Welcome to Vembar

'மதி குலத்தோரின் துறையேழின் முதற்றுறையாம் வேம்பாறு'

This site is a treasure trove of historical information about the Bharathas and a pearl trading centres in the Gulf of Mannar. Especially for elegant coastal village of ‘Vembaru’.

Blog
வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

பண்பாட்டில் சிறந்த பரதவர்


முத்துக்குளிப்பு

பழைய காயலில் அதிக அளவில் முத்துக்குளிப்பு நடந்ததாக வாஸ்கோடகாமா தனது பயணக் குறிப்புகளில் பதிவிட்டுள்ளார். போர்ச்சுகீசியர் கி.பி.1505 முதல் கி.பி.1508 வரை பழைய காயலில் முத்துக்களை பெருமளவு வாங்கினர். ஆனால் பரதவர்களின் கத்தோலிக்க மதமாற்றத்துக்கு பின் போர்ச்சுகீசியர்கள் முத்துக்குளித்தலை தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். கி.பி.1587 ல் முத்துக்குளித்துறையிலிருந்து 181 குவிண்டால் அளவிலான முத்துக்கள் லிஸ்பனுக்கு அனுப்பப்பட்டன. 

பழையகாயலில் ஆண்டுக்கு இரண்டுமுறை மார்ச்-ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட்- செப்டெம்பர் மாதங்களில் முத்துக்குளியல் நடைபெற்றதாகவும், விற்பனை ஜூன் மற்றும் நவம்பர் மாதங்களில் நடந்ததாகவும் வரலாற்று குறிப்புகள் உள்ளன. முத்துக் குளிப்பின் போது போர்ச்சுகீசிய படைத்தலைவன் மற்றும் பரதவ இனத் தலைவன் முத்துக்குளித்துறையில் தங்கினர். பிடிக்கப்பட்ட முத்துக்கள் கோவாவிற்கும் அனுப்பப்பட்டன.

கி.பி.1616 ல் 36 பைகளில் 'அல்ஜோபர் ' வகை முத்துக்கள் போர்ச்சுக்கல்லுக்கு அனுப்பப்பட்டன. அப்போது முத்துக்கள் அவுன்ஸ் கணக்கில் அளிக்கப்பட்டன. இவை போர்ச்சுகீசிய சீனாவுக்கும் அனுப்பப்பட்டன. மதுரை நாயக்க மன்னன் தன்னுடைய பங்காக ஒருநாள் முத்துக்குளிப்பு வருமானத்தை பெற்றுக் கொள்ள, பரதவர்கள் சங்கு குளிப்பதிலும் வல்லவர்கள், சவேரியார் கடிதத்திலிருந்து செப்டம்பர் மாதத்தில் சங்கு குளிப்பு நடந்ததாக அறிகின்றோம். சங்குகள் வங்காளம், பீகார், ஒரிசா போன்ற இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. (அருட் சகோதரி. முனைவர்.டெக்லா மேரி)

முதலாம் நூற்றாண்டில் கொற்கையில் சேகரிக்கப்பட்ட முத்துக்கள் வெளிநாட்டு ஏற்றுமதிக்காக நெல்கிண்டாவில் (கோட்டயத்தில்) விற்பனை செய்யப்பட்டதாக பிளினி குறிப்பிடுகிறார். உள்நாட்டுத் தேவைக்கான முத்துக்கள் மதுரைச் சந்தைக்கு கொண்டுவரப்பட்டன. கொற்கையில் சேகரிக்கப்பட்ட முத்துக்கள் தரம் பிரிக்கப்பட்டு பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பப்பட்டன. முத்துக்களை இந்தியப் பெருங்கடலில் இருந்து பிரதானமாக ரோமாபுரிக்கு ஏற்றுமதியானதாக பிளினி கூறுகிறார்.

