1) Inscriptions in Jambukeshwara Temple.
This inscription (No. 31 of 1891) is engraved on the eastern wall of the second leg of the Jambukeshwara temple on Srirangam island near Thrissinappally. As said in volume. II. പി. 263, The ancient name of this area is Tiravani, i.e., 'Holy Elephant Top, the name of the temple originated from the holy white jumbu tree (Thiru-ven-Naval in Tamil). At the time of writing, Thiruvayakka was part of Migolai, a subdivision of Pandikulassani-Valanad district.
The date is the 47th year of Kulothunga I's rule. A villavarayan was placed in the temple pictures of Rishabhavahan, that is. Sivan and Parvathi climbing the bull. For the purposes of both these pictures, he bought some land from temple authorities and handed over the crop to the paddy temple.
When 2 lives in Kumariimuttam, Rev. They were baptized by Vase and St. Francis Xavier as the Roman Catholics of Latin traditions. Converted Villavarians of Cape Comorine tracing their lineage from a great Parava king Villavarayan, his position and authority is attested by an approximately 800-year-old inscription on the temple in Cape Comorine. Indians are the Mecca's. Their number is 8,944, out of them only 275 are Hindus, remaining 8,669 are Christians.
Census of India, 1931, Volume 28, Part 1
Pandiyapathy
Tuticorin, Tamil Nadu
Pandiyapathy was born on December 13, 1753. His name was Don Caspar Anthony De Cruz Vaz Victoria Parathavarma Pandian and in 1779, he ruled over the Pearl Fishery Coast. Pandiyapathy had initially joined hands with the British forces to defeat the Dutch forces, which controlled the beach road in the 1780s. However, he soon associated with the Panchalankurichi Poligar (Palayakarar) ruler Veerapandiya Kattabomman to fight against the English rule. He had a good relationship with Kattabomman, who sailed to far-off destinations in Pandiyapathy's ship. Pandiyapathy managed to escape and died a natural death in 1808.
Thanks :www.amritmahotsav.nic.in
UNSUNG HERO
Dev Anandh Fernando
23:09

விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டையினை அடுத்துள்ள கரிசல்குளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வாய்வில் சங்கினால் செய்யப்பட்ட வளையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது (படம் காண்க). வெம்பக்கோட்டைப் பகுதியில் ஏற்கனவே பல சங்ககாலத்தினைச் சேர்ந்த தொல்லியல் சான்றுகள் கிடைத்து வரும் நிலையில் புதிதாக இப்போது சங்கினால் செய்யப்பட்ட வளையல் கிடைத்துள்ளது.
சங்க இலக்கியச் சான்றுகள்
கபிலர்: அகம் 2.
'அரம் போழ் அவ் வளைப் பொலிந்த முன் கை'
அகநானூறு: 6
(தித்தனின் மகளான 'ஐயை' பல அணிகலன்களை அணிந்திருந்தாள், அவற்றில் சங்கினை வாளால் அறுத்துச் செய்யப்பட்ட வளையலினை முன் கையில் அணிந்திருந்தாள்)
மாமுலனார் - அகம் 349.
'அரம் போழ் அவ் வளை செறிந்த முன்கை வரைந்து தாம் பிணித்த'
அகநானூறு: 349
(சங்கை அரத்தால் அறுத்துச் செய்யப்பட்ட வளையல்களை உடைய எனது முன்கையினைப் பற்றித் தலைவன் என்னைக் கை பிடித்தார்).
'பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை
வலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து'
நெடுநல்வாடை: 141-142
(பாண்டிய அரசனான நெடுஞ்செழியனின் மனைவியான பாண்டிமாதேவி பொன்னலான வளையல்களுடன் வலம்புரிச் சங்கினால் செய்யப்பட்ட வளையல்களையும் அணிந்திருந்தாள்)
சிலப்பதிகாரத்தில் கண்ணகியும் சங்கிலான வளையலை அணிந்திருந்தாள்.
சிந்துவெளி நாகரிக மக்களும் சங்கிலான வளையல்களை அணிந்திருந்தமைக்கான சான்றுகளுண்டு.
