Camp. EDGAR. THURSTON.
© 1889 Nature Publishing Group
THE TUTICORIN PEARL FISHERY
Dev Anandh Fernando
08:39

பாண்டியபதி ராஜாவின் அரசவையில் பாடப்பட்ட அதிரியர் காவியம்:
பரதவர் நாட்டு ஏழுகடற்றுறையில் ராஜா டான் எஸ்தேவான் டி குருஸ் - (1680 - 1686) என்ற பாண்டியபதிக்கு பிறகு அரியணையேறிய ராஜா டான் கேபிரியேல் டி குரூஸ் கோமஸ் (1686-1700) என்ற பாண்டியபதி சிலகாலம் பழைய காயலில் வாழ்ந்து வந்தார்.
இம்மன்னரின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது அரசவையின் முதன்மை புலவரான ''மனுவேல்'' என்பவர் புனித அதிரியனின் வாழ்க்கை வரலாற்றை கிபி1699 ஆம் ஆண்டில், காவியமாக பாடியுள்ளார்.
யார் இந்த புனித அதிரியன்?
ரோமை பேரரசனான கலேரியஸ் மாஸ்சிமீனியன்(கிபி305-311) என்பவர் இன்றைய துருக்கி நாட்டின் இஸ்தான்புல் மாநகருக்கு அருகில் உள்ள நிக்கோமீதியாவில் தமது அரசவையை வைத்திருந்தார். இவரது அரசவை மெய்காப்பாளராக "அதிரியன்" இருந்து வந்தார். அதிரியனின் மனைவி நத்தாலியா ஒரு கத்தோலிக்க பெண். அதிரியனும் சிலகாலம் கழித்து கத்தோலிக்கரானார்.
ரோமை பேரரசன் கலேரியஸ் மாஸ்சிமீனியன் தமது அரசவையில் மெய்காப்பாளராக இருந்த "அதிரியன்" கத்தோலிக்கரானதை கேள்வியுற்று அவரை சிறையில் அடைத்து துன்புறுத்தி கி. பி. 306 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி அவரை கொலை செய்வித்தார். இந்த அதிரியனின் வாழ்க்கை வரலாற்றையே பாண்டியபதி ராஜாவின் முதன்மை அரசவை புலவர் "மனுவேல்" காவியமாக பாடியுள்ளார்.
பாண்டியபதி ராஜாவின் அரசவையில் பாடப்பட்ட புனித அதிரியனின் காவியமானது பிற்காலத்தில் அதாவது கி. பி. 1913 ஆம் வருடம் டிசம்பர் 16 ஆம் தேதி சனிக்கிழமை அன்று "அர்ச்சியசீஷ்டர்" என்பவரால் அம்மானையாக மாற்றப்பட்டது.
அதிரியன் அம்மானையில் நான் மேற்சொன்ன ராஜா டான் கேபிரியேல் டி குரூஸ் கோமஸ் (1686-1700) என்ற பாண்டியபதியை குறிக்க அவருடைய முன்னொட்ட பட்டபெயரான டான் என்ற பெயரை பயன்படுத்தியுள்ளார் ஆசிரியர்.
இந்த டான் பட்டம் பாண்டியபதிகளுக்கு ஏற்பட்ட வரலாறு:-
டான் பட்டம் என்பது போர்ச்சுகல் மன்னர்களால் ராஜவம்சத்து பிரபுக்களுக்கு வழங்கப்படும் ஒரு பட்டமாகும். ஆங்கிலத்திலும் டான் என்று அழைக்கப்படுகிறது.
ஆங்கிலேய அரசு அதிகாரியான சைமன் காசி தமது குறிப்பில்......
"பாண்டியபதிகளுக்கு போர்ச்சுகல் பேரரசு டான் பட்டம் வழங்கியது" என்று குறிப்பிடுகிறார்.
ஆங்கிலேய அரசு அதிகாரியான எச். ஆர். பட்டே தமது "மெட்ராஸ் டிஸ்ட்ரிக்ட் கெசட்டியர் திருநெல்வேலி" என்ற நூல் பக்.122 ல்....
"போர்ச்சுகல் மன்னர்களின் கோவா ஆளுநர்கள் எல்லோருமே தங்களுடைய எழுத்துக்களில் பாண்டியபதிகளை குறிக்க டான் என்ற அவர்களுடைய முன்னொட்ட பெயரையே பயன்படுத்தியுள்ளனர் " என்று பதிவு செய்கிறார்.
