Welcome to Vembar

'மதி குலத்தோரின் துறையேழின் முதற்றுறையாம் வேம்பாறு'

This site is a treasure trove of historical information about the Bharathas and a pearl trading centres in the Gulf of Mannar. Especially for elegant coastal village of ‘Vembaru’.

Blog
வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

பரவரின் முத்து


உலக புகழ்பெற்ற பரவர்களும் அவர்களது முத்துக்களும்:

"ஜான் நியூஹாஃப்" என்ற டச்சு பயணி தமது நூலில்...

"கடலில் மூழ்கி முத்தெடுப்பதில் இவ்வுலகிலேயே சிறந்தவர்கள் பரவர்கள் மட்டுமே. பரவர்கள் தங்கள் ஆண் பிள்ளைகளை சிறுவயதிலிருந்தே முத்தெடுக்கும் தொழிலில் பழக்குகின்றனர்" என்று குறிப்பிடுகிறார். 

Ancient And Renaissance Rome:(பண்டைய மற்றும் மறுமலர்ச்சி காலத்திய ரோமாபுரி)

கி. பி. 1450 க்கு முந்தைய உரோமை நகரும், அதனை சார்ந்துள்ள பகுதிகளும் பண்டைய உரோமாபுரி என்று அழைக்கப்பட்டது. கி. பி. 1450 முதல் கி. பி. 1550 வரை ஐரோப்பாவில் நடந்த புதிய நவீன புரட்சிகள், மாற்றங்கள், படைப்புகள் எல்லாம் மறுமலர்ச்சியின் காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மறுமலர்ச்சியின் காலத்துக்கு உரோமை நகரம் மையப்புள்ளியாக விளங்கியது.

புகழ்பெற்ற ஆங்கிலேய வாழ்க்கை வரலாற்று ஆசிரியரான வின்சென்ட் குரோனின் தமது "இராபர்ட் டி நோபிலி" வாழ்க்கை வரலாற்று நூலில்...

"பண்டைய உரோமாபுரியிலும் சரி, மறுமலர்ச்சி காலத்திய உரோமாபுரியிலும் சரி, பரவர்கள் கடலில் மூழ்கி எடுத்த முத்துக்களால் செய்யப்பட்ட ஆபரணங்களையே உரோமையர் பெண்கள் அணிந்திருந்தனர்" என்று குறிப்பிடுகிறார். சரி உரோமையர் பெண்கள் ஏன் பரவர்கள் மூழ்கி எடுத்த முத்துக்களால் உருவாக்கப்பட்ட ஆபரணங்களை விரும்பி அணிந்தனர்?

கடலில் மூழ்கி சிறந்த முத்துக்களை எடுப்பதில் பரவர்களுக்கு நிகரானவர்கள் இவ்வுலகில் எவரும் இல்லை. இதனால் தான் இவ்வுலகில் கடலில் மூழ்கி முத்தெடுப்பவர்களில் சிறந்தவர்கள் பரவர்கள் மட்டுமே என்று குறிக்கப்படுகின்றனர்.


०००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००

ஆதாரம்:

Voyages to East Indies and Brazil by John Nieuhoff Pg. 262
Pearl to India by Vincent Cronin. Pg 33








-UNI

பாண்டியபதிகள்



பரதவர்களின் மன்னர் குடும்பம் பாண்டியபதிகள்..!
 
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஏசுசபை பாதிரியார் "குபே" சுவாமியவர்கள் தனது பயண குறிப்பில் பரதவர் நாட்டின் ஏழுகடற்றுறை ராஜாக்களான பாண்டியபதிகள் மற்றும் பரதவர்களை குறித்து இவ்வாறாக குறிப்பிடுகிறார்......
 
பரதவர் சமூகத்தவர்கள் ஜாதி தலைவன் என்னும் ஒரு மன்னரால் ஆளபடுகிறார்கள். (குறிப்பு: ஜாதி தலைவன் என்பது பாண்டியபதி ராஜாக்களின் பட்டங்களில் ஒன்று, இவர்கள் ஒட்டுமொத்த பரதவர் சமூகத்தவர்களின் பரம்பரை தலைவர்கள் என்பதால் இப்பட்டப்பெயர் அவர்களுக்கு ஏற்ப்பட்டது.)

ஆங்கிலேயர்கள் ராஜவம்சத்திற்குரிய சாயலை மட்டுமே இவருக்கு விட்டுவைத்துள்ளனர் என்பது உண்மையே இருப்பினும் இவரது வாக்கை சட்டமாக கருதி இவர் மீது அதிக பற்றுதல் கொண்டிருக்கும் இவரின் சொந்த மக்களிடையே இவர் அனுபவித்துவரும் அந்தஸ்தை அவர்களால் அபகரிக்க முடியவில்லை.

தற்போது ஆட்சியிலிருக்கும் மன்னர் டான் கேபிரியேல் டி குருஸ் வாஸ் பல்தான் (1856 - 1889) என்ற பாண்டியபதி வயது முதிர்ந்தவராவார். அவரது மகன் மரித்த நிலையில் அவர் பேரப் பிள்ளைகளில் ஒருவரே அடுத்த ராஜ பட்டத்திற்குரியவராக இருக்கிறார்.

பண்டைய காலம் தொட்டே ஆட்சியிலிருக்கும் மேற்கூறிய ராஜவம்சமானது பரதவர் நாட்டில் வெற்றிகரமாக கால்பதித்த போர்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்களை எதிர்த்து தங்களது ஆட்சி உரிமையை தக்கவைத்து கொண்டது.

டச்சுக்காரர்களை எதிர்த்த பாண்டியபதி:-

(முன் குறிப்பு: கி.பி. 1658ல் டச்சு குடியரசு போர்சுகல் மன்னரின் பாதுகாப்பு பெற்றிருந்த பரதவர் நாட்டை கைப்பற்றி அப்போது ஆட்சியில் இருந்த ராஜா டான் சவியர் ஹென்றி டி குருஸ் கொரைரா (1646 - 1671) என்ற பாண்டியபதிக்கு ராஜா பட்டம் கட்டி அவரை நண்பராக்கி கொண்டனர். இருப்பினும் அரசியல் காரணத்திற்காக பரதவர்களை தங்களுடைய நெதர்லாந்தின் கால்வினிய கிறிஸ்தவ சமயத்தை ஏற்றுக் கொள்ள தூண்டினர் டச்சுக்காரர்கள். அதற்கு பதிலடி கொடுத்தார் பாண்டியபதி)

பரவர் நாடு தலைவர்களின் கூட்டமைப்பு ஒன்று டச்சுக்காரர்களின் சமயத்தை கைகொள்கிரவர்களை கொலை செய்ய ஆணை பிறப்பித்திருந்தது. பரவன் ஒருவன் டச்சுக்காரர்களால் தூண்டப்பட்டு அவர்கள் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள கால்வினிய தேவாலத்துக்குள் நுழைந்தான். இதனை கண்டு கோபமடைந்த மக்கள் மன்னரிடம் இவற்றை தெரிவித்தனர். மன்னர் உடனடியாக துப்பாக்கிகள் (Muskets) ஏந்தியிருக்கும் தமது நம்பிக்கைக்குரிய ஆதரவாளர்களை அழைத்துக்கொண்டு அவ்வின துரோகியை தண்டிக்க டச்சு தேவாலயத்துக்கு முன் அவனை எதிர்பார்த்து காத்திருந்தார். அவன் வெளியே கதவருகே வந்ததும் துப்பாக்கி குண்டு அவன் உடலை துளைத்து உயிரற்றவனாக்கியது.

இதன்பின்னர் அங்கிருந்து மன்னரும், அவருடைய ஆட்களும் தங்களுக்கு எதிராக ஒரு விரல் கூட தூக்க துணியாமல் பிரமிப்புடன் பார்த்து கொண்டிருக்கும் டச்சுக்காரர்களுக்கு நடுவே மெதுவாக அவர்களை கடந்து சென்றார்கள். (குறிப்பு: இத் தண்டனை வழங்கிய மன்னரின் பெயர் ராஜா டான் காஸ்பர் அந்தோனி டி குருஸ் 1808-1839 என்ற பாண்டியபதி)

ஒவ்வொரு ஆண்டும் கடலில் எடுக்கப்படும் முத்து சிப்பிகளின் ஒரு குறிப்பிட்ட அளவு ஆங்கிலேய அரசுக்கும், மற்றொரு பகுதி பரவர்களின் மன்னருக்கும் மூன்றாவது பகுதி வறுமையில் வாடும் கத்தோலிக்க மிஷனரிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

லூயிஸ் டி'ஆர் என்னும் பிரஞ்சு தங்க நாணயங்களை அந்நாட்டு மன்னரான எட்டாம் லூயிஸ் கிபி1640 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார். பரவர் பெண்கள் தாங்கள் அணியும் கழுத்து மாலையில் இந்த லூயிஸ் டி'ஆர் பிரஞ்சு தங்க நாணயங்களை சேர்த்து உள்ளனர்.