இப்படி வணிகத்திற்காகச் சென்றவர்கள் முத்துக்களைக் கொடுத்து அழகிய யவனப்பெண்களையும், போர் வீரர்களையும், விலை உயர்ந்த பொருட்களையும் வாங்கிவந்ததற்கான குறிப்புகளும் உள்ளன. பாண்டியர்களின் அந்தப்புரங்களில் யவனப்பெண்கள், பாண்டிய மன்னர்களுக்கு மதுபானங்களை பரிமாறியதான குறிப்புகளும் உள்ளன. இந்த யவனர்கள் கிரேக்கர்கள் எனப்படுகிறார்கள்.

முத்துக்குளித்தல் (Pearl hunting) அல்லது முத்தெடுத்தல் அல்லது முத்து வேட்டை என்பது கடலின் ஆழமான பகுதிகளில் வசிக்கும் முத்துச் சிப்பி மற்றும் நன்னீர் மட்டிகள் (freshwater pearl mussel) எனப்படும் மெல்லுடலிகளிலிருந்து முறையான மூழ்குதல் பயிற்சி மூலம் முத்தினை எடுத்து கடலின் மேற்பரப்பிற்குக் கொண்டு சேர்க்கும் முறையாகும். முத்துச் சிப்பிகளுக்கு நான்கு வயதாக இருக்கும் போது பெறப்படுவனவற்றிலேயே அதிசிறந்த முத்துக்கள் காணப்படும்.

நல்ல தரமான அரிய வகையான மூன்று அல்லது நான்கு முத்துகளை பெறுவதற்கு கிட்டத்தட்ட ஒரு டன் சிப்பிகள் சேகரிக்கப்பட வேண்டும். பரவர்கள் சிப்பிகளைச் சேரிப்பதற்காக இடுப்பைச் சுற்றி பையொன்றைக் கட்டிக்கொள்வார்கள். நீரில் மூழ்கும் போது சரியான இடம் தென்பட்டதும் பரபரப்பாக முத்துக்களைச் சேகரித்து இடுப்பில் கட்டிச் சென்ற பை போன்ற வலையினுள் போடப்படும். அதேவேளை தோணியில் இருப்பவர் முத்துக் குளிப்பவர்களைக் கண்ணும் கருத்துமாகக் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள்.

மேலே வந்தவர் தோணியில் இருப்பவரிடம் தான் சேகரித்த முத்துச் சிப்பிகளை ஒப்படைத்து விட்டு சிறிது ஓய்வு எடுத்தபின் மீண்டும் முத்துககுளிக்கக் குதித்துவிடுவார். முத்துக்குளிக்கும் பணி முடிவுற்றதும் சிப்பிகளைக் கடற்கரையில் கொட்டி ஏலத்தில் விற்பனை செய்வார்கள். சில நாட்களின் பின்பு சிப்பிகளை ஒவ்வொன்றாகத் திறந்து நன்றாகக் கழுவி முத்துக்களை வெளியில் எடுப்பார்கள். இவ்வாறு சேகரிக்கப்படும் இயற்கை முத்துகள் விலை மதிப்பு மிக்க ஒன்பது இரத்தினங்களுள் ஒன்றாக மதிக்கப்படுகிறது.

முத்தின்வகைகள்:

1. ஆணி, 2. கனதாரி, 3. மக்கை, 4. மடக்கு, 5. குறவில், 6. களிப்பு, 7. பீசல், 8. குறல் 9. தூள் 10. ஓட்டு முத்து.

பரவர்கள் மற்றும் அவர்களின் பாரம்பரீய மீனவ மரபினரின் தொழிலை சில வகைகளாக பிரிக்கலாம். அவை, துணி விற்போர், கலம் செலுத்துவோர், முத்துச்சிப்பிகள் குளிப்போர், சங்குகள் குளிப்போர், துணிகள் கட்டுக்கட்டுவோர், ஆமைகளைப் பிடிப்போர், கடற்பன்றிகளைப் பிடிப்போர், சுறா மற்றும் பிறமீன்களைப் பிடிப்போர், பல்லக்குச் சுமப்போர், தலைமைக்காரர்களின் குற்றேவலர், நண்டுகள் பிடிப்போர், என பல தொழில்களையும் கடலை மையமிட்டு செய்து வந்தவர்கள் பாரம்பரீய மீனவர்கள்.