__________________________________________________
Foot Notes:-
1.Madras District Gazetteer tinneveli by H. R. Patte Vol 1 Pg. 122
2.Remarks on the origin and history of parawas, by SIMON CASIE CHITTY, maniyagar of puttalam, ceylon, The Journal of Royal Asiatic Society. pg 132
- UNI
அதிரியர் அம்மானை
Dev Anandh Fernando
07:58

பரவர்கள் வசமிருந்த கண்டி பஜார்:
"ஃபெர்னாவோ டி குயீரோஸ்" என்ற போர்சுகீசிய பயணி, கிபி1653-1688 இடைப்பட்ட ஆண்டுகளில் இந்தியா மற்றும் இலங்கைக்கு வந்திருந்தார். இவர் தமது நூலில் இலங்கையின் கண்டி இராச்சியத்தின் தலைநகரான கண்டி நகரை பற்றி குறிப்பிடுகிறார்.
அவற்றுள் சிலவற்றைக் காண்போம்....
"கண்டி நகரம் நன்கு கட்டப்பட்ட வீடுகளும், சுத்தமான மற்றும் அலங்கரிக்கப்பட்ட தெருக்களையும் கொண்டிருந்தன. இந்நகரில் உள்ள கட்டடங்கள் கற்களால் கட்டப்பட்டு, மேலே மூங்கில் மற்றும் பிரம்பு இலைகளால் மூடப்பட்டுள்ளன.
கண்டி ராஜாவின் அரண்மனை மற்றும் புத்த சமய கோவில்களின் மேற்கூரையில் செம்பு, வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களால் பூசப்பட்டுள்ளது. மொத்தம் 2,500 பேர் கண்டி நகரில் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுள் புத்த சமய குருக்கள், கண்டி ராஜா மற்றும் அவர் படை பிரிவு தளபதிகள் தவிர பெருபான்மையான மக்கள் பரவர்குல வணிகர்களும், மூரின அரேபியர்களுமே ஆகும்.
பரவர்குல வணிகர்களும், மூரின அரேபியர்களும் கண்டி நகரில் தங்களுடைய பொருட்களை விற்பனை செய்வதற்கென்றே அந்நகரில் தங்கள் வசமுள்ள வீதியான தெரு ஒன்றில் பெரிய பஜார் ஒன்றை அமைத்திருந்தனர்".
இன்றும் கண்டி நகரில் பரவர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
____________________________________________
ஆதாரம்:
THE TEMPORAL AND SPIRITUAL CONQUEST OF CEYLON BY FERNAO DE QUEYROZ,Vol 1 Pg.60
- UNI
கண்டி பரவர்கள்
Dev Anandh Fernando
08:10

டச்சு கிழக்கிந்திய கம்பெனியை பாண்டிய நாட்டிலிருந்து வெளியேற்றிய திருநெல்வேலி பரதவர்...!
மதுரையை ஆட்சிபுரிந்த விஜயநகர பிரதிநிதிகளில் கடைசியானவர் திருமலை நாயக்கர் (1623-59) என்பவர் ஆகும். இவர் பெயரளவில் மட்டுமே விஜயநகரத்துக்கு கட்டுப்பட்டவராக இருந்தார். தன்னரசு பெறும் நோக்கில்தான் இவருடைய அரசியல் நகர்வுகள் அனைத்தும் இருந்தன. திருமலை நாயக்கர் கி.பி. 1640 க்கு மேல் திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளியில் தனக்கு கீழ் ஆளுநர்களை நியமிக்க தொடங்குகிறார். திருநெல்வேலியின் முதல் ஆளுநராக நியமனம் பெற்றிருந்தவர் சிவனாண்டியப்ப பிள்ளை என்பவர் ஆகும். இவர் பாளையங்கோட்டையில் வாழ்ந்து வந்தார்.
திருமலை நாயக்கர் புதிய கடலாதிக்க சக்தியாக உருவெடுத்து கொண்டிருந்த டச்சுக்காரர்களுடன் கூட்டணி வைக்க வேண்டி கி.பி. 1644ல் தனது தூதுவரை அவர்களிடத்தில் அனுப்பி.... "தனது ஆளுகையின் கீழ் இருக்கும் காயல்பட்டினத்தில் குடியேறி தொழிற்சாலை, குடியிருப்புகள் எல்லாம் அமைத்து தனது பாதுகாப்பு பெற்று அங்கு தங்கியிருந்து தனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் வியாபாரம் செய்யும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்".