பணக்கார பரவர் ஆண்கள் அனைவரும் தாங்கள் அணியும் மேல் சட்டையின் (Coat) பொத்தானையாக (buttons) லூயிஸ் டி'ஆர் பிரஞ்சு நாணயங்களை பயன்படுத்துகின்றனர். பிரிட்டிஷ் அரச குடும்பத்தினரும், இந்த லூயிஸ் டி'ஆர் பிரஞ்சு தங்க நாணயங்களை தங்களது உடை ஆபரணங்களின் சேர்ந்ததுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் மேற்கூறியுள்ள தகவல் அனைத்தும் பாதிரியார் குபே சுவாமியவர்கள் பிரஞ்சு மொழியில் தான் எழுதியிருந்த பயண குறிப்பை இங்கிலாந்து நாட்டின் ஏசுசபையினர் 'தீ மந்த்' என்று அழைக்கப்படும் தங்களுடைய கத்தோலிக்க இதழில் அவர் அனுமதியுடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 'A Visit to Pearl Fishery Coast' என்ற தலைப்பில் கிபி1889 ஆம் ஆண்டு வெளியிட்டனர்.











- UNI

கொற்கை முன்றுறை


தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில், தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆத்தூருக்கு வடமேற்கே சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில், வாழைத் தோட்டங்களால் சூழப்பட்ட வயல்களுக்கு மத்தியில், கொற்கை என்னும் குக்கிராமம் அமைந்து அணி செய்கிறது. கொற்கைக் கிராமத்தின் வடபுறத்தில் கொற்கையையொட்டிக் குளமொன்று அமைந்துள்ளது. இக்குளத்தைக் கொற்கைப் பகுதி மக்கள் பழைய துறைமுகம் என்று கூறுகின்றனர்.

குளத்தின் நடுவே கொற்கை நங்கை கோயில் அமைந்து விளங்குகிறது. கொற்கைக் குளத்தின் வடகரையில், சுமார் ஐம்பது வீடுகளைக் கொண்ட ‘அக்கசாலை’ என்ற கொற்கையைச் சேர்ந்த சின்னஞ்சிறிய கிராமம் இருக்கிறது. இதனை அப்பகுதி மக்கள், அக்காசாலை என அழைக்கின்றனர். குளக்கரையின் தென்புறம் வாழைத் தோட்டத்திற்கு மத்தியில் அக்கசாலைப் பிள்ளையார் கோயில் அமைந்து விளங்குகிறது. அக்கசாலைக்கு வடபுறம். கூப்பிடுதூரத்தில் (சுமார் கால் கிலோமீட்டர் தூரத்தில்) மாறமங்கலம் என்னும் கிராமம் அமைந்து விளங்குகிறது. அக்கசாலைக்கும் மாறமங்கலத்திற்கும் இடையே, கிழக்கு மேற்காக கடலை நோக்கிச் சிற்றாற்று வாய்க்கால் செல்கிறது. இவ்வாய்க்காலில், கன்னிமார் குட்டம் என்ற பழமையான நீர்நிலையும் அமைந்து விளங்குகிறது.

அக்கசாலைக்குக் கீழ்புறம் கொடுங்கண்ணி என்ற சிறிய கிராமம் உள்ளது. மாறமங்கலத்தின் வடபுறம், சுமார் இரு கிலோமீட்டர் தொலைவில் இடையர்காடு என்னும் கிராமம் இருக்கிறது. இக்கிராமம் மணிமேகலைக் காப்பியத்தில் ‘கோவலர் இருக்கை’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இடையர் காட்டில் இப்போது வாழும் மக்களில் பெரும்பாலோர் கிறித்தவர்களேயாவர். கிறிஸ்தவ ஆலயமும், மேல்நிலைப் பள்ளியும் உள்ளன. இடையர்காட்டுக்குக் கிழக்கே. மஞ்சள் நீர்க்காயல் என்ற கிராமமும், மஞ்சள் நீர்க்காயலுக்குக் கிழக்குப்புறத்தில், தூத்துக்குடி – திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் பழைய காயல் என்ற பண்டையத் துறைமுக நகரமும் அமைந்து விளங்குகின்றன. இதேபோல, அக்கசாலைக்கும் மாறமங்கலத்திற்கும் கிழக்கே அகரம் என்ற பழமையான ஊரும், அகரத்திற்குக் கிழக்கே, தூத்துக்குடி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் முக்காணி என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஊரும் அமைந்து விளங்குகின்றன.

கொற்கைக்குத் தென்புறம், கூப்பிடு தூரத்தில், சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில், கொற்கை மணலூர் என்ற சிறிய கிராமம் இருக்கிறது. கொற்கை மணலூர் என்ற பெயர், பண்டையச் சங்ககாலக் கொற்கைத் துறைமுகத்தை நினைவுபடுத்துகிறது. கொற்கை மணலூருக்குத் தெற்கே. சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உமரிக்காடு என்ற ஊர் இருக்கிறது. உமரிக்காட்டில், உமரிக்கோட்டைவாழ் அய்யனார் கோயில் இருக்கிறது. உமரிக்காட்டுக்குத் தெற்கே வாழவல்லான் என்ற ஊர் இருக்கிறது. திவ்யப்பிரபந்தத்தில் பயின்றுவரும் வல்லவாழ் என்ற வைணவத்தலம் இதுவாக இருக்கலாமோ?

கொற்கைக்குத் தென்மேற்கே, சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் செந்நெல்மாநகர் என்ற ஊர் இருக்கிறது. இவ்வூர், திருச்செந்தூர்க் கல்வெட்டில் சாலியம் எனப்பயின்று வந்துள்ளது. சாலி என்பது ஒரு நெல் வகையைக் குறிக்கும். தளவாய்புறச் செப்பேட்டில், ‘செஞ்சாலி விளைகழனி என்ற தொடர் பயின்று வந்துள்ளது. செந்நெல்மாநகருக்கு மேற்கே, ஆறுமுகமங்கலம் என்ற ஊரும் அங்கே ஆயிரத்தெண் பிள்ளையார் என்ற விநாயகர் கோயிலும் அமைந்து விளங்குகிறது. கல்வெட்டில், ஆறுமுக மங்கலம் அருகமங்கலம் எனவும், மாறமங்கலம் ஆயிரத்தெண்பிள்ளையார் ஆயிரத்தெண்மர் வசக்கல் எனவும் பயின்று வந்துள்ளன. மாறமங்கலம் கல்வெட்டில், குணமந்த்ரநல்லூர், படுதரமங்கலம், சோழபாண்டிய நல்லூர் போன்ற ஊர்ப் பெயர்களும் பயின்று வந்துள்ளன. இந்த மூன்று ஊர்களும், மாறமங்கலத்தைச் சேர்ந்த சிற்றூர்களாக முற்காலத்தில் இருந்துள்ளன.

இதுகாறும் கண்ட ஊர்கள் அனைத்தும், தாமிரபரணியாறு கடலோடு கலக்குமிடத்தில், ஆற்றின் வடகரையில் வாழைத் தோட்டங்களுக்கு இடையே அமைந்து விளங்குகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இவ்வூர்கள் அனைத்தும் ஒரே நகரமாக இணைந்து கோநகர் கொற்கையாக, கொற்கைத் துறைமுகமாக, பாண்டியர்களின் தலைநகரமாக, துறைமுகப்ட்டினமாக விளங்கி இருக்க வேண்டும்.

வடமொழியின் ஆதிகாவியமான வால்மீகி இராமாயணத்தில், பாண்டிய மன்னர்களைப் பற்றிய குறிப்பு வருகிறது. வியாச முனிவரின் மகாபாரதத்திலும் தமிழ்நாட்டின் சிறப்பும், பாண்டியர் அரசும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. வால்மீகி இராமாயணமும் வியாசரின் மகாபாரதமும் கொற்கையை ‘பாண்டிய கவாடம்’ என்று குறிப்பிடுகின்றன. “பொன் நிறைந்ததாயும், அழகு உடைத்தாயும், முத்து மயமான மணிகளால் அலங்கரிக்கப்பெற்றதாயும், பாண்டியர்க்கு யோக்கியமாயும் உள்ள கவாடம்” என்று வால்மீகி கொற்கையைக் குறிப்பிடுகிறார். 

கொற்கை முன்றுறை, கொற்கைப் பெருந்துறை, கொற்கையம்பேரூர், பாண்டியர் கொற்கை என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. கிறிஸ்து பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, கொற்கை மாநகரம் தோன்றியிருந்தது. கி.மு. நான்கு மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில், கொற்கை பாண்டிய நாட்டின் தலைசிறந்த பண்டப் பெருநிலையமாகவும், வணிகமையமாக வும் விளங்கியது. சுமார் கி.பி.60-ல் எழுதப்பட்ட பெரிப்புளூஸ் என்னும் நூல், கொற்கையை கொல்ச்சிஸ் (Colchis) என்றும், கி.பி 77-ல் வந்த தாலமியின் ‘பூகோள விவரணம்’ என்னும் நூல் கொற்கையை கொல்காய் (Kolkhoi) என்றும் குறிப்பிடுகின்றன. அயல்நாட்டு மாலுமிகள், மன்னார் வளைகுடாவை’ ‘கொற்கை வளைகுடா என்று குறிப்பிடுகின்றனர். மேற்கண்ட நூல்களில் வெளிநாட்டு அறிஞர்கள் குறிப்பிட்டிருக்கும் நுண்ணிய விவரங்கள், சங்க நூல்கள் பலவற்றில் காணப்படும் கருத்துகளுக்கு மிகப் பொருத்தமாய் இருக்கின்றன.