ஆனால் பாரம்பரீய மீன் பிடிச்சமூகங்களின் பிரதான தொழிலாக எக்காலத்திலும் இருந்திருக்கக் கூடிய மீன்பிடி, உப்பு விளைவித்தல் போன்ற தொழிலுக்கு இருந்த முக்கியத்துவத்தை விட, அவர்கள் தொழிலின் ஒரு பகுதியாக இருந்து கடலில் மூழ்கி எடுத்து வந்த முத்துக்கு இருந்த முக்கியத்துவம் வேறு எதற்கும் இல்லை.

செல்வாக்குமிக்கோரின் கழுத்துக்களை அலங்கரிக்கும் அணிகலனாக மட்டுமல்லாமல் கிரேக்கர்களையும், உரோமானியர்களையும், அராபியர்களையும், போர்ச்சுக்கீசியரையும், பின்னர் டச்சுக்காரர்களையும் இறுதியாக வெள்ளையர்களையும் என அவர்களின் ஏக போக சுரண்டல் சந்தையில் முத்து ஒரு பிரதான பொருளாக இருந்ததாலுமே முத்து பேசப்பட்டது.

தென்னிந்தியாவைத் தவிற இந்தியக் கடலோரங்களில் வேறு எங்கும் இயற்கை கடல் முத்து எடுக்கப்படவில்லை. இந்தியக் கடலோரங்களில் பரவலாக சங்குக்குளித்தல் நடைபெற்றதே தவிற முத்துகுளித்தல் நடைபெறவில்லை. முத்து வளம் இந்திய தீபகற்பத்தின் வேறெந்த கடல் பகுதிகளிலும் இருந்தமைக்கான சான்றுகளும் இல்லை. முத்துக்குளித்தல் நடைபெற்ற ஒரே இடம் தமிழக கடலோரங்களிலும், இலங்கையின் மன்னார் கடலோரத்திலும்தான் என்பது அறியக்கூடிய செய்தி.

பெர்ஷியா, இந்தோனேஷியா, ஜப்பான், போன்ற இடங்களில் முத்துக்குளிப்பு நடந்திருந்தாலும் இவைகளுக்கு பன்னெடுங்காலத்திற்கு முன்பே தமிழகத்தின் கொற்கை கடலோரத்திலும் சிறிலங்காவின் மன்னார் குடாவிலும் முத்தெடுத்ததற்கான சான்றுகள் உள்ளன. தமிழக முத்துக்கள் ஆதிகாலம் தொட்டே எடுக்கப்பட்டு வருவதாக கால்டுவெல் மற்றும் அருணாச்சலம் என்ற மூத்த ஆய்வாளரும் கணிக்கிறார்கள்

பெரிப்ளூஸ் என்கிற நூலில் கொற்கையில் முத்துக்குளித்தலில் பாண்டியர்களுக்காக அவரின் கைதிகள் ஈடுபட்டதாக குறிப்பிடுகிறார். சந்திரகுப்த மௌரியரின் அரசவையில் கிரேக்க தூதுவராக இருந்த மெகஸ்தனிஸ் இலங்கையில் முத்துக்குளித்தல் நடந்ததையும் இந்தியாவைக் காட்டிலும் தங்கம், முத்துக்களை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடாக இலங்கை இருந்ததையும் குறிப்பிடுகிறார்.

பெர்ஷியன் கடல்பகுதிகளில் நடந்த முத்துக்குளித்தல் தொடர்பான குறிப்புகளும் உள்ளன. பெர்ஷியன் கடல் பகுதியில் கிடைத்த முத்துக்கள் ஆர்ம்ஸ் (Ormus) என்றும் தமிழக, மன்னாரிலும் கிடைத்த முத்துக்கள் ‘’கீழை முத்துக்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த கீழை முத்துக்கள் பெர்ஷிய முத்துக்களை விட கிரேக்கத்திலும், ரோமாபுரியிலும் புகழ்பெற்றிருந்ததாகவும் தெரிகிறது.