'வளை', 'தொடி' ஆகிய பெயர்களில் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் வளையல் எனும் அணிகலனினை ஈழத்தில் 'காப்பு' எனப் பொதுவாக அழைப்பர்.
சங்கிலான வளையல், பொன்னிலான வளையல் என்பன போன்றே பூச்செடிகளிலிருந்தும் (ஆம்பல், குவளை, வள்ளி) வளையல்களைச் செய்து பழந் தமிழர் அணிந்திருந்தமைக்கான இலக்கியச் சான்றுகளுண்டு.
தற்போது வெம்பக்கோட்டையில் கிடைத்திருந்த சங்கு வளையலைப் போன்று ஏற்கனவே பல இடங்களில் நடைபெற்ற அகழ்வாய்வுகளிலும் சங்கிலான வளையலுக்கான சான்றுகள் கிடைத்திருந்தன,
அத்தகைய தொல்லியல் இடங்கள் கீழடி, கொற்கை, அழகன்குளம், கொடுமணல், உறையூர், காவிரிப்பூம்பட்டினம்...
- இலங்கநாதன் குகநாதன்
சங்ககாலத் தமிழரும் சங்கு வளையல்களும்
Dev Anandh Fernando
22:54

ஒரு இடத்தில் (திருநெல்வேலி சீமை பகுதி) கால்நடைகள் தவிர, எழுபது நபர்களுக்கு அதிகமானோர் காணாமல் போயினர். பாண்டிய நாட்டிலும், சேது நாட்டிலும், புலிகளை பற்றிய பயம் மக்களை ஆட்கொண்டிருந்தது. மக்கள் இரவில் பயணம் செய்யத் துணியவில்லை, பகலில் எப்போதும் அவர்கள் பாதுகாப்பாக இல்லை. ஆனால் பரவர்களோ அப்படிபட்ட புலிகளை வேட்டையாடுவதிலும், கொலை செய்வதிலும் வல்லவர்களாக இருந்தனர் என்பதை ஐரோப்பியர்கள் பதிவு செய்துள்ளனர்.
பரவர்கள் தங்கள் இடக்கையில் நீள்கையுறை அணிந்து புலியை பிடிக்கின்றனர். புலி அந்நீள்கையுறையை பறிக்க முற்ப்படும்போது தாங்கள் வலக்கையில் பிடித்திருந்த குத்துவாளைக் கொண்டு புலியின் வயிற்றை குத்தி கிழிக்கின்றனர்.
மேற்சொன்ன நீள்கையுறை(Gauntlet) என்பது முற்காலத்தில் குறிப்பாக ஐரோப்பியாவில் குதிரை மீதிருந்து போர் புரியும் மாவீரர்கள் அணிந்திருந்த கைகவச உறையை ஒத்தது ஆகும்.
சான்று:1
ATLAS GEOGRAPHUS:OR, A COMPLETE ANCIENT AND MODERN By Herman Moll-1711. Pg 599
சான்று:2
The Gazetteers Or Newsmans Interpreter. being a Geographical Index of the World Countries, printed for P. Crampton, dublin 1732
தென்னாட்டு வேங்கைகள்
Dev Anandh Fernando
21:31

மாவீரர் பாண்டியபதி 'டான்' கேப்ரியேல் டி குரூஸ் (1779-1808)
பாண்டியபதிகள் என்பவர்கள் தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு மணப்பாடு, ஆலந்தலை, வீரபாண்டியன் பட்டிணம், புன்னைக்காயல், வைப்பார் மற்றும் வேம்பார் ஆகிவை உள்ளடக்கிய ஏழு துறை நாட்டுக்கு மன்னர்களாவர்.
மேற்சொன்ன பாண்டியபதிகள் ஒட்டுமொத்த பரவர் சமுதாயத்தின் பரம்பரை தலைவர்கள் என்பதால் இவர்களுக்கு 'ஜாதி தலைவன்' என்னும் பட்டமும் பெற்றுள்ளார்கள்...
பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மன் கிபி 1799 ஆம் ஆண்டு அக்டோபர் பதினாறாம் தேதி தூக்கிலிடப்படுவதற்கு பல மாதங்கள் முன்பே அவருடன் கூட்டணி வைத்திருந்த கிளர்ச்சியாளர்கள் சிலரை ஆங்கிலேய அரசுக்கு எதிராக மறைத்து பாதுகாப்பு அளித்தார் பாண்டியபதி 'டான்' கேப்ரியேல் டி குரூஸ்(1779-1808).
பாண்டியபதியை கிளர்ச்சியாளராக அறிவித்து அவரையும், அவர் மகனையும் ஆங்கிலேய அரசு படைகளின் மூலம் சிறைபிடித்து அவர்களுக்குரிய ஆவண பத்திரங்களையும் கைப்பற்றினார் திருநெல்வேலி_சீமை கலெக்டர் ஸ்டீபன் லூஷிங்டன். மேலும் கலெக்டர் ஸ்டீபன் லூஷிங்டனின் வற்புறுத்தலின் பேரில் 'பாண்டியபதியின் ஆட்சி அதிகாரத்தை நிரந்தரமாக பறிக்க ஆங்கிலேய அரசு தீர்மானித்திருந்தது..
கட்டபொம்மன் நாயக்கருக்காக முதன்முதலில் தமது நாட்டை இழந்தவர் இவரே..!
கலெக்டர் ஸ்டீபன் லூஷிங்டனுக்கே அதிர்ச்சியளிக்கும் விதமாக இலங்கையின் ஆங்கிலேய அரசு அதிகாரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 'பாண்டியபதி' இல்லாமல் மன்னாரில் முத்து குளித்தல் நடைபெறாது! என்று ஆங்கிலேய மேலிடத்துக்கு கூறினர்...
கலெக்டர் ஸ்டீபன் லூஷிங்டனின் முந்தைய தீர்மானம் ரத்து செய்யப்பட்டு பாண்டியபதி மீண்டும் அரியணை ஏறுகிறார்...
நான் மேற்கூறிய குறிப்புகள் அனைத்தும் தகுந்த ஆங்கிலேய அரசு ஆவணங்களுடன் ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர் சூசன் பெய்லி தமது புனிதர்கள், பெண் தெய்வங்கள் மற்றும் அரசர்கள் என்னும் நூலில் பதிவு செய்கிறார்...
----------------------------------------
Saints, Goddess and Kings by Susan Bayly. Pg 353,355
கிபி 1799 ஆம் ஆண்டில் கட்டபொம்மன் நாயக்கர் தூக்கிலிடப்பட்டு அவருடைய சகோதரர்களான ஊமைத்துரை மற்றும் செவத்தையா பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் காளையார்கோவில் மருது பாண்டியர் இரட்டை வீரியத்துடன் எழுந்து தோற்கடிக்கப்பட்ட கிளர்ச்சி படையினருக்கு அடைக்கலம் கொடுத்தார்.
மருது பாண்டியர் அமைத்த கூட்டணி:-
திருநெல்வேலி சீமை-பாண்டியபதி டான் கேப்ரியேல் டி குரூஸை(1779-1808) தமது கூட்டணியில் இணைத்து கொண்டு உடனடியாக மாவீரன் மயிலப்பன் சேர்வைகாரர் மற்றும் முத்து கருப்பு தேவரை பிரித்தானிய இராணுவ நடவடிக்கை காரணமாக சீர்குலைந்திருந்த கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்காக 'மறவர் சீமை'க்கு அனுப்பி வைத்தார் மருது பாண்டியர்.
இதுபோக கள்ளர் பழங்குடிகளை இன்னும் நெருங்கிய கூட்டணிக்குள் கொண்டு வந்தார். கிபி 1801 ஆம் ஆண்டில் கந்தசஷ்டி விழாவை பயன்படுத்தி வெளியே இருந்த நண்பர்களின் துணையுடன் ஊமைத்துரை மற்றும் செவத்தையா பாளையங்கோட்டை சிறையிலிருந்து தப்பித்தனர். தரைமட்டமாக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டை ஆறே நாட்களில் கெட்டி எழுப்பப்பட்டது...