சுமார் கி.பி.60-ல் எழுதப்பட்ட பெரிப்புளூஸ் என்னும் நூல், கொற்கையை கொல்ச்சிஸ் (Colchis) என்றும், கி.பி 77-ல் வந்த தாலமியின் ‘பூகோள விவரணம்’ என்னும் நூல் கொற்கையை கொல்காய் (Kolkhoi) என்றும் குறிப்பிடுகின்றன. அயல்நாட்டு மாலுமிகள், மன்னார் வளைகுடாவை’ ‘கொற்கை வளைகுடா என்று குறிப்பிடுகின்றனர். மேற்கண்ட நூல்களில் வெளிநாட்டு அறிஞர்கள் குறிப்பிட்டிருக்கும் நுண்ணிய விவரங்கள், சங்க நூல்கள் பலவற்றில் காணப்படும் கருத்துகளுக்கு மிகப் பொருத்தமாய் இருக்கின்றன.

பாண்டியர் கொற்கை
ஆசிரியர்: செ.மா.கணபதி

தூத்துக்குடி முத்து


தூத்துக்குடி என்றாலே ஞாபகம் வருவது முத்துதான்-முத்துக்குளித்தலால் தான் முத்து நகரம் என்று பெயர் பெற்றது.


தூத்துக்குடியில் முத்து குளித்தல் கடந்த 1957 ஆம் ஆண்டுகளுக்கு அப்புறம் இதுவரை நடைபெறவில்லை. இது குறித்து அப்போதைய காலகட்டங்களில் முத்து குளித்தல் தொழிலில் ஈடுபட்ட தொழிலாளிகளை தேட துவங்கினோம். தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் அருகே தனுஷ்கோடி என்ற ஒரு பெரியவர் இருப்பதாக தகவல் கிடைத்தது அவரைப் பார்க்க நாமும் சென்றோம்.


ஒல்லியான தேகம், உடல் முழுக்க சுருக்கங்கள், ஆனாலும் கணீர் குரலில் பேசுகிறார் 92 வயதை எட்டிய பெரியவர் தனுஷ்கோடி. அவரிடம் பேச்சு கொடுத்தோம். முத்துக்குளித்தல் தொழில் எப்போது நடைபெறும், முத்துக்குளி தொழிலில் எத்தனை ஆண்டுகளாக ஈடுபட்டீர்கள், முத்துக்கள் உங்களுக்கு கிடைத்ததா, முத்துக்கள் இருக்கும் இடம் எப்படி தெரியும் என பல்வேறு கேள்விகளோடு அவரை சந்தித்தோம்.


இதுகுறித்து தனுஷ்கோடி கூறுகையில், கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் 1957 ஆம் ஆண்டு வரை முத்துக்குளி தொழிலில் ஈடுபட்டதாக தெரிவித்தார். தூத்துக்குடி கடலில் இருந்து சுமார் 20 கடல் மைல் தொலைவிற்கு நாட்டுப்படகில் சென்று கண்ணுக்கு மட்டும் கண்ணாடி அணிந்து கொண்டு தன் மூச்சில் சுமார் 40 அடி ஆழம் வரை கடலுக்குள் சென்று முத்து சிற்பிகளை பாறைகளுக்கு அடியில் ஒளிந்திருக்கும் முத்துச்சிப்பிகளை தேடி எடுத்து வருவோம் எனக் கூறியவர், சுமார் மூன்று முதல் நான்கு நிமிடம் வரை தான் கடலுக்குள் இருக்க முடியும். இதனைத் தொடர்ந்து கடலின் மேல் மட்டத்திற்கு வரும் நாங்கள் படகில் உணவை உண்டு விட்டு கொஞ்சம் தங்களை ஆசுவாசப்படுத்தி மீண்டும் கடலுக்குள் தன் மூச்சில் செல்வோம் என்கிறார்.


ஒருமுறை கடலுக்கு சிப்பி சேகரிக்க சென்றால் ஒருநாளைக்கு குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு முறை தான் கடலுக்குள் தன் மூச்சில் சென்று சிப்பிகளை சேகரிக்க முடியும், அவ்வாறு சேகரித்த சிப்பிகளை மேலே கொண்டு வந்து அதை அரசு அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டும். தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் உள்ள முத்துச்சிப்பி குடத்துக்கு சென்று அங்கு சிப்பிகளை அதற்காக அமைக்கப்பட்டுள்ள களங்களில் ஒவ்வொன்றாக சுத்தப்படுத்தி முத்துக்களை சேகரிப்போம் என்று கூறும் இவர் 1952 காலகட்டங்களில் முத்துக்குளி தொழிலில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குளி வீரர்கள் சுமார் 100 பேர் இருந்ததாக கூறுகிறார்.


தூத்துக்குடி முத்துக்கென்று எப்போதும் ஒரு மவுசு இருக்கும் என கூறும் பெரியவர் தனுஷ்கோடி, பவளப்பாறைகளுக்கு அடியில் ஒளிந்து கொண்டிருக்கும் சிற்பிகளை சேகரிப்பது மிகவும் கடினமான காரியம் தான் என்கிறார். மழைக்காலம் முடிந்ததும் சிற்பிகள் கூட இருக்கும் இடம் தெரியும். அங்கே படகில் சென்று முத்துக்குளித்தலில் ஈடுபடுவோம். எடுத்து வரும் முத்து சிப்பிகள் எங்களுடனே வரும் அரசு அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். அவர் முத்து சிப்பி கூடத்திற்கு அழைத்து செல்வார். சிப்பி கூடத்தில் அதற்கென இருக்கும் தளங்களில் சிப்பிகளை உடைத்து முத்துகளை சேகரித்து அரசிடம் ஒப்படைத்து விடுவோம் என்றார்.


சங்கு குளிக்க சென்றால் கூலி 10 ரூபாயும், முத்துக்குளிக்க போனால் ரூ.15ம் கூலியாக கிடைக்கும் என்கிறார். மழைக்காலத்தை தொடர்ந்து முத்துக்குளித்தொழில் நடைபெறும் என்பதால் ஓரளவு கூலி கிடைக்கும், பிற சமயங்களில் கடலுக்கு மீன்பிடிக்க செல்வோம் எனக்கூறும் இவர், என்னுடன் பணிபுரிந்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை எனக்கு ஒரு பெரியவர் நாங்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக ஓய்வூதியம் கேட்டு அரசுக்கு மனு அளித்தோம் இன்று வரை அதற்கு விடை தெரியல என்கிறார்.

Thanks:www.tamil.abplive.com

வடுகப்படையுடன் பரதவர்



வடுகப்படை எதிர்த்த திருநெல்வேலி பரதவர்..!
(மறைக்கப்பட்ட வரலாறு)
 
ஒரு நாட்டின் மன்னரையும், அவரது படையையும் வேற்றரசன் படைக் கொண்டு வந்து வீழ்த்திய பிறகு, தான் வீழ்த்திய மன்னரின் குடிகள் அனைத்தின் மீதும் அவன் அதிகாரம் செலுத்த தொடங்குவான். ஆனால் வீழ்த்தப்பட்ட மன்னரின் குடிகளுள் போர்செய்யவல்ல தாட்டியமும், வீரமும் இருந்த குடி மட்டும் புதியவரின் ஆட்சியை ஏற்க மறுத்து தங்களது நிலப்பரப்பில் தனியரசாக இயங்க தொடங்குவர். ஏனைய குடிகள் அப்புதியவரின் ஆட்சியை ஏற்றுக்கொள்ளவர்.

விஜயநகர ஆட்சியில் தமிழகத்தில் பல்வேறு தரப்பினர்களின் எதிர்ப்புகள் இருந்தது. அதனை சரிசெய்வதற்காக விசுவநாத நாயக்கர்(1529-63) என்பவரை மதுரையின் ஆட்சியாளராக கிருஷ்ணதேவராயர் நியமிக்கிறார். விசுவநாத நாயக்கரின் மதுரை அரசை பலப்படுத்தி பிரச்சினைக்குரிய திருநெல்வேலியை கைப்பற்ற "வித்தாலராயர்" என்பவர் தலைமையில் விஜயநகர படைகள் கி.பி. 1544 முதல் திருநெல்வேலியில் படையெடுக்க தொடங்கினர்.

இக்காலத்தில் தெற்கு திருநெல்வேலியை ராமவர்மா என்பவர் ஆட்சி செய்து வந்தார். இவர் தம்பி மார்த்தாண்ட வர்மா திருவிதாங்கூரின் ஆட்சியாளராக இருந்தார். கி.பி.1547ல் ராமவர்மா தனது அரசை பாதுகாக்க தனது ராஜ்யத்தின் வட எல்லையான குன்னத்தூரில் ஜனவரி 7 ஆம் தேதி தனது தம்பி மார்த்தாண்ட வர்மாவுடன் முகாமிட்டிருந்தார்.

இதன்பிறகு தனது ராஜ்யத்தின் வடபகுதியை விஜயநகர படைகளிடம் இழந்துபோன ராமவர்மா ஏப்ரல் 17 ஆம் தேதி ஏர்வாடியில் தனது தம்பியுடன் முகாமிட்டிருந்தார். ஜுன் - ஜூலை மாதங்களில் விஜயநகர படைகளும் - ராமவர்மா, மார்த்தாண்டவர்மா கூட்டு படைகளும் தெற்கு திருநெல்வேலியில் கடுமையாக மோதிக் கொண்டிருந்தனர்.