மன்னார் வளைகுடாவினது முத்துப்படுக்கைகள் (முத்துச்சிப்பிக்கள் காணப்படுகின்ற இடங்கள்) தொடர்பாக கி.பி. 6ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலுள்;ள வரலாற்றுப் பதிவுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

தொடர்ந்து கதைப்போம்...
 

தொல்குடி பரதவர்கள்


பரதவர்கள் தொல்குடி மரபுன்னு சொல்றாங்களே ?

பரதவர்கள் தொல்குடிகள்தான். சங்க இலக்கியங்கள்ல அவர்களுக்கு ஒரு தனி அரசு இருந்ததா குறிப்பு இருக்கு. 'தென்பரதவர் மிடல்சாய வடவடுகர் வாளோட்டினார்' (புறம் 378) அப்படின்னு ஒரு சங்கப்பாடல் இருக்கு. இன்னமும் தூத்துக்குடில அதோட எச்சப் பாடல்லாம் இருக்கு. அவங்களுக்குள்ள ‘கடலரசன்'னு ஒருத்தர் இருக்கார். சாதிப் பஞ்சாயத்துத் தலைவர ‘கடலரசன்’னு சொல்றாங்க. அவங்ககிட்ட தொல்குடிச் சடங்குகள் நிறைய இருக்கு. தாய்மொழி சார்ந்த பிரியமும் ரொம்ப அதிகம்.

பரதவர் வைணவம் சார்ந்து இருந்திருக்கிறார்களா ?

திருக்கண்ணபுரம் சவுரி ராஜபெருமாளை மாப்பிள்ளேன்னு சொல்லக் இங்கில்ல. வட மாவட்டத்துல திருக்கண்ணபுரத்துல பார்த்தேன். கூடியவங்க மீனவர்கள்தான். தென்பகுதி முழுக்க நூற்றுக்கு நூறு மீனவர்கள் கிறிஸ்துவர்கள்தான். கிழக்கே தூத்துக்குடியில இருந்து வேம்பாறு வரைக்கும். தமிழ்நாட்டினுடைய முதல் கிறித்துவக் குடிகள் அவங்கதான்.

1530-கள்ல பிரான்சிஸ் சேவியர் காலத்துல மாறுனவங்க. இன்னும் அவங்க தொல் தமிழ்ச் சடங்குகளை எல்லாம் வச்சுருக்காங்க. 'வாசல் பதித்தல்' என்னும் சடங்கு மாதிரி பல சடங்குகளை வச்சிருக்காங்க. இன்னும் அவங்க மூதாதையர்களை பற்றிச் சொல்லும்போது ‘பரவர் புராணம்'னு ஒன்னு வச்சுருக்காங்க. சிவபெருமான் வலைவீசி மீன்பிடித்த திருவிளையாடலோடு தங்களைத் தொடர்புபடுத்துகிறார்கள் பரதவர்கள். 'பரதவர் பாண்டிய வம்சத்தினரே'னு ஒரு புத்தகத்தை நான் பார்த்திருக்கேன். படிச்சதுல்ல, அவங்க தமிழ் Identity—க்குத்தான் முயற்சி பண்றாங்க.

கிறித்துவர்களா அவங்க மாறுவதற்கு முன்பு வழிபாட்டு முறை எப்படி இருந்தது?
அவர்கள் ஒரு சுறாக்கொம்பை நட்டு வழிபட்டுக் கொண்டிருந் தார்கள்னு சங்க இலக்கியத்துல 'சினைச் சுறாவின்கோடுநட்டு, மனச்சேர்த்திய வல்லணங்கினான்' அப்படின்னு பட்டினப்பாலையிலேயே சுறாவின் கொம்பை நட்டு வழிபட்டதைச் சொல்றாங்க. தொடக்க கிறித்துவ மிஷனரிகள் இதை எழுதும்போது அவர்கள் ஒரு சுறாக் கொம்பை நட்டு வழிபட்டார்கள்னு எழுதுனாங்க. அதுதான் அவங்க வழிபாடு.