ஆங்கிலேயர்களை தாக்கி அவர்களிடம் இருந்து தாங்கள் கைப்பற்றியிருந்த 200 துப்பாக்கிகளின் பயன்பாட்டிற்காக நாற்பது மூடை வெடிமருந்து வேண்டி மருது பாண்டியரிடம் உதவி கேட்டார் செவத்தையா. உடனடியாக மருது பாண்டியர் கூட்டணியிலிருந்த பாண்டியபதி 'டான்' கேப்ரியேல் டி குரூஸ், மயிலப்பன் சேர்வைக்காரருடன் காடல்குடியில் கூடி இதுசம்பந்தமாக ஆலோசித்தனர்.
முடிவில் மயிலப்பன் சேர்வைகாரர் பாஞ்சாலங்குறிச்சி காளையார்கோவிலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகளில் இருபது மூடைகளை பாஞ்சாலங்குறிச்சிக்கு வழங்கினார். இதுபோக பாண்டியபதி 'டான்' கேப்ரியேல் டி குரூஸ் தனிப்பட்ட முறையில் ஊமைத்துரை மற்றும் செவத்தையா தலைமையிலான கிளர்ச்சி படைகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு மதில் சுவர் துப்பாக்கி (Wall Guns), இதர துப்பாக்கி வகைகள் மற்றும் அதன் பயன்பாட்டிற்கு தேவையான வெடிமருந்துகளையும் வழங்கினார்.
ஒரு போருக்கு நவீன ஆயுதம் எவ்வளவு முக்கியமென்றால் இஸ்ரேயேல் தேசம் அமேரிக்காவின் ஆயுத உதவினாலேயே அரபு கூட்டணி நாடுகளை தோற்கடிக்க முடிந்தது. பரதகுலத்தவர்கள் தங்கள் பாண்டியபதி பின்னால் அணிவகுத்து வீரபாண்டியனின் தம்பிகளான குமாரசுவாமி நாயக்கர் என்னும் ஊமைத்துரை மற்றும் சுப்பா நாயக்கர் என்னும் செவத்தையாவுடன் இணைந்து ஆங்கிலேயருக்கு எதிராக போர் புரிகின்றனர்...!
நன்றி!
ஜெய் ஹிந்த் !!
----------------------------------------
South Indian Rebellion The First War of Independence 1800-1801 by K Rajayyan Pg. 98,201 and 202.
- UNI
சுதந்திர போராட்ட மாவீரர்
Dev Anandh Fernando
06:14

கிபி1450 முதல் கிபி 1550 வரை ஐரோப்பாவில் நடந்த புதிய புரட்சிகள், மாற்றங்கள், படைப்புகள் எல்லாம் மறுமலர்ச்சி காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மறுமலர்ச்சிக்கு ரோமை நகரம் மையப்புள்ளியாக விளங்கியது.
பரவர்கள் கடலில் மூழ்கி எடுத்த முத்துக்களால் செய்யப்பட்ட ஆபரணங்களையே இந்த மறுமலர்ச்சி காலகட்டத்திலும் அதற்கு முந்தைய காலங்களிலும் ரோமை நகர மக்கள் அணிந்திருந்தனர்.
----------------------------------------
The Pearls worn in Ancient and Renaissance Rome had been fished by paravas on this coast.
A Pearl to India by Vincent Cronin. Pg 33
- UNI
Ancient And Renaissance Rome
Dev Anandh Fernando
07:56

கி.பி. 1606ல் திருநெல்வேலி பரதவர்களுக்கும், விஜயநகர நாயக்கர்களுக்கும் நடந்த பரதவர் நாட்டு போர்..!