அச்சமயத்தில் 'பல்டாசார் நூநெஸ்' என்னும் போர்சுகீசிய ஏசுசபை பாதிரியார் பரதவர்களுடைய பாதுகாப்பு பெற்று அவர்களுடைய கிராமம் ஒன்றில் கோவிலில் தங்கியிருந்தார். விஜயநகர படைத் தளபதி திருநெல்வேலி பரதவர் மீது தனக்கு அதிகாரம் இருப்பதாக காட்டிக் கொள்ள அவர்கள் பாதுகாப்பு பெற்று தங்கியிருந்த மேற்கூறிய ஏசுசபை பாதிரியாரை சிறையெடுத்துவர தனது வீரர்களை அங்கு அனுப்பி வைத்தான்.

விஜயநகர வீரர்கள் ஈட்டி, வில், துப்பாக்கிகளுடன் பரதவ கிராமத்துக்குள் புகுந்து கோவிலுக்குள் நுழைந்து நான் மேற்சொன்ன "பல்டாசார் நூநெஸ்" பாதிரியாரை சுற்றி வளைத்து அவரை கைது செய்து தங்கள் படைத் தளபதியிடம் கொண்டு சென்றனர். அவ்வூர் பரதவர்கள் தங்களை பகைத்த விஜயநகர படைத் தளபதி மீது போர் தொடுக்க வளைதடி, போர் வாள் உட்பட போராயுதங்கள் அனைத்தையும் ஏந்தி அணிவகுத்து நின்றனர். பிறகு அருகில் இருந்த பரதவர் கிராமம் ஒன்றுக்கு படைத்துணை வேண்டி தூதனுப்பினர். அங்கிருந்த பரதவர்களோ உடனடியாக கைத்தாளக் கருவி - போர் முரசடித்து அணிவகுத்து அவ்விடத்திற்கு வந்தனர்.

இப்படி பரதவர்கள் பெரும்படையாக வந்து விஜயநகர படைமுகாமை தாக்கினர். விஜயநகர தளபதியோ பாசறையில் அமைந்துள்ள தனது வீட்டினுள் சென்று ஒழிந்து கொண்டான். பரதவர்கள் அவன் வீட்டை முற்றுகையிட்டனர். விஜயநகர தளபதி இதன்பிறகு எப்படியோ வீட்டை விட்டு வெளியேறி அருகிலுள்ள ஒரு கோவிலுக்குள் சென்று தாழ்பாள் இட்டுக் கொண்டான்.

இதே சமயம் அவ்வூர் பரதவ பெண்கள் விஜயநகர பாசறைக்குள் புகுந்து அங்கு சிறை வைக்கப்பட்டிருந்த பாதிரியாரை விடுதலை செய்தனர். இருப்பினும் தங்களை பகைத்த விஜயநகர தளபதி இருக்குமிடம் அறிந்து அவனை வெட்டி கொலை செய்ய கோவிலுக்கு விரைந்தனர் பரதவர்கள். பாதிரியார் இதனை அறிந்து விஜயநகர தளபதியை கொலை செய்யாமல் திரும்பி வருமாறு பரதவர்களை இரண்டு மூன்று முறை கேட்டு கொண்டதின் பேரில் அன்று விஜயநகர தளபதி பரதவர்களின் வாளுக்கு தப்பினான்.

இதன்பிறகு ஆகஸ்ட் 13 ஆம் தேதி அன்று விஜயநகர பேரரசுடன் நடந்த அமைதி உடன்படிக்கையின்படி தனது திருநெல்வேலி பகுதியை ராம வர்மா இழந்தார். இவர் தம்பி மார்த்தாண்ட வர்மா தனது ராஜ்யத்தின் அரணாக இருந்த மேற்கு தொடர்ச்சி மலையையும் அதன்மீது அமைக்கப்பட்டிருந்த கோட்டையையும் விஜயநகரத்திடம் இழந்தார்.

திருநெல்வேலி கொஞ்சம் கொஞ்சமாக விஜயநகர வடுகர்களிடம் வீழத் தொடங்கியது. "மனுவேல் டி மொரையஸ்" என்னும் போர்சுகீசியர் கி.பி. 1549ல் ஜனவரி 3 ஆம் தேதி தான் எழுதிய கடிதத்தில் பரதவர் நிலப்பரப்பை பரதவர் ராஜ்யம் என்றே குறிப்பிடுவதன் மூலம் விஜயநகர படையினரால் ஆக்கிரமிப்புக்குள்ளான திருநெல்வேலியில் பரதவர்கள் தனியரசாக இயங்க தொடங்கினர் என்பதனை நாம் ஆதாரபூர்வமாக அறிய முடிகிறது.

திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூர் கிழக்கில் பிரம்மதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில்... .

"கி.பி. 1550ல் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி பேரரசர் சதாசிவராயர் ஆட்சியில் இராமப்ப நாயக்கர் என்பவர் கைலாசமுடைய மெய்யனார் கோவிலுக்கு ஒரு கிராமத்தையும், அதன் வருவாயும் வித்தால ராயரின் சேவைக்காக வழங்கினார். அந்த கிராம வருவாயின் ஒரு பகுதி மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மேற்கூறிய கோட்டையின் பராமரிப்புக்கு செலவிடப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.பி. 1551ல் விஜயநகர வடுகர்கள் திருநெல்வேலியை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்த நிலையில் பரதவர்கள் மீது தங்களுக்கு அதிகாரம் இருப்பதாக காட்டிக்கொள்ள அதே வருடம் கடைசி மாதத்தில் பரதவர் கிராமம் ஒன்றுக்குள் புகுந்து அவர்கள் பாதுகாப்பு பெற்று அங்கு தங்கியிருந்த ''பவுலோ டி வாலே'' என்னும் இத்தாலி தேச ஏசுசபை பாதிரியாரை சுற்றி வளைத்து கைது செய்து நான் மேற்கூறிய அவர்களது கோட்டைக்கு கொண்டு சென்று அங்கு சிறை வைத்தனர்.

சரியாக ஒரு மாதம் கழித்து பரதவர்கள் மேற்கு தொடர்ச்சி மலை மீது அமைந்துள்ள அக்கோட்டையை தாக்கினர். பரதவர்கள் வந்து அக்கோட்டையை தாக்கியதில் விஜயநகர வடுகர்கள் நாளா பக்கமும் தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள சிதறி ஓடினர். இதன்பிறகு விஜயநகர கோட்டையை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பரதவர்கள் அக்கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்த பாதிரியாரை விடுதலை செய்தனர்.

०००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००

போருக்கான காரணங்கள்:-

பரதவர் Vs விஜயநகர வடுகர் யுத்தம் திருநெல்வேலியில் நடக்க காரணம் பற்றி தெரிந்து கொள்ள முதலில் அத்திருநெல்வேலியில் கி.பி. 1544ல் விஜயநகர சேனைகள் அங்கு படையெடுத்து வரும் முன் பரதவர்களின் அதிகார நிலை குறித்து தெரிந்து கொள்ளல் அவசியம்.

கி.பி. 1542ல் திருநெல்வேலி வந்திருந்த ஸ்பானிஷ் மிஷனரி புனித பிரான்சிஸ் சேவியர் தனது குறிப்பில்...

"பரதவ கிராமங்கள் தனி அரசாங்கத்தை கொண்டிருக்கிறது, அங்கு மன்னர்களின் தலையீட்டின்றி முழு அதிகாரமிக்கவர்ளாக பரதகுல தலைவர்களே இருக்கின்றனர்" என்று குறிப்பிடுகிறார்.

ஏசுசபை பாதிரியார்கள் உலகில் எங்கு சென்றாலும் அந்த அந்த நிலப்பகுதியின் ஆட்சியாளர்களின் பாதுகாப்பு பெற்றே அவர்கள் தங்கியிருப்பது வழக்கம். திருநெல்வேலி வந்திருந்த ஏசுசபை பாதிரிமார்கள் பரதவர்களை அவர்களின் நிலப்பகுதியின் ஆட்சியாளராக கருதி அவர்கள் பாதுகாப்பில் தங்கியிருந்தது அத்திருநெல்வேலியில் புதிய சக்தியாக உருவெடுத்து கொண்டிருந்த விஜயநகர வடுகர்களுக்கு பிடிக்கவில்லை.

திருநெல்வேலி பரதவர் மீது தங்களுக்கு அதிகாரம் இருப்பதாக காட்டிக்கொள்ளவே விஜயநகர வடுகர்கள் பரதவர் கிராமங்களுக்குள் புகுந்து பரதவர் பாதுகாப்பில் தங்கியிருந்த ஏசுசபை பாதிரியார்களை சிறையெடுத்தனர். இதே விஜயநகர வடுகர்கள் ஏசுசபை பாதிரியார்களுக்கு தங்களது ஆட்சிபகுதியில் பாதுகாப்பு கொடுத்து தங்கியிருக்க செய்த சான்றுகள் எனலாம்.

எடுத்துக்காட்டாக சொல்லவேண்டும் எனில் ராணி மங்கம்மாள், தஞ்சாவூர் விஜயராகவ நாயக்கர், குமாரவாடி நாயக்கர், எட்டையபுரம் நாயக்கர் ஆகியோரை சொல்லலாம். தென்பாண்டி பரதவரை போலவே வடபாண்டியில் அவர்கள் நிலப்பகுதியில் அதிகாரமிக்கவர்களாக இருந்த கள்ளர்களின் பாதுகாப்பு பெற்று தங்கியிருந்த ஏசுசபை பாதிரிமார்களையும் விஜயநகர வடுகர்களின் பிரதிநிதிகள் சிறையெடுத்துள்ளனர். அதற்கு கள்ளர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

எடுத்துக்காட்டாக...

