தென்னாட்டு வேங்கைகள்
ஒரு இடத்தில் (திருநெல்வேலி சீமை பகுதி) கால்நடைகள் தவிர, எழுபது நபர்களுக்கு அதிகமானோர் காணாமல் போயினர். பாண்டிய நாட்டிலும், சேது நாட்டிலும், புலிகளை பற்றிய பயம் மக்களை ஆட்கொண்டிருந்தது. மக்கள் இரவில் பயணம் செய்யத் துணியவில்லை, பகலில் எப்போதும் அவர்கள் பாதுகாப்பாக இல்லை. ஆனால் பரவர்களோ அப்படிபட்ட புலிகளை வேட்டையாடுவதிலும், கொலை செய்வதிலும் வல்லவர்களாக இருந்தனர் என்பதை ஐரோப்பியர்கள் பதிவு செய்துள்ளனர்.
பரவர்கள் தங்கள் இடக்கையில் நீள்கையுறை அணிந்து புலியை பிடிக்கின்றனர். புலி அந்நீள்கையுறையை பறிக்க முற்ப்படும்போது தாங்கள் வலக்கையில் பிடித்திருந்த குத்துவாளைக் கொண்டு புலியின் வயிற்றை குத்தி கிழிக்கின்றனர்.
மேற்சொன்ன நீள்கையுறை(Gauntlet) என்பது முற்காலத்தில் குறிப்பாக ஐரோப்பியாவில் குதிரை மீதிருந்து போர் புரியும் மாவீரர்கள் அணிந்திருந்த கைகவச உறையை ஒத்தது ஆகும்.
சான்று:1
ATLAS GEOGRAPHUS:OR, A COMPLETE ANCIENT AND MODERN By Herman Moll-1711. Pg 599
சான்று:2
The Gazetteers Or Newsmans Interpreter. being a Geographical Index of the World Countries, printed for P. Crampton, dublin 1732