![]() |
குருசாடோஸ் - போர்சுகீசிய வெள்ளி காசு |
விஜயநகர ஆட்சியில் தமிழகத்தில் பல்வேறு தரப்பினர்களின் எதிர்ப்புகள் இருந்தது. அதனை சரிசெய்வதற்காக விசுவநாத நாயக்கர்(1529-63) என்பவரை மதுரையின் ஆட்சியாளராக கிருஷ்ண தேவராயர் நியமிக்கிறார். இப்படி பாண்டிய நாட்டில் நாயக்க அரசு உருவாகி தமிழர் நிலங்கள் பாளையப்பட்டு முறையின் கீழ் கொண்டு வரப்படுகிறது. மீதமுள்ள சர்கார் நிலங்கள் விஜயநகர நாயக்கர்களின் ஆளுகையின் கீழ் இருந்தது. இந்த இரண்டுக்கும் உட்படாத தமிழர் நிலப்பகுதி தனியாக இயங்கியது. (எ.கா): பரதவர், கள்ளர் நாடுகள்.
விசுவநாத நாயக்கரின் அதிகாரம் உச்சத்தில் இருந்தபோதே திருநெல்வேலியில் பரதவர்களின் நில பரப்பு பரதவர் ராஜ்யம் என்றே தான் வழங்கப்பட்டுள்ளது என்பதனை.....
"மனுவேல் டி மொரையஸ்" என்ற போர்சுகீசியர் கி.பி. 1549ல் எழுதிய கடிதத்தின் மூலமாக நாம் ஆதாரபூர்வமாக அறிய முடிகிறது. விசுவநாத நாயக்கர்(1529-63) திருநெல்வேலியில் கால் பதித்த நாள் முதலே பரதவர்களுடனான மோதல் ஆரம்பமாகிறது. இது முத்து கிருஷ்ணப்ப நாயக்கர்(1602-1606) காலத்தில் விஸ்வரூபம் எடுக்கிறது...
விஜயநகர பேரரசர் வெங்கடபதிராயரின் பாண்டிய நாட்டு பிரதிநிதியாக மதுரையில் இருந்தவர் தான் இந்த முத்து கிருஷ்ணப்ப நாயக்கர். இந்தியா வந்திருந்த பிரஞ்சு நாட்டவரும், ஏசுசபை பாதிரியாருமான "டோமினிக்கோ பெரோலி" என்பவர் தனது ''மலபாரில் ஜேசுட்கள்'' என்னும் நூலில் திருநெல்வேலி பரதவர்களுக்கும் - முத்து கிருஷ்ணப்ப நாயக்கருக்கும் நடந்த வரலாற்று சிறப்புமிகு பரதவர் நாட்டு போர் பற்றி விரிவாக பதிவுசெய்துள்ளதை பற்றி இங்கு பார்ப்போம்......
கி.பி. 1606ல் தூத்துக்குடிக்கு அருகே போர்ச்சுகல் நாட்டவரின் வியாபார கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகி சேதமடைந்து நின்றுவிட்டது. பரதவர்களின் உதவியை நாடினர் போர்சுகீசியர்கள். கப்பலிலிருந்த சரக்குகள் அனைத்தையும் பரதவர்கள் பத்திரமாக மீட்டெடுத்தனர். செய்த உதவிக்கு நன்றியாக மீட்கப்பட்ட பொருட்களில் நான்கில் ஒரு பகுதியை பரதவர்களுக்கு விட்டு தருவதாக போர்த்துக்கீசியர்கள் வாக்களித்திருந்தனர்.
விஜயநகர பிரதிநிதியாக மதுரையில் இருந்த முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் இச்சம்பவத்தை கேள்வியுற்று பேராசையால் தூண்டப்பட்டவராய் சேதமடைந்திருந்த கப்பலும் அதனுள் இருந்த சரக்குகள் மீதும் உரிமை கோரி பரதவர் நாட்டுக்குள் தூதுவரை அனுப்பி தனக்கு 5,00,000 குருசாடோஸ் பணம் தரவேண்டும் என்று அவர்களிடம் கேட்டார். பரதவர்களோ தர மறுத்துவிட்டனர். (குறிப்பு: குருசாடோஸ் என்பது போர்ச்சுகீசிய வெள்ளி காசுகள் ஆகும்.)