விஜயநகர பிரதிநிதிகளில் கடைசியானவரான திருமலை நாயக்கர் காலத்தில் அவருடைய ஆளுநராக திருச்சிராப்பள்ளியில் குப்பை ஆண்டி என்பவன் இருந்தான். இந்த குப்பை ஆண்டியின் மணியக்காரன் ஒருமுறை கள்ளர்கள் மீது தனக்கு அதிகாரம் இருப்பதாக காட்டிக்கொள்ள வலிமையான படையுடன் காந்தளூர் என்னும் கள்ளர் கிராமத்துக்குள் புகுந்து கள்ளர்களின் பாதுகாப்பில் அங்கு தங்கியிருந்த ஏசுசபை பாதிரியாரை சிறையெடுத்தான். சினந்தெழுந்த கள்ளர்கள் ஒன்றினைந்து தங்களை பகைத்த "குப்பை ஆண்டி" மீது போர் தொடுத்தனர்.

००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००

Foot Notes:-

கி.பி. 1546 முதல் கி.பி. 1552 வரை பரதவர்கள் திருநெல்வேலியில் விஜயநகர வடுகர்களுடன் போரிட்டது பற்றிய ஆதாரம்:

St Francis Xavier His life, His Times Vol III by Jesuit George Schurhammer Pg 332,333,518 and 525
Oriente Conquista Vol l by Portuguese Jesuit Fransisco de Sousa Pg 285
French Jesuit Leon Besse, la mission du Madure. Pg 381-2

1.ராணி மங்கம்மாள், 2.தஞ்சாவூர் விஜயராகவ நாயக்கர், 3.குமாரவாடி நாயக்கர், 4.எட்டையபுரம் நாயக்கர் ஆகியோரின் பாதுகாப்பில் ஏசுசபை பாதிரிமார்கள் தங்கியிருந்த ஆதாரம்:

1.Bertrand, la Mission du Madure Vol III Pg 60-76.
2.Travels of Jesuits in to Various Parts of the World by John Lockman. Pg 460-68.
3.French Jesuit Father Leon Besse, la Mission du Madure. Pg 127-34
4.Bishop Robert Caldwell, History of Tinneveli. Pg 236-7

கள்ளர்களின் பாதுகாப்பில் ஏசுசபை பாதிரியார் தங்கியிருந்ததையும், பிறகு வடுகர்களால் சிறையெடுக்கப்பட்டதையும், கள்ளர் அவர்கள் மீது போர் தொடுத்ததையும் பற்றிய ஆதாரம்:

A General History of Pudukkottai State by S. Radhakrishna Aiyer Pg. 107





















- UNI

திரளி முறி


மீன் குழம்பு வைக்கும்போது மீனைத் துண்டு துண்டாக வெட்டி அவற்றை மண்சட்டியலிட்டு, தேங்காய், மிளகாய், கறிச்சரக்குச் சேர்த்து அரைத்த கூட்டை இட்டு நீர்விட்டுக் குழம்பாக்கிப் புளியும் சேர்த்து அடுப்பில்வைத்துக் கொதிக்க வைத்து எடுப்பார்கள். இது ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்னர் நடந்த செய்தி. தற்காலத்தில் மீன்குழம்பு வைப்பதிலோ பலவிதம். குழம்பில் உள்ள மீன்துண்டுகளை முறி என்று சொல்வதுதான் தற்போதைய பிரச்சனை. திரளி முறி என்ற பதத்தைச் சில தினங்களுக்கு முன் இணையத் தளத்தில் பார்த்தபோது எனது நினைவுக்கு வந்தது இந்த மீன்குழம்பும், மீன் முறிகளும்தான். மீனைத் துண்டு துண்டாக வெட்டி எடுக்கும் போது அந்தத் துண்டுகளை முறி என்று சொல்லுவது வழக்கம். அதுவும் திரளி முறி என்றவுடன் திரளிமீனின் முறி என்பது என்மனதில் தட்டியது. திரளி ஒருவகை மீன். அதிலே நானறிந்த மட்டில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று கருந்திரளி மற்றையது வெண்திரளி. கருந்திரளியின் செதில்கள் கருமையாக இருக்கும். வெண்திரளியின் செதில்கள் வெள்ளை வெளீர் என்றிருக்கும்.

28.07.10 அன்றைய தமிழ் நெற் இணையத்தளத்தில் வெளியாகி இருந்த கட்டுரையில் தென் இலங்கையின் ஹம்பாந்தோட்டைப் பிரதேசத்தில் திசமாறகம என்னும் இடத்தில் சில காலத்துக்கு முன்னர் ஜெர்மனிய அகழ்வாய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கலவோட்டுத் துண்டின் விபரங்களைப் படித்தேன். இது சூளையில் சுட்டு எடுக்கப்பட்ட ஒரு மட்பாண்டத்தின் உடைந்த துண்டு. இக்கலவோடு 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் அதிலே தமிழ் பிராமி எழுத்துக்களிலே “திரளி முறி” என்று எழுதப்பட்ட வாசகம் இருப்பதாகவும் அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த ஓட்டின் தொன்மையிலும் அதில் எழுதப்பட்டிருக்கும் தமிழ் பிராமி எழுத்திலும் அகழ்வாராய்ச்சி நிபுணர்களிடையே அதிக கருத்து வேற்றுமை காணப்படுவதாகத் தெரியவில்லை. ஆனால் அது எழுதப்பட்டிருக்கும் முறையிலும், அந்த வாசகத்தின் விளக்கத்திலும் சிறிது வேற்றுமை இருக்பதாகத் தெரிகிறது.

இதுபற்றிய கருக்து முதலில் 24.06.10 அன்று வெளியாகிய இந்தியாவின் The Hindu பத்ததிரிகையில், தமிழர்களிடையே அகழ்வாராய்ச்சியில் மேதை எனக் கருதப்படும் ஐராவதம் மகாதேவன் அவர்களால் வெளியிடப்பட்டது. தமிழ் நாட்டிலும் பிற இடங்களிலும் மட்பாண்ட ஓடுகளில் தமிழ் பிராமி எழுத்துக்களால் எழுதப்பட்ட பழைய கண்டுபிடிப்புகளைப் பற்றி விளக்கிக் கூறிய அவர் அவ்வகைப்பட்ட கண்டுபிடிப்புகளால் சாதாரணமாக வாழ்ந்த பழந்தமிழ் மக்களிடையேயும் எழுத்தறிவு இருந்திருக்கிறது என்றும் அவர்கள் உபயோகித்த எழுத்து வடிவம் தமிழ் பிராமி என்றும் எடுத்துக் காட்டியிருந்தார்.
இவ்வாறு விபரிக்கின்ற போதுதான் மகாதேவன் அவர்கள் திசமாறகமவில் கண்டுபிடிக்கப்பட்ட “திரளி முறி” வாசக ஓட்டைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தார். இந்த வாசகத்தை விளக்கிய அவர் அதை “written agreement of the assembly” ” என்று கூறி தென் இலங்கையில் கி.மு. 300 ஆண்டளவில், உள்நாட்டுக் கடற்துறைத் தமிழ் வியாபாரிகள் ஒரு குழுவாக இயங்கி இருக்கின்றனர் என்று தெரிவித்தார்.

இலங்கையில் திஸ்ஸமகாராமாவில் கிடைத்த
தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடு.

இலங்கை பற்றி செய்தி ஆகையால் இது இலங்கையைச் சேர்ந்த அகழ்வாராய்ச்சி நிபுணர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தக் கண்டு பிடிப்பைப் பற்றிக் கருத்துத் தெரிவித்த அகழ்வாராய்ச்சி நிபுணர் கலாநிதி பொன்னம்பலம் இரகுபதி அவர்கள், ஐராவதம் மகாதேவன் அவர்களுடைய கூற்றுகளை மறுக்க முடியாதபோதும் அந்த வாசகத்தை “குழுமத்தின் எழுத்துருவில் அமைந்த உடன்படிக்கை – அதாவது written agreement of the assembly” என்று கொள்வதில் இடர்ப்பாடு இருப்பதாயும் அதனை வேறு விதமாகவும் கொள்ள இடமுண்டு என்று கூறியிருக்கிறார். திரளி என்ற சொல்லுக்கு, திரள், திரணை, திரளி மீன் என்ற பொருள்களும், முறி என்ற சொல்லுக்கு துண்டு. கூட்டு, பகுதி என்ற பொருள்களும் உண்டென்று சுட்டிக்காட்டுவதோடு சாதாரணமான ஒரு வீட்டுப் பாவனை மட்பாண்டத்திலே குழுமத்தின் ஒப்பந்தம் என்ற வாசகம் வருவதற்கு வாய்ப்பில்லை என்றும் கூறியிருக்கிறார்.

மேற்கண்ட இந்தக் கலவோடு ஒரு அளவுப் பாத்திரமோ, அல்லது சோற்றுத் திரணை வைக்கும் பாத்திரத்திரமோ அல்லது தட்டையான சிட்டியோ போன்ற ஒரு ஏதனத்தின் உடைந்த துண்டாக இருக்கலாம் என்றும் இது சாதாரண மக்களிடையே பாவனையில் இருந்த ஒரு எதனத்தின் பகுதியாக இருக்கலாம் என்றும் எனவே தென் இலங்கையில் தமிழர்கள் அக்காலத்திலிருந்தே வாழ்ந்திருக்கிறார்கள் என்பதைச் சுட்டுகிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.