- மானுட வாசிப்பு நூலில் தொ.பரமசிவம். 


பாண்டியரும் பரதவரும்




தலையாலங்கானத்து போரின் நாயகர்களான பாண்டியரும் பரதவரும்:

கூடல் என்று அழைக்கப்பட்ட இன்றைய மதுரை மாநகர் கிமு நான்காம் நூற்றாண்டில் அகுதை என்பவன் ஆட்சியின் கீழ் இருந்த சமயத்தில் கொற்கை பரதவர்களின் அரசனாக இருந்த பாண்டிய நெடுந்தேர் செழியன் என்பவன் நான் மேற்கூறிய அகுதையை போரில் வென்று கூடல் வரை தனது அரசை விரிவாக்கி அக்கூடல் மாநகரிலேயே தங்கியிருந்து ஆட்சி செய்ய தொடங்கினான்.

இந்த நெடுந்தேர் செழியனின் ஏழாவது தலைமுறையில் தோன்றியவனே புகழ்பெற்ற தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன். மதுரையில் பாண்டிய வேந்தன் மறைந்த பிறகு பரதவர்களின் கொற்கை மாநகரிலே இளவரசனாக இருப்பவனே மதுரைக்கு சென்று ஆட்சி பொறுப்பு ஏற்பது வழக்கம்.

நெடுஞ்செழியன் சிறுவனாக இருக்கும்போதே மதுரையில் ஆட்சி பொறுப்பில் இருந்த அவன் தந்தை இறந்து விட்டார். பரதவர்களின் கொற்கையில் இளவரசனாக இருந்த சிறுவன் நெடுஞ்செழியன் மதுரைக்கு சென்று ஆட்சி பொறுப்பு ஏற்றான். 

தொடக்கத்தில் கொற்கை பரதவர்களின் அரசர்களாக மட்டுமே இருந்த பாண்டியர்கள் தங்களது அரசை உள்நாட்டில் பெரிய அளவில் விரிவாக்கி பேரரசை உருவாக்கியிருந்ததை பொறுத்து கொள்ள முடியாத அவர்களுடைய பகைவர்கள் அவர்களை வீழ்த்தி பாண்டிய நாட்டை தங்களுக்குள் பங்கு போட்டு கொள்ள சமயம் பார்த்து காத்திருந்தனர்.

சிறுவனாக இருந்த நெடுஞ்செழியனை எளிதில் வீழ்த்தி விடலாம் என்று எண்ணி சோழனுடன், சேரனும், வேளிர் ஐவரும் அச்சிறுவனுக்கு எதிராக அணி சேர்ந்தனர். தலையாலங்கானம் என்னும் இடத்தில் சோழன் தனது படையுடன் வந்திருந்தான். சோழனுக்கு ஆதரவாக சேரனும், வேளிர்களான திதியன், எழினி, எருமையூரன், இளங்கோ வேண்மான், பொருநன் ஆகிய ஐவரும் அவரவர் படைகளுடன் தலையாலங்கானத்துக்கு வந்திருந்தனர்.

தனக்கெதிராக சோழன் ஆறு பகையரசர்களுடன் தலையாலங்கானத்தில் ஒன்று கூடியிருப்பதை கேள்வியுற்ற சிறுவன் நெடுஞ்செழியன் எதிரி தன்னை தாக்குவதற்கு இடம்கொடாமல் அப்பகைவர் அஞ்சும்படி அவர் நாட்டுக்குள் முன்னேறி சென்று தலையாலங்கானத்தில் வைத்து சோழனையும் அவனுடன் கூட்டு சேர்ந்த ஆறு பகையரசர்களையும் போரிட்டு வென்றான்.

தலையாலங்கானம் என்ற இடத்தில் வைத்து ஏழு பகையரசர்களை வென்றமையால் இப்பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் எனப்பட்டான்.