(குறிப்பு: திருநெல்வேலியில் பரதவ கிராமங்கள் திருமலை நாயக்கரின் அதிகாரத்திற்கு வெளியில் இருந்தபடியால் டச்சுக்காரர்களை முகமதியர் வாழ்ந்த காயல்பட்டினத்தில் குடியேறும்படி கேட்டு கொண்டார். காயல் பட்டினம் திருமலை நாயக்கரின் நேரடி ஆளுகையின் கீழ் இருந்தது. இங்கு நாராயண முதலியார் என்பவர் திருமலை நாயக்கரின் அதிகாரியாக இருந்தார்.)
டச்சுக்காரர்களும் திருமலை நாயக்கரின் அழைப்பை ஏற்று காயல்பட்டினத்தில் தொழிற்சாலை, குடியிருப்புகள் எல்லாம் அமைத்து பிறகு அத்திருமலை நாயக்கரின் பாதுகாப்பு பெற்றே அங்கு தங்கியிருந்து பாண்டிய நாட்டில் வணிகம் செய்து வந்தனர்.
டச்சுக்காரர்கள் தென்கடலில் ஆதிக்கம் பெற்று விட்டால் அது தங்களது வணிகத்திற்கு ஆபத்தென்று உணர்ந்த பரதகுல தலைவர்கள் கி.பி. 1646ல் சிவனாண்டியப்ப பிள்ளையை பார்க்க பாளையங்கோட்டைக்கு சென்றனர். அங்கு அவரை சந்தித்த பரதகுல தலைவர்கள் அவரிடம்...
"டச்சுக்காரர்களை நீங்கள் காயல்பட்டினத்தில் இருந்து வெளியேற்றினால் 9,000 கில்டர் பணம் உங்களுக்கு நாங்கள் தருகிறோமென்று கூறினர். ஆனால் சிவனாண்டியப்ப பிள்ளையோ அதனை ஏற்க மறுத்து விடுகிறார்".
(குறிப்பு: 1 கில்டர் = 10.16 கிராம் வெள்ளி காசு;)
இதன்பிறகு பரதகுல தலைவர்கள் திருமலை நாயக்கரை அவரது அரசவையில் பார்த்து பேச மதுரை சென்றனர். அங்கு அவரை சந்தித்த பரதகுல தலைவர்கள் அவரிடம்....
"டச்சுக்காரர்கள் உங்களுக்கு வாக்களித்திருந்தபடி போர் யானைகள் உட்பட இதுவரை எவ்வித அன்பளிப்புகளையும் உங்களிடத்தில் கொண்டுவரவில்லை, ஆதலால் உங்களுக்கு எந்த வகையிலும் பயன்படாத டச்சுக்காரர்களை காயல்பட்டினத்தில் இருந்து வெளியேற்றினால் உங்களுக்கு நாங்கள் 15,000 கில்டர் பணம் தருகிறோமென்று கூறினர். ஆனால் திருமலை நாயக்கரோ அதனை ஏற்க மறுத்து விடுகிறார்.
பேச்சுவார்த்தையின் மூலம் அமைதியாக தீர்வுகாண விரும்பிய பரதகுல தலைவர்களோ முடிவில் ஆயுத போருக்கு தள்ளப்பட்டனர். திருமலை நாயக்கரின் பாதுகாப்பு பெற்று தங்கியிருந்த டச்சுக்காரர்களை முற்றாக அழித்தொழிக்க பரதகுல தலைவர்கள் முடிவு செய்தனர்.
அடுத்த வருடம் கி.பி. 1647ல் திருநெல்வேலி ஆளுநராக பாளையங்கோட்டையில் ஆட்சிக்கு வந்த தேவ சத்திர அய்யர் என்னும் பிராமணர், பரதகுல தலைவர்களிடம் இருந்து 9,000 கில்டர் பணம் லஞ்சமாக பெற்றுக்கொண்டு காயல்பட்டினத்தில் திருமலை நாயக்கர் பாதுகாப்பு பெற்று தங்கியிருந்த டச்சுக்காரர்களை போட்டு தள்ளவும், அவர்கள் தொழிற்சாலை, குடியிருப்புகளை சூறையாடி அழிக்கவும் அனுமதி வழங்கினார்.