நாட்டு வழக்காகத் தமிழிலே ஒரு பழமொழி உண்டு. “ஆமையோடு முயல் முட்டை இடுமா?” என்பதுதான் அந்தப் பழமொழி. மேற்கண்ட இரு அகழ்வாராய்ச்சி நிபுணர்களும் அப்பொருள் விளக்கத்தில் பெரும் ஆமைகள் போன்றவர்கள். நானோ ஒரு குட்டி முயல். எனக்குத் தெரியாத ஒரு விடயத்தைப் பற்றி எழுதப்போவது ஆமைகளோடு முயல் முட்டை இடப்போவது போலத்தான் இருக்கும். இருந்தாலும் இப்பெரியார்களின் ஆராய்ச்சி விளக்கங்களைப் படித்தபோது இவர்கள் எத்துணை சிரத்தையோடும், கவனத்தோடும் இந்த ஆராச்சிகளில் ஈடுபடுகிறார்கள் என்றும் அவர்களுடைய பணியானது எவ்வளவு நுட்பமானதும், பொறுமையானதும், பெறுமதியானதும் என்று எனக்குத் தோன்றியது. மேலே குறிப்பிட்ட இரண்டு கட்டுரைகளும் ஆங்கிலத்தில் இருக்கின்றன. இவற்றைப் படிக்காதவர்கள் வசதியாயின் ஒருமுறை படித்தால் அவற்றின் பெறுமதி புலனாகும்.


கட்டுரைகளைப் படித்தபின் என் கற்பனைக் குதிரை பாயத் தொடங்கியது. அது காட்டுக் குதிரைப் பாய்ச்சல்தான் இருப்பினும் அதையும் கூறிவிடுகிறேனே. மீன், இறைச்சி, முதலிய மச்ச மாமிசத் தயாரிப்புகள் பழுதுபடாமல் நெடுநாட்கள் இருப்பதற்குப் பழங்காலத்தில் தேனிலும், புளியிலும் மட்பாண்டங்களில் இட்டுவைப்பது வழக்கம். அந்த வகையிலே பலவகைப் பட்ட மீன்களின் துண்டுகளை வௌ;வேறாக வெட்டி வௌ;வேறு மட்பாண்டங்களில் இட்டு அவற்றை அடையாளப் படுத்துவதற்காக அந்த ஏதனங்களின் அப்போது நடை முறையில் இருந்த தமிழ் பிராமி எழுத்துக்களில் எழுதிவைத்திருக்கலாம். இது வியாபார முறையில் செய்ப்பட்டதாகவும் இருக்கலாம் அல்லது தனிப்பட்ட வீட்டுப் பாவனைக்குச் செய்யப்பட்தாகவும் இருக்கலாம். தற்காலத்தில் நாம் மிளகாய்த்தூள, சரக்குத்தூள் என்று ஏதனங்களில் எழுதிவைத்தல் போல இருக்கலாம். மீன் வகைகளைத் வறட்டல் தீயல்களாக வைத்து வௌ;வேறு ஏதனங்களில் இட்டு அடையாயப் படுத்தியிருக்கலாம். “திரளி முறி”, “கொய் முறி” “சுறா முறி” என்று பலவகை இருக்கலாம். அவ்வகைப்பட்ட ஏதனங்கள் ஒன்றின் உடைந்த துண்டுதான் இந்தத் “திரளி முறி” என்ற வாசகத்தைக் கொண்ட கலவோடாக இருக்கலாம் என்று என் காட்டுக்குதிரைக் கற்பனை பாய்ந்தது. இது கற்பனைதான் உண்மை ஆராய்ச்சி விளக்கம் அல்ல. அதை நிபுணர்கள் தந்திருக்கிறார்கள். படித்துப் பயன் பெறவேண்டியது நமது கடமை.

தொகுப்பு- நா.மகேசன்
புகைப்படம்- முத்தமிழ் வேந்தன்

The roots and tales of Bharathas in Sri Lanka



Sri Lankan culture has been greatly influenced by India, owing to the geographical proximity of the two countries. The narrowest distance between the two is a strip of 50 kms between Dhanushkodi in India and Thalaimannar in Sri Lanka, which was believed once to be connected by a stone bridge that the great Indian epic ‘Ramayana’ claims was built by monkeys. Arial mapping has confirmed the existence of the Rama’s Bridge or Rama Setu. The close connection led to many exchanges between the two countries – people arriving on each shores over the years, and the merging of cultures.

A small community of predominantly Catholic people of Indian origin occupy the western coastal belt from Mannar to Chilaw and Negombo to Colombo. They are believed to be descendants of Tamil-speaking Paravar people of Southern India who had once been Hindus. An estimated 1288 Bharathas are currently living in Sri Lanka, although they are a slowly vanishing group, who were only recognized as a unique ethnic group in 2001.

Pearl fisheries in Mannar, 15th cen.

Pearl diving is where the connection of the Bharathas to the Island begins. Legend has it that in the 1415, they came from Mohenhadaro led by Aryan warriors and 16 lieutenants to drive away the ‘Mukkuwas’ or Arab horse traders, ensconced in Puttalam, who were monopolizing the very valuable pearl trade. Incensed by an encroachment on what they considered to be their domain, the Bharathas, using their sea-faring skills, sailed across the Indian Ocean to make regular forays into this monopoly. Over time, they completely displaced the Arabs, and as a reward, the King of Sri Lanka at that time, King Parakramabahu VI of Kotte welcomed them as his subjects. Integrating very well with the local communities, they initially settled down on the coast at Mannar where many of the descendants of the original families still remain.

The last group of Paravar from south India came and settled in the British times. During the cotton boom in 1850-60 more Paravar migration came from South India mainly from Paravaroor (towns) Alanthalai, Manapad, Punniyakayal, Tutucorin, Vembar, Vepar and Veerapandiapatnam from South India settled in Sri Lanka. They had the Portuguese connection so it made them comfortable to settle in Sri Lanka. Many, centuries later, how and when they came seem irrelevant, for they have well and truly integrated themselves into Sri Lankan society.

Fernando is the most common Bharaha surname. The Fernandos hailing from the parish of Vembar in South East India, were the converts of the Jesuits in the 16th century whose faith was enkindled by St. Francis Xavier. Through thick and thin, they cherished their faith even as they spread their wings to distant shores, to reach Mannar, Negombo, and Colombo and beyond.

Coonghe, Pinghe, Moraes, Croos, Dabrera, Sosa, Fernandos, Rodrigos, Paldano, also Feldano, Figurado, Mirando, Paiva, Victoria and Raj Chandra – all these names that may sound familiar to Sri Lankans are rooted in the Bharatha community. Their names also link them immediately to the Portuguese and Catholicism. Though their ancestors were Hindus, they were compelled to convert to Catholicism when Portuguese colonial missionaries came to Ceylon, and were bestowed Portuguese names. Vestiges of Hindu culture still remain, for families still tie the thali round the bride’s neck during the marriage ceremony. The older generations speak mostly Tamil. There are four family names of non-Christian origin still in common use, these being Kalingarayan, Villavarayan, Poobalarayan and Rayan. These names are thought possibly to have their origin in arayan, which was used by Tamil fishing groups.

In Negombo, I meet an elderly gentleman who has a different story to relate. Alensis Brendan Sosa claims “the Bharatas or Bharatakula as a relatively prosperous merchant group from India that settled amongst the Sinhalese in the Negombo area”. They came from Tuticorin, a port city in Tamil Nadu presently known as Thoothukudi.

According to Sosa, his ancestor Gabriel de Croos arrived in Negombo and set up a business in 1800s. His son, John Leo de Croos, married Barbara Coonghe and they had two daughters Rosa Isabelle de Croos and Mary Christina de Croos. Soon after giving birth to Mary, Barbara died and Clara, Sosa’s grandmother cared for her. The two sisters were boarded at the Kandy convent where they received an education. John Leo was a land owner, a very wealthy man. Apart from setting aside inheritance for his two daughters, he left a large portion of his wealth to the poor. One story relates, a thousand acres of coconut land was entrusted in the care of the parish priest of St Mary’s church to be given as dowries to poor women and land to widows. Sosa said that we should visit the St Mary’s church and see the beautiful marble altar made in the memory of John Leo de Croos and his wife in 1922.

St Mary’s Church in Negombo – 1874

Located on Grand Street in the center of Negombo is the St. Mary’s Church – one of the largest cathedrals in Sri Lanka. This impressive church was built in neoclassicism style with columns and plain walls around 1874. Its ceilings are painted with alabaster images of many saints. A wedding ceremony had just ended, and still a few visitors decked in shiny dresses and smart suits were lingering along the aisles with their children trailing behind. The church was decorated beautifully with flower arrangements, but elaborate carvings, statues and paintings outshone all of this. At the nave of the Cathedral was a marble slab which had been donated in memory of the late John Leo de Croos by his family. The priest said the marble cost a lot of money even back then, and that it was shipped from Italy as requested by John de Croos in his last will.

The altar at the center of the church brought from Italy in 1922

The Bharathas consider St. Joseph as their patron saint and celebrate the feast with pomp and pageantry at St. Mary’s Church.

Maria Stella College, Negombo – 1924

The two daughters of John de Croos who were devout Catholics dedicated their lives to serving the community. They donated a 10 acre land at the Copra junction (the place where copra was collected to be transported to Colombo) in Negombo to the Marista brothers to build a secondary school for boys. The school that began in 1921 as part of St Mary’s college was renamed Maris Stella College in 1924.