கோபமடைந்த முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் பரதவர் நாட்டுக்குள் மீண்டும் தூதுவரை அனுப்பி தனக்கு 5,00,000 குருசாடோஸ் பணம் தரவில்லை எனில் நான் படையெடுத்து வந்து முற்றிலும் உங்களை அழிதொழித்து விடுவேன் என்று அச்சுறுத்தினார். பரதவர்களோ முத்து கிருஷ்ணப்ப நாயக்கரின் மிரட்டலும் அஞ்சாமல் அவரை போருக்கு அழைத்தனர்.
முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் தனது விஜயநகர படைகளை திரட்டி பரதவர்களுக்கெதிராக போருக்கு அணிவகுத்து சென்று திருநெல்வேலி பரதவர் நாட்டுக்குள் நுழைகிறார். வடுகப்படையுடன் வந்த முத்து கிருஷ்ணப்ப நாயக்கனுடன் கடுமையாக மோதுகின்றனர் பரதவர்கள்.
இரண்டு மாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த யுத்தத்தில் இருபக்கமும் இழப்புகள் ஏற்பட்டதே ஒழிய போர் ஒரு முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. இதுபற்றி மேற்சொன்ன பிரஞ்சு நாட்டவர் "டோமினிக்கோ பெரோலி" கூறும்போது....
''விஜயநகர படைகள் பரதவர்களுக்கெதிராக போருக்கு அணிவகுத்து சென்றனர் ஆனால் அவர்களால் பரதவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை''
என்று குறிப்பிடுகிறார்.
"His Army Marched against them, but in vain"
பரதவர்கள் மிகவும் வலிமையாக இருந்தால் அவர்களை வீழ்த்துவது கடினமென்று எண்ணிய முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் தன்னை எதிர்த்து போரிட்டு கொண்டிருக்கும் பரதவர்களை நோக்கி இவ்வாறு கூறினார்....
"நான் என் மகனின் திருமண விழாவில் கலந்து கொள்ள உடனடியாக உங்களிடமிருந்து விடைபெற்று மதுரை சென்றாக வேண்டும் ஆனால் விழாக்கோலம் முடிந்தவுடன் மீண்டும் வந்து உங்களை யுத்தகளத்தில் சந்திப்பேன்"
என்று சொல்லி விட்டு திருநெல்வேலியில் இருந்து தனது விஜயநகர படைகளை விலக்கி கொண்டு மதுரைக்கோடி மறைந்த முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் அங்கேயே அதே வருடம் இறந்து விடுகிறார். மதுரையில் முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் மகனின் திருமணம் நடக்கவில்லை மாறாக முத்து கிருஷ்ணப்ப நாயக்கரின் இறுதி சடங்குதான் அங்கு நடந்தது.
மதுரை வந்திருந்த "ராபர்ட் டி நோபிலி" என்னும் இத்தாலி நாட்டவர் அங்கிருந்து கி.பி. 1606 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் "கோஸ்டான்சா ஸ்ஃபோர்ஸா" என்னும் இத்தாலி நாட்டு ராணிக்கு தான் எழுதிய கடிதத்தில்....
"சில நாட்களுக்கு முன் மரித்து போன முத்து கிருஷ்ணப்ப நாயக்கரின் சடலம் மக்கள் முன்னிலையில் எரிக்கப்பட்டது, அவருடைய நம்பிக்கைக்குறிய மனைவிமார்களும் அதே நெருப்பில் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டனர்" என்று குறிப்பிடுகிறார்.
இப்படி தமிழ் பரதவர்களை அழித்தொழிப்பேன் என்று ஆரவாரம் செய்த முத்து கிருஷ்ணப்ப நாயக்கரின் முடிவு மோசமானதாக அமைந்தது.
००००००००००००००००००००००००००००००००००००००००
இதேபோல் மதுரை மாநகரை சுற்றி இருக்கும் கள்ளர் நாடுகளை தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வர விஜயநகர நாயக்கர்களால் இயலவில்லை. தமிழ் கள்ளர்கள் நாயக்க அரசுக்கு பெரிதும் அச்சுறுத்தலாகவே இருந்தனர். தமிழர் அனைவரும் விஜயநகர பேரரசுக்கு அடிபணியவில்லை எனபதனை தெளிவாக அறிய முடிகிறது.