இதன்படி கி.பி. 1648 ஜூன் மாதம் தொடக்கத்தில் பரதகுல தலைவர்கள் டச்சுக்காரர்களுக்கெதிராக தங்களது படைகளை போருக்கு அணிவகுத்து காயல்பட்டினத்தை நோக்கி படையெடுத்து செல்கின்றனர். இதே சமயத்தில் கேரளாவிலிருந்து வந்து கொண்டிருந்த டச்சுக்காரர்களின் கப்பல் ஒன்று தண்ணீர் நிரப்புவதற்கு காயல் பட்டினத்தில் நங்கூரமிட்டனர்.
பரதகுல தலைவர்கள் தங்களுக்கு எதிராக பெரும்படையுடன் வந்து கொண்டிருப்பதை அறிந்த டச்சுக்காரர்கள் அலறியடித்து தண்ணீர் நிறப்பி கொண்டிருந்த கப்பலில் ஏற தொடங்கினர். காயல் பட்டினத்தை நெருங்கிய பரதவர்கள் டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் தொழிற்சாலை, குடியிருப்புகள் அனைத்தையும் சூறையாடி அழித்தனர்.
அதற்குள் டச்சுக்காரர்கள் கப்பலில் பத்திரமாக ஏறிவிட்டனர். கப்பல் பயணப்பட தொடங்கி இலங்கையின் காலி நகரின் துறைமுகத்தை வந்தடைந்தது. டச்சுக்காரர்கள் அதிஷ்டவசமாக பரதவரின் வாளுக்கு தப்பி பிழைத்தனர். டச்சுகாரர்களுக்கு பரதவர்களால் மொத்தம் 30,011 கில்டர் பணம் நஷ்டம் ஏற்பட்டது.
தனது பாதுகாப்பு பெற்று தங்கியிருந்த டச்சுக்காரர்கள் மீது ஆயுதமேந்தி போரிட்டு அவர்களை விரட்டியடித்த பரதவர்களை தண்டிக்க முடியாத திருமலை நாயக்கர் அதற்கு பதிலாக அப்பரதவர்களுக்கு உதவிய தேவ சத்திர அய்யரை ஆளுநர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு "வடமலையப்ப பிள்ளை" என்பவரை புதிய ஆளுநராக நியமிக்கிறார்.
ஆதாரம்:-
* Marcus P. M. Vink,Encounters on the Opposite Coast: The Dutch East India Company and the Nayaka State of Madurai in the Seventeenth Century Page 332-34.
* REPORT TO THE
GOVERNMENT OF MADRAS ON THE
INDIAN PEARL FISHERIES IN THE
GULF OF MANNAR
BY JAMES HORNELL, F. L.S.,
Maraine Biologist to the Government of Ceylon and Inspector of Pearl Banks. Pg 5
- UNI
டச்சு கிழக்கிந்திய கம்பெனியை அகற்றிய பரதவர்
Dev Anandh Fernando
07:21

பரவர்களின் ஊரிலே பிறந்த திருவாங்கூர் மகாராஜா:
உன்னி கேரள வர்மா(1718-24) என்ற வலுகுன்றிய அரசன் திருவாங்கூரில் ஆட்சிக்கு வருகிறார். இவர் காலத்தில், திருவாங்கூரில் இருந்த "எட்டு வீட்டு பிள்ளைமார்" என்று அழைக்கப்படும் எட்டு நாயர் சமூகத்து குறுநில தலைவர்களும் நாட்டின் அதிகாரங்கள் அனைத்தையும் தங்கள் வசம் வைத்திருந்தனர்.
கஜானாவுக்கு போதிய வருமானம் வராததால் உன்னி கேரள வர்மன் சிறிய அளவிலான படையே வைத்திருந்தார். உன்னி கேரள வர்மன் திருவாங்கூருக்கு வாரிசு வேண்டி கொளத்து நாட்டு ராஜவம்ச இளவரசியை தத்தெடுத்தார். தத்தெடுக்கப்பட்ட கொளத்தூர் நாட்டு இளவரசி திருவாங்கூர் ராஜ்ஜியத்தில் உள்ள அட்டிங்கல் அரண்மனையில் அட்டிங்கல் ராணியாக வாழ்ந்து வந்தார். இவர் அட்டிங்கல் மூத்த ராணி என்றும் அழைக்கப்படுகிறார்.