To match the school’s new name Maris Stella which means “the star of the sea” the college crest was designed to depict a sailing ship with a star at the top, with a motto “Ite Para Tutum” meaning “show us the way”. The two letters “A” and “M” stands for Ave Maria the first two words in Latin of the Catholic prayer- Hail Mary. Today, Maris Stella is a leading boys schools in the Western Province.

Community service has always been their second nature, with even the Chapel at St Bridget’s Convent being donated by a Bharatha family, as well as the “Lin Hathara” public baths in Kochikade.

Sosa recollects the generosity of his ancestors. He said “Bharathas in Negombo built a cemetery and an elder’s home using their own wealth. Next to the elder’s home is the community hall where people of our community meet regularly”.

Chapel at the Bharatha Community Cemetery

The Baharatha cemetery is a place of tranquility and reverence with a small chapel located at the center. Neat rows of graves line the pathway. Elaborate grave stones in marble indicated familiar Bharatha surnames like Croos, Coonghe Moraes and Dabrera. This land has been a donation by John Leo de Croos as mentioned at the chapel entrance.

According to Sosa, the Bharathas later moved away from their traditional sea-faring roots into commerce. The first prominent Colombo trader was S. Miguel Fernando, a Milliner and Draper who specialized in gents outfitting. His business was located at 106, Main Street in Pettah, now the commercial and trade hub of the city This was soon followed by what became iconic merchant icons like M.P Gomez, J.L. Carwallio and F.X Pereira’s- the first departmental store in Ceylon, which stood at 144 Main Street, Pettah. Many are the stories abound of Christmas shopping not being complete without a visit to buy crackers, cake ingredients and of course, liquor. The Bharathas also left a legacy which became historical in Sri Lanka – the kerosene bullock cart. Starting from importing onions from India, they acquired the agency to distribute petroleum products and even exported kerosene to India. There were over 50 “Rising Sun” petrol and oil depots throughout the island, all of them run by Bharatha business owners. A barrel mounted on a bullock cart was widely used in kerosene delivery in the 1950s and 1960s. A bell informed approaching of kerosene cart. Mr P V Anthonis father of well-known surgeon Dr P R Anthonis initially sold Kerosene in a Bullock cart. Eventually when he became more prosperous he had a standalone establishment selling kerosene. This trading success encouraged the Bharathas to venture into other commercial ventures and soon they were into Coconut farming, Land ownership and Arrack licensing moving on the coast from Mannar to Panadura and inland into Kandy and Kurunegela.

Bharatha families get together to celebrate occasions such as Christmas. Even those who are living overseas come back to Sri Lanka to be reunited with their families. Sosa’s daughter Diordre says “The black pork curry Bharathas make is unique, we cook black pork curry with lots of pepper – a must for any festive occasion”. The black pork curry is so called because of the spices and curry power used for the marinade. Tamarind is used to add distinct sour notes to curry, and even a hint of sweet and fruity taste. Explaining the recipes handed down from her grandmother, she says they also have a special ‘moju’ rice-puller (a pickle) made of prawns or dried fish. “Unlike other communities we use equal quantities of onion and maldive fish in our seeni sambol to make it really crunchy,” she adds.

Crab curry is another specialty at Bharatha family get-togethers, especially on Sundays. This dish goes all the way back to their roots in fishing, where the mud crabs abundant in lagoons were brought home live with their pinchers tied up with strings, to be boiled and cooked. After boiling the crab for 10 minutes, the crabs are cut into 2 or 4 pieces depending on their size.

The curry is spiced with roasted coconut paste, turmeric, curry powder and red chilies, green chilies, onions, ginger, cloves, curry leaves and pandan leaves. Curry powder is an all-in-one powder -it includes dried red chilies as well as all the other spices like Coriander seeds, Fennel, Mustard, Cumin, and Fenugreek in different proportions.

The crab curry originated in the northern regions of Sri Lanka but became popular around the country, mostly in the seaboard areas where fish and other seafood
are staple foods. The dish is served with rice or pittu. The addition of Moringa leaves, an important ingredient to the crab curry, comes from Jaffna. Moringa or “drumstick” leaves are used with crab to alleviate the acidity of the crab. “My grandmother used to add a handful of Moringa leaves to prevent indigestion” added Diordre.

For the second ingredient, grated coconut is roasted in a pan until golden brown and smelling sweet and nutty. Mustard and Cumin is added and the coconut is ground into a thick paste using the pestle and mortar. The tempered and simmered curry is completed by adding the roasted coconut paste and a cup of coconut milk minutes before taking it off the stove. The crab curry is always served with fragrant yellow rice, green salad and lentil curry as it was done in the past.

Sosa recollected some of the sweetmeats his mother used to make for occasions. Chatti dosi was his favourite. “It’s made with rulang, ghee, sugar, cadju and raisins. Another was profegi -a sweet fried in oil, like a cutlet and Bharata women make all those Portuguese sweetmeats like bibikkan and kavun,” he added. Three days before a marriage, all the relatives would get together and cook kavun, but not take a single bite until the wedding was over. Another custom was to join three athiraha together to ensure a blissful life for the couple.

The two main Bharatha communities in Negombo and Colombo have established their own Associations to preserve the unique culture. The Negombo Bharatha Association was started in 1937. Nicholas Emmanuel De Croos the only son of John de Croos became the first president. The following year the Baharathas in Kotahena also established their own Association through which they organized various social and religious programs during the year to keep the community united and also to keep the present generation aware of the history and traditions of Bharathas.

There is a Basilica dedicated to “Our Lady of Snows” in Tuticorin, India built in 1582 A.D. by the Portuguese. A replica of the Saint’s statue was brought by the Bharathas to Negombo. They set it up in front of the Periyamulla church, under the cover of a tiny attic to be honoured by the public. The Bharathas in Colombo consider the “Our Lady of Snows” their Patron Saint. A grand feast is celebrated annually at St Philip Neri’s Church in Pettah. Bharathas are staunch Catholics who have done a lot for the community. Because they venerate “Our Lady of Snow” Mr. A P Gomez made replicas of the statue in Tuticorin and installed at all the churches patronized by Bharathas in Colombo.

Bharathas never forgot their Indian roots. The connection between India has been strong for many centuries. Mr I. X. Pereira built a Rest Home in Tuticorin for the benefit of Bharathas who came from Ceylon or the outlying villages. It is known today as the Bharatha Home. The first Bharatha Conference was held in Tuticorin in December 1915. The 9th Bharatha Conference was held in Colombo, under the presidency of Mr A.L.J. Croos Dabrera in January 1938.

Retired Air Force Officer,
Brendon Sosa
Sosa himself, a retired Air Force office of high rank is proud to have served the country during the civil war for 30 years. He said “The good thing about belonging to a small community is that everybody is known to each other. We have always been living harmoniously with everyone.” He recollects of a family heirloom that his cousin Adrian Coonghe gifted to him in 1996. It was a kastane Adrian had inherited from his grandfather Marcus Coonghe. The kastane is a short sword with a decorative hilt that was once worn as part of the attire of a native headmen. Since Sosa intends to pass on the Bharatha heritage to his grandson, Josua Moraes, he recently gifted the kastane to him. He also encouraged his grandson to join the Negombo Bharatha Association where as a member of the younger generation he can be involved in the community.

The Bharathas proved their success by both integrating into the local communities they settled in, and yet retaining their own unique identity and culture.


A precious heirloom, a kastane handed down for many generations


பரவர் நாட்டு துறைமுகங்கள்



பரவர் நாட்டில் சரக்கு மற்றும் இடைநிலை துறைமுகங்கள்:

பரவர் நாடு இரண்டு உட்பிரிவுகளை கொண்டிருந்தது. வடக்கு பகுதி ஏழுகடற்றுறை என்றும், தென்பகுதி மேல்நாடு என்றும் அழைக்கப்பட்டு வந்தது.

மணப்பாடு, ஆலந்தலை, வீரபாண்டியன் பட்டினம், புன்னைகாயல், தூத்துக்குடி, வைப்பார், வேம்பாரும் அதனை சார்ந்துள்ள பகுதிகளுமே ஏழுகடற்றுறை. மேற்சொன்ன ஏழு ஊர்களிலும் சரக்கு துறைமுகங்கள் இருந்தது. சரக்கு துறைமுகங்கள் இரண்டு செயல்பாடுகளை கொண்டுள்ளது. அவை,

* கப்பல்கள் மூலம் உள்நாட்டு சரக்குகளை இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.

* வெளிநாட்டு சரக்குகளை கப்பல்கள் மூலம் இங்கு இறக்குமதி செய்து, உள்நாட்டில் விற்பனை செய்து கொள்ளலாம்.
 
ஆங்கிலேயர்களின் வருகைக்கு பிறகு தூத்துக்குடி தவிர மீதமுள்ள ஆறு துறைமுகங்களும் செயலிழந்து போயின.

 
०००००००००००००००००००००००००००००००००००००००

மேல் நாடு:

மணப்பாடுக்கு தெற்கே அமைந்துள்ள ஊர்கள் அனைத்தும் மேல்நாடு என்று அழைக்கப்பட்டது, அதாவது இன்றைய கூட்டபுளி வரை. கன்னியாகுமரி கிபி1606 முதல் மேல்நாட்டுடன் இணைந்திருந்தது, அதன் பிறகு மீண்டும் திருவிதாங்கூர் அரசன், கிபி1700 களில் கைப்பற்றி தமது அரசோடு இணைத்து கொண்டான். 