(குறிப்பு: இப்போர் நடைபெற்ற இடமான தலையாலங்கானம் சோழ நாட்டில் தற்கால திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம் சிமிழி ஊராட்சியிலுள்ள ஒரு கிராமமாகும். பிற்காலத்தில் இது தலையாலங்காடு என்று வழங்கிற்று.)

தலையாலங்கானத்து போரில் பாண்டிய நெடுஞ்செழியன் பெற்ற வெற்றி சிறப்பினை குறித்து மாங்குடி மருதனார் தனது மதுரைகாஞ்சியில் இவ்வாறு பாடுகிறார்.....

செற்ற தெவ்வர் கலங்கத் தலைச்சென்று,
அஞ்சு வரத் தட்கும் அணங்குடைத் துப்பின்,
கோழ் ஊஉன் குறைக் கொழு வல்சி,
புலவு வில், பொலி கூவை,
ஒன்று மொழி, ஒலி இருப்பின்,
தென் பரதவர் போர் ஏறே!

  
தென் பரதவர் போர் ஏறே!

விளக்கம்:

சினம் கொண்ட பகைவர் அஞ்சும்படி அவர் நாட்டுக்குள் முன்னேறி சென்று போரிட்டு அவர்களைத் தடுத்து நிறுத்தியவர்களும். அப்பகைவரைக் குத்திய அம்போடு கூடிய வில்லைத் தம் குடிசையில் சார்த்தியிருப்பவர்களும், கொழுத்த இறைச்சியையுடைய சோற்றினையும் கூவைக்கிழங்கினையும் உண்டு, வஞ்சினம் கூறி ஒலித்துக் கொண்டிருப்பவர்களுமான அத்தென்பரதவருள் போரிடும் காளையாக/ சிங்கமாக  விளங்கியவனே" என்று பாண்டிய நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடுகிறார்.

இப்படி பாண்டிய நெடுஞ்செழியனின் தலையாலங்கானத்து போர் வெற்றி சிறப்பினை பற்றி அவர் மீது பாடப்பட்ட பாடலில் அவருடன் பகைவரின் நாட்டுக்குள் முன்னேறி சென்று அவர்களை போரிட்டு வீழ்த்திய தென்பரதவரை பற்றி ஏற்றி பாடி, பிறகு அவ்வீரமிக்க தென்பரதவருள் முதல்வனாக அப்பாண்டிய நெடுஞ்செழியனை பாடி முடிக்கிறார் மாங்குடி மருதனார்.

- UNI

மதுரையை கைப்பற்றிய பரதவர் அரசன்




அகநானூறு: 296
பாடியவர்: பேராலவாயர்
திணை: மருதம்
துறை: வாயில் வேண்டி சென்ற தலைமகற்கு வாயில் மறுக்கும் தோழி சொல்லியது.
சிறப்பு: பெரும் புகழுடையவனும் கொற்கைப் பொருநனுமான நெடுந்தேர்ச் செழியனை பற்றிய செய்தி.

(தலைமகன், வையை புதுப்புனலிலே பரத்தையோடுங் கூடிப் புதுப்புனலாடிக் களித்துத் திரிந்தான் எனக் கேட்டு ஊடல் கொண்டனல் தலைவி. அவன், அவளுடைய உறவை விரும்பியவனாக மறுநாள் வீட்டிற்கு வர, அதனை மறுத்து அவள் சொல்கின்றாள்.)

பாடல் வரி 8-13:
பல்மீன் கொள்பவர் முகந்த இப்பி
நாரரி நறவின் மகிழ்நொடைக் கூட்டும்
பேரிசைக் கொற்கைப் பொருநன், வென்வேற்
கடும்பகட்டு யானை நெடுந்தேர்ச் செழியன்,
மலைபுரை நெடுநகர்க் கூடல் நீடிய
மலிதரு கம்பலை போல,
அலர் ஆகின்று, அது பலர் வாய்ப் பட்டே.

விளக்கம்:
கடலுக்குள் சென்று பலவகையான மீன்களை கொணர்பவர்கள், பரதவர்கள், அவற்றுடன் வாரிக் கொணர்ந்த முத்து சிப்பிகளை நறவுக் கள்ளுக்கு விலையாகக் கொடுப்பவர்களான அந்த கொற்கை மக்களின் (பரதவர்களின்) அரசன் பாண்டிய நெடுந்தேர்ச் செழியன்.. 

இவன் தமது (அகுதையுடனான போரின்) வெற்றிக்கு பிறகு யானை படையுடன் கூடல் நகருக்குள் புகுந்து நீண்ட காலம் அங்கு தங்கி நாடாள்வது ஊருக்கெல்லாம் தெரியும். அதுபோல மற்றொருத்தியோடு நீ கொண்ட உறவு ஊருக்கெல்லாம் தெரியும் என்று சொல்லி தலைவி ஊடுகிறாள்.

மேற்சொன்னவைகள் மூலம் பாண்டியர்கள் கூடலை கைப்பற்றுவதற்கு முன்பு வரை மீன் வேட்டை மற்றும் முத்து எடுத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்த கொற்கை பரதவர்களுக்கு மட்டுமே அரசர்களாக இருந்து வந்தனர் என்பதனை ஆதாரபூர்வமாக அறியமுடிகிறது.

யார் இந்த அகுதை?

அகுதை என்பவன் கூடலை கடைசியாக ஆட்சி செய்த வேளிர் அரசனாவான்.

புறம் 347 வரி 5-7, அகுதை என்பவன் கூடலை ஆண்டதைக் கூறுகிறது.

அகுதையிடமிருந்தே கொற்கை பரதவர்களின் அரசனான பாண்டியன் நெடுந்தேர்ச் செழியன் அக்கூடலை கைப்பற்றி ஆட்சி செய்ய தொடங்கினான்.

புறம் 233 வரி 2-4, அகுதை சக்கராயுதம் வைத்திருந்தும் போரில் மாண்டதாக கூறுகிறது.

கொற்கை பரதவர்களின் அரசனான பாண்டியன் நெடுந்தேர்ச் செழியன் கூடலை கைப்பற்றி ஆண்டதை கூறும் அகநானூறு 296 பாடல் வரி 10-13 பற்றி ஆங்கிலேயர் காலத்திலேயே வரலாற்று ஆய்வாளரும், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் மூத்த தமிழ் பேராசிரியருமான ஐயா சிவராஜா பிள்ளை அவர்களும் தமது நூலில் விரிவான விளக்கத்துடன் இதை பதிவு செய்துள்ளார்.















மீனவர்கோன் / பாண்டியன்




பாண்டியர்கள் பரதவர் என்பதால் மீனவன் என்று அழைக்கப்படவில்லை மாறாக மீன் கொடியை உடையவர்கள் என்பதால் தான் மீனவன் என்று அழைக்கப்பட்டனர் என சிலர் கூறி வருகின்றனர். இவர்கள் கூறியது உண்மை இல்லை என்றாலும் கூட நாம் இவர்களின் கூற்றுப்படியே போவோம்.

முதலில் இரட்டைமீன் சின்னம் எந்த தமிழ் இனக்குழுவின் அடையாளமாக இருந்தது என்பதை அறிய முற்படுதல் வேண்டும்.  சங்ககாலத்துக்கு முற்பட்ட சிந்து சமவெளியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளில் திங்கள் குலத்தவராகவும், இரட்டைமீன் சின்னத்தை தங்களது கொடியில் கொண்டவராகவும், மீனவர் என்று பெயர்பெற்றவராகவும் குறிக்கப்பட்டவர்கள் தமிழர்களுள் பரவர்கள் மட்டுமே.

பரதவர்களை குறித்ததான நான் மேற்கூறிய சிந்து சமவெளி கல்வெட்டு செய்திகளை ஸ்பெயின் நாட்டை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளரும், வரலாற்றாசிரியருமான "ஹென்றி ஹெராஸ்" அவர்கள் தமது "மோகஞ்சதாரோ மக்களும், நாடும்" என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.