அட்டிங்கல் மூத்த ராணி கிளிமானூர் பிரபுவாகிய ரவிவர்மா கோயில் தம்புரானை திருமணம் செய்து கொண்டார். உன்னி கேரள வர்மன் எட்டு வீட்டு பிள்ளைமாருக்கு அஞ்சி நெய்யாற்றின்கரைக்கு சென்று வாழ்ந்தார். "எட்டு வீட்டு பிள்ளைமார்" அட்டிங்கல் மூத்த ராணியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினர்.
பாதுகாப்பான இடம் தேடி எங்கு செல்வதென்று தெரியாமல் அட்டிங்கல் மூத்த ராணி தமது கணவரான கேரளவர்மா கோயில் தம்புரானுடன் கடைசி நம்பிக்கையாக நூறு கிலோ மீட்டர் தொலைவில் கடற்கரையில் அமைந்துள்ள பரவர்களின் ராஜாக்கமங்களம் மாநகருக்கு சென்று அங்கு அவர்கள் அடைக்கலம் புகுந்தனர்.
பரவர்களின் இம்மாநகரில் தங்களுக்கென்று அரண்மனை அமைத்து இருவரும் கூடி வாழ்ந்து வருகையில் அங்கு அவர்களுக்கு கி. பி. 1724 ஆம் ஆண்டில் ஒரு ராஜ குமாரன் பிறக்கிறார். அவரே பிற்காலத்தில் நவீன திருவாங்கூரை உருவாக்கியவர் என்று அறியப்பட்ட புகழ்பெற்ற "கார்த்திகை திருநாள் ராமவர்மா".
ராமவர்மா (1758-1798) திருவாங்கூரில் ஆட்சிக்கு வந்த பிறகு தாம் பிறந்த ஊரான பரவர்களின் ராஜாக்கமங்களம் மாநகரத்துடனான உறவு முற்றிலும் விட்டு போனது. இதன் காரணமாக அவர் பிறந்த ராஜாக்கமங்களம் மாநகரின் அரண்மனையானது பராமரிப்பின்றி பழுதடைந்து இடிந்துவிழுந்தது. கி. பி. 1774-1789 இடைப்பட்ட ஆண்டுகளில் மலையாள தேசம் வந்திருந்த "பார்த்தலமேயுவின் பவுலீனுஸ்" என்ற ஆஸ்திரிய நாட்டு பயணி தமது நூலில்.. ...
"தற்போது திருவாங்கூரை ஆட்சி செய்துவருகின்றவர் (ராமவர்மா மகாராஜா) கடற்கரையில் அமைந்துள்ள (பரவர்களின்) ராஜாக்கமங்களம் மாநகரில் இருந்த முன்பு புகழ்பெற்று விளங்கிய அவர் குடும்பத்துக்கு சொந்தமான அரண்மனையில் பிறந்தவர் ஆவார். ராஜாக்கமங்களம் மாநகரில் இருந்த அவர் பிறந்த அரண்மனையானது இன்று இடிபாடுகளுடன் காணப்படுகிறது" என்று குறிப்பிடுகிறார்.
०००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००
Foot Notes:-
VOYAGE TO EAST INDIES BY FRA PAOLINO DA SAN BARTOLOMEO Pg.112.
- UNI
பரவரிடையே திருவாங்கூர் மகாராஜா
Dev Anandh Fernando
22:58

கூட்டப்புளி முதல் வேம்பார் வரை வாழ்ந்து வரும் பரவர்களின் நிலப்பகுதி ஐரோப்பியர்களால் கோஸ்டா பெஸ்காரியா என்று அழைக்கப்பட்டது. அதுவே அதன் பெயராக மாறியது.
ஐரோப்பாவை சேர்ந்த பாதிரியார் பீட்டர் மார்ட்டின் கிபி 1700 இல் பாதிரியார் லீ கோபியனுக்கு எழுதிய கடிதத்தில் உலக பிரசித்தி பெற்ற கோஸ்டா பெஸ்காரியாவின் நகரங்களை சுற்றிப்பார்க்க விரும்பினேன் என்கிறார்.
________________________
Foot Notes:-
TRAVELS OF THE JESUITS IN TO Various Parts Of The WORLD:PARTICULARLY CHINA and the EAST INDIES BY JOHN LOCKMAN. Page 375
- UNI
கோஸ்டா டி பெஸ்காரியா
Dev Anandh Fernando
07:19
.jpg)