மேல்நாட்டில், ஏழு ஊர்களில் இடைநிலை துறைமுகங்கள் இருந்தது. அவை பெரியதாழை, உவரி, கூத்தன்குழி, இடிந்தகரை, பஞ்சல், பெருமணல் , கன்னியாகுமரி ஆகும். 

இடைநிலை துறைமுகங்கள் மூன்று செயல்பாடுகளை கொண்டது ஆகும்.
அவை,

* கப்பல்கள் இங்கிருந்து சரக்குகளை வேறு கப்பல்களுக்கு மாற்றி ஏற்றி இறக்கி கொல்லலாம்.
* கப்பல்கள் இங்கு நிறுத்தி, பயணத்துக்கு தேவையான தண்ணீர் நிரப்பி, உணவு பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்லலாம்.
* கப்பல்களை பழுது பார்க்க வேண்டுமெனில் இங்கு நங்கூரமிட்டு பார்த்து கொள்ளலாம்.

ஆங்கிலேயர்களின் வருகைக்கு பிறகு இத்துறைமுகங்கள் செயல்யிழந்து போயி மேல்நாட்டு பரதகுல கிராமங்கள் முழுவதுமாக மீன்பிடி தொழிலையே நம்பியிருக்க வேண்டியதாயிற்று.

०००००००००००००००००००००००००००००००००००००००००

சேது நாடு:-

சேது நாடு என்று அழைக்கப்பட்ட இன்றைய இராமநாதபுரம் மாவட்டத்தில், பரவர்களின் ஊரான பெரியபட்டிணம்(இன்றைய முத்துப்பேட்டை பகுதி), மூக்கையூரில் சரக்கு துறைமுகங்கள் இருந்தது.

இதுவும் ஆங்கிலேயர் வருகைக்கு பிறகு செயலிழந்து போனது.
ஆங்கிலேயர்களின் வருகையே பரவர்களின் வீழ்ச்சிக்கு ஆரம்பம்....

००००००००००००००००००००००००००००००००००००००००००

Foot Notes:-

Encounters on the Opposite Coast: The Dutch East India Company and the Nayaka State of Madurai in the Seventeenth Century
Book by Marcus P. M. Vink Pg. 162





- UNI 

ஏழுகடற்றுறையின் சிற்றரசர்கள்




பரதவர் நாட்டு ஏழுகடற்றுறையின் சிற்றரசர்களான பரதகுல தலைவர்கள்:

பரதவர் நாடு இரண்டு உட்பிரிவுகளை கொண்டுள்ளது. வடபகுதி ஏழுகடற்றுறை என்றும், தென்பகுதி மேல்நாடு என்றும் அழைக்கப்பட்டது. ஏழுகடற்றுறையில் பாண்டியபதி ராஜாக்களின் கீழ் சிற்றரசர்களாக இருந்து முத்துக்குளித்தலையும் நடத்தி வந்த பரதகுல தலைவர்களின் அதிகார உச்சமும் அதிகார வீழ்ச்சியையும் பற்றி காண்போம்.

டச்சு தளபதிகளான "வான் ரீடி" மற்றும் "லாரென்ஸ் பைல்" என்பவர்கள் இந்தியா மற்றும் இலங்கையின் டச்சு ஆளுநராக இருந்த "வான் ஜியோன்ஸ்" என்பவருக்கு கிபி1669 ஆம் வருடம் டிசம்பர் 19 ஆம் தேதி தாங்கள் எழுதிய கடிதத்தில்....

"முத்துக்குளித்தலின் முதலாளிகளாக இருந்த பரதகுல தலைவர்களே அந்த முத்துக்குளித்தலின் வருமானத்தை தங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொள்கின்றனர். வலிமைமிக்கவர்களாகவும், செல்வமிக்கவர்களாகவும் இருந்த பரதகுல தலைவர்கள் பகையரசர்களின் படையெடுப்புகளை முறியடித்து தங்களை பாதுகாத்து கொள்ள சொந்தமாக படைவீரர்களும், போராயுதங்களும் தன்னகத்தே கொண்டிருக்கிறார்கள்.

அரசர்கள் என்று குறிக்கப்பட்ட ஏழுகடற்றுறை சிற்றரசர்களான பரதகுல தலைவர்கள்:-

ஆங்கிலேய வரலாற்று ஆசிரியரும் ஏசுசபை குருவானவருமான "ஹென்றி ஜேம்ஸ் கோல்ரிட்ஜ்" அவர்கள் தமது "புனித பிரான்சிஸ் சேவியர் வாழ்க்கையும், கடிதமும்" என்ற நூல் பக்கம் எண் 144 யில்......

"நமக்கு கிடைத்த ஐரோப்பிய ஏசுசபை பாதிரியார்களின் குறிப்புக்களில் பரதகுல தலைவர்களை அரசர்கள் என்றே பதிவு செய்துள்ளனர்" என்று குறிப்பிடுகிறார்.

ஏழுகடற்றுறையின் சிற்றரசர்களான பரதகுல தலைவர்களின் வீழ்ச்சி:-

போர்ச்சுகீசியர்கள் காலம் வரையில் வலிமையாகவும், செல்வாக்குமிக்கவர்களாகவும் இருந்த பரதகுல தலைவர்கள் டச்சுக்காரர் காலத்தில் வீழ்ச்சியடைய தொடங்கினர்.

டச்சுக்காரர்களுக்கு அடுத்து வந்த ஆங்கிலேயர்களோ பரதகுல தலைவர்களின் அதிகாரத்தை அங்கீகரிக்கவுமில்லை, அவர்களுக்கு முத்து குளித்தலில் வரும் வருமானத்தையும் கிடைக்கவிடாமல் செய்தனர்.

பரதவர் நாட்டு ஏழுகடற்றுறையின் சிற்றரசர்களான பரதகுல தலைவர்கள் முதலில் டச்சுக்காரர்களாலும் பிறகு ஆங்கிலேயர்களால் அதிகாரம் மற்றும் பொருளாதார வீழ்ச்சி அடைந்ததை அடுத்து, பாண்டியபதி ராஜாக்கள் தலையிட்டு பரதவர் நாட்டு ஏழு கடற்றுறையில் புதிய தலைவர்களை உருவாக்கும் சூழல் உருவானது.

००००००००००००००००००००००००००००००००००००००००

Foot Notes:-

Life and letters of st Francis Xavier by Jesuit James henry coleridge Pg. 144

* Letter to Van Geons from the dutch chiefs Van Rheede and Lauren Pyl dated 19th December 1669 , Tuticorin.






- UNI
About Us

Vembar (Vembaru/ Bempaar/ Bempaer) is a coastal village in Tamilnadu situated in the Gulf of Mannar between 2 major towns, namely Tuticorin (56 km) and Ramanathapuram (70 km). This village holds a significant place in the history of Tamilnadu and specifically for the Pearl fishing Community.

A strategic village for the Pandya kings, Vembar has acted as an important trade centre for the kingdom. This village has been a pioneer in pearl harvesting, fishing, sea trading and magnificient churches. Let's explore more about this village's history, culture, people, churches and more..

Vembar Holy Spirit, is one of the ancient catholic parishes of the Pearl Fishery Coast in India (Since 1604). Vembarians are converted to Christianity on 1536. St. Francis Xavier who came to the Pearl Fishery Coast in 1542, visited Vembar several times and had mentioned about this village in his letters. The Jesuit record of 1571 notes the existence of a large beautiful church (Basilica) at Vembar.

Rev. Fr. Henrique Henriquez (The Father of Tamil Press), Veearma Munivar and more Jesuits priests are learnt Tamil in this Parish. In the years 1742 and 43, Rev. Fr. Constantine Joseph Beschi (Veerama Munivar) worked in this parish. Since 1876, Vembar has been a big catholic mission with 60 substations. From 1908 onwards, these substations joined one by one with Tuticorin. At 1967, a Shrine was dedicated to St. Sebastian, a patron of Vembar. Most. Rev. Dr. Fidelis Lional Emmanual Fernando, as a bishop of Mannar, Sri Lanka is from this parish.

img

Thambi Ayya Fernando

Pioneer, The Heritage club of Vembar

Thambi Ayya Fernando was born in Vembar. Single handed he went about recording the Photographs of many epigraphic inscriptions in and around Tirunelvely and Tuticorin districts and preserved them for posterity. He has an impressive library which contains innumerable books and writings including those of St. Francis Xavier, and Fr.Henry Henriques.The contribution of Thambi Ayya to the researchers in coastal affairs. coastal history, coastal literature, coastal church affairs, coastal ethos is immense and Himalayan.

img

Dev Anandh Fernando

Founder, The Heritage club of Vembar

Dev Anandh Fernando, a local Vembarian is passionate on finding facts about the village. As a historian he has done several research studies about coastal villages in Tamilnadu. He has dug deep into the history of these villages, spread of Christianity, Pearl Fishing, sea trade from Pandya kingdom to Moors and then Portuguese, establishment of first churches in Tamilnadu.

img

Anton Niresh Vaz

Adviser, The Heritage club of Vembar

Niresh Vaz, as he is called lives in Chennai but is passionate about his native Vembar. He has done a lot of study and published few blogs on the important churches across the coastal villages from Ramnad to Kanyakumari.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com