००००००००००००००००००००००००००००००००००००००००
Foot Notes:-
Jesuits in Malabar by French Jesuit Dominico Ferroli Vol I Pg. 319
St. Fransis Xavier his life, his times by George Shurhammer Vol lll Pg. 371
- UNI
பரதவர், விஜயநகரர்க்கான போர்
Dev Anandh Fernando
06:24

தலைவனார் பட்டம் கொண்ட சமூகத்தவர்கள்:
"பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கட்டபொம்மு நாயக்கர் கி.பி. 1799 ஆம் ஆண்டில், அக்டோபர் 16 ஆம் தேதி தூக்கிலிடப்படுவதற்கு பல மாதங்கள் முன்பே அவருடன் கூட்டணி வைத்திருந்த கிளர்ச்சியாளர்கள் சிலரை ஆங்கிலேய அரசுக்கு எதிராக மறைத்து பாதுகாப்பு அளித்தவர் ராஜா டான் கேபிரியேல் டி குருஸ்(1779-1808) என்ற பாண்டியபதி.
எனவே திருநெல்வேலி ஜில்லா கலெக்டராக இருந்த "ஸ்டீபன் லூஷிங்டன்" "ராஜா டான் கேபிரியேல் டி குருஸ்" என்ற பாண்டியபதியை கிளர்ச்சியாளராக அறிவித்திருந்தார். இந்த சமயத்தில் பாண்டியபதி ராஜாக்களை எப்படியேனும் ஒழிக்க வேண்டும் என்று காத்துகொண்டிருந்த பத்தொன்பது முக்கிய நபர்களை கொண்ட தூத்துக்குடி பரதவர் குழு ஒன்று அவருடைய ஆட்சியை நீக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை எல்லாம் மேற்கொண்டது.
கி.பி. 1799 பிப்ரவரி 4 ஆம் நாள் நான் மேற்கூறிய பத்தொன்பது பரதவர்களும் பாண்டியபதி ராஜாவுக்கு எதிராக பதினான்கு பொய் குற்றச்சாட்டுகளை தயார் செய்து அனைவரும் அதில் கையொப்பமிட்டு அந்த மனுவை திருநெல்வேலி ஜில்லா கலெக்டரான "ஸ்டீபன் லுஷிங்டன்" பிரபுவிடம் சமர்பித்தனர்.....
அவற்றுள் நான்காவது குற்றச்சாட்டு என்னவெனில்...
"அவர்(பாண்டியபதி ராஜா) தமக்கு அடுத்த நிலை பதவி வகித்த தலைவனார்களை அவமதித்தார்" என்று குறிப்பிடபட்டுள்ளது. இதன்மூலம் பரதவர்களுள் தலைவனார் பட்டம் கொண்ட நபர்கள் பாண்டியபதி ராஜாவுக்கு அடுத்த நிலை அந்தஸ்தில் இருந்தனர் என்பது தெளிவு.
மறவர்களிடையே தலைவனார் பட்டபெயர் வழங்கி வந்ததை பற்றி கி.பி. 1909 ஆம் ஆண்டில், ஆங்கிலேய மானிடவியலாளர் "எட்கர் தர்ஸ்டன்" தனது நூலில் முதலாம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேற்சொன்னவைகள் மூலம் தலைவனார் பட்டபெயர் பரதவர்களுக்கும், மறவர்களுக்கும் உரியது என்பதனை ஆதாரபூர்வமாக அறியமுடிகிறது.