"ஆதிகாலம் தொட்டு மீன்கொடி உடைய மீனவர்களான பரவர்களின் அரசனே மீன்கொடி உடைய மீனவர்கோன் பாண்டியன்" என்பதனை ஆதாரபூர்வமாக நாம் அறியமுடிகிறது. எப்படி பார்த்தாலும் மீனவர், மீனவர்கோன் என்பது பரதவர்களையும் அவர்களின் அரசனான பாண்டியனையுமே குறிக்கும் என்பது தெளிவு.

००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००

Henry Heras, Mohenjo daro, the people and land Pg.715-16






சங்கு குளித்தல்


உலக புகழ்பெற்ற பரதவர்களின் சங்கு குளித்தல்:

பரதவர்களின் முத்து குளித்தல் பற்றி பேசும் நாம் அவர்கள் செய்த உலக புகழ்பெற்ற சங்கு குளித்தலை பற்றி பேச மறந்து விடுகிறோம். பரதவர்கள் செய்த சங்கு குளித்தலை பற்றி ஆதாரத்துடன் காண்போம் .

தெற்கே வீரபாண்டியன் பட்டினம் முதல் வடக்கே நல்லதண்ணி தீவு வரையேயுள்ள இடைப்பட்ட பகுதியில் கடலில் சங்கு படுக்கைகள் அமைந்துள்ளது. சங்கு படுக்கைகள் கடலில் முத்து படுக்கைக்கும், பவளப்பாறைகளுக்கும் நடுவே அமைந்துள்ளது.

அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் தொடக்கம் வரை சங்கு குளித்தலுக்கு ஏற்ற காலமாகும். இக்காலத்தில் பரதவர்கள் கடலுக்குள் மூழ்கி அடியில் ஆழமாக சென்று சங்குகளை எடுத்து மேலே வருவர். பரதவர்கள் தாங்கள் கடலில் மூழ்கி எடுத்த சங்குகளை பரதகுல வணிகர்களுக்கு விற்று விடுவர்.

பரதகுல வணிகர்கள் சங்குகளை பெரும்பாலும் வங்காளதேசத்துக்கே ஏற்றுமதி செய்வர். பரதவர்கள் கடலில் மூழ்கி எடுத்த சங்குகளை கொண்டு வங்காளதேசத்தில் பெண்கள் அணிவதற்கான காப்புகள் செய்யப்பட்டது. இதுபோக வங்காளதேசத்தில் சங்குகள் கோவிலில் எக்காளம் ஊதவும் பயன்படுத்தப்பட்டது.

"ஜார்ஜ் ஷுர்ஹாம்மர்" என்ற உலக புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரும், ஏசுசபை குருவானவரும் தமது "புனித பிரான்சிஸ் சேவியர் வாழ்க்கை வரலாறு" நூலில் இவற்றைப் பதிவு செய்துள்ளார்.

உலகில் வேறெங்கும் கிடைக்காத பால் சங்கு என்றழைக்க ப்படும் Turbinella pyrum வகை சங்குகள் மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி யில் மட்டும் தான் கிடைக்கும். இந்த வகை சங்கு தமிழர்களின் வாழ்வில் இரண்டற கலந்தவை. வீடுகளின் நிலைக்கதவுகளிலும், வீட்டு முற்றங்களிலும் பால் சங்கை பதித்திருப்பதை காணலாம். வீட்டு வளர்ப்பு பிராணிகளின் கழுத்திலும் கட்டியிருப்பார்கள். 

குழந்தைகளுக்கு பாலூட்ட இந்த சங்குதான். சங்க காலங்களில் சுப நிகழ்வுகளில் இந்த சங்கொலி முழங்கப்படும். இன்றும் நாட்டு கோட்டை செட்டியார் மங்கள நிகழ்வுகளில் சங்கொலி இசைக்கப் படும். பெருங்கோவில்களில் மூலவரின் அபிஷேகங்களில், பூசையின் போதும் சங்கொலி முழங்கும் 

சமீபகாலங்களில் மரண நிகழ்