००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००
ஆதாரம்:-
1. Caste and Tribes of South India by Edgar Thurston Vol 7 Pg. 1
2. Saints, Goddess and Kings by Susan Bayly. Pg 353,355
- UNI
தலைவனார் வம்சம்
Dev Anandh Fernando
21:20

சிந்துசமவெளி பரவர்களின் வாழ்வியல், தொழில் மற்றும் வரலாறு:
மீனாடு:
இன்றைய பாகிஸ்தான் நாட்டில் சிந்து சமவெளி நாகரிகமானது அன்று கி.மு. 3300 முதல் கி.மு. 1300 வரை நீடித்திருந்தது. மீன்பரவர் இனத்தவர்கள் சிந்து சமவெளியில் தங்களுக்கு என்று ஒரு நாட்டை உருவாக்கி, அதற்கு மீனாடு என்று பெயரிட்டு அழைத்தனர். மீன்பரவர்கள் வாணிபம், விவசாயம், மீன் வேட்டை போன்ற தொழில்களில் ஈடுபட்டனர்.
மீன்பரவர்கள் பல குலங்களை உள்ளடக்கிய ஓர் இனக்குழுவாக இருந்தனர். மீன்பரவர் இனத்தவருள் சந்திர மற்றும் சூரிய குலத்தவர்களே முதன்மையானவர்களாக இருந்தனர். மீன்பரவர் இனத்தவருள் மக்கள் தொகையில் சந்திரகுல மீன்பரவர்கள் இருபத்தைந்து சதவீதமும், சூரியகுல மீன்பரவர்கள் பதினைந்து சதவீதமும் இருந்தனர் .
சந்திரகுல மீன்பரவர்களின் தலைவர்கள் மீனவன் என்ற பட்டமும், இரட்டைமீன் சின்னத்தை தங்கள் கொடியிலும் கொண்டிருந்தனர். சந்திரகுல மீன்பரவர்களின் தலைவர்கள் மட்டுமே மொத்த மீனாட்டுக்கும் அரசர்களாக வர முடியும்.
பரவர் நாடு:
மீனாட்டில், சந்திர மற்றும் சூரிய குல மீன்பரவர்கள் வாழ்ந்த நிலபரப்பே பரவர் நாடு என்று அழைக்கப்பட்டது. பரவர் நாடு என்பது தனி நாடாக இருக்கவில்லை, மாறாக மீனாட்டின் ஒரு பகுதியாக இருந்தது.
பரவர் நாட்டில், நீர்ப்பாசன வசதிக்காக பல கால்வாய்கள் கட்டப்பட்டன, அவற்றுள் மிக நீளமான கால்வாய் ஒன்று கட்டிமுடிக்கவே ஒரு வருடம் மேல் ஆனது. பரவர் நாட்டின் முதன்மை நகரம் "பரவர்பள்ளி" என்று அழைக்கப்பட்டது.
பரவர்பள்ளி என்பதற்கு பரவர்களின் நகரம் என்று பொருள். பரவர் நாட்டுக்கு உள்ளேயே ஆறு ஊர்களை சேர்ந்த மக்கள், நிர்வாக வசதிகாக "ஆறூர் கூட்டமைப்பு" என்ற ஒன்றை உருவாக்கியிருந்தனர். பரவர் நாட்டில், "மலகோபா" என்ற ஊரில் தென்னந்தோப்புகள் இருந்தது.
०००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००
மேற்கூறியுள்ள தகவல் அனைத்தும் உலகப்புகழ் பெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளரும், வரலாற்றாசிரியருமான "ஹென்றி ஹெராஸ்" சிந்து சமவெளியில் கிடைத்த கல்வெட்டுகளை ஆராய்ந்து தமது "மோகஞ்சதாரோ மக்களும், நாடும்" மற்றும் "மோகஞ்சதாரோவில் மீனவன்" ஆகிய நூல்களில் பதிவு செய்தவைகளாகும்.
இந்திய தொல்பொருள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சிக்கு "ஹென்றி ஹெராஸ்" ஆற்றிய சேவையை அங்கீகரித்து அவரது நினைவை கொண்டாடும் வகையில், அவரது உருவம் பொரித்த அஞ்சல் தலையை இந்திய அரசு கிபி1981 யில் வெளியிட்டது.
____________________________________
ஆதாரம்:-
1.Henry Heras, Mohenjo daro, the people and land Pg.715-16
- UNI
சிந்துசமவெளி பரவர்
Dev Anandh Fernando
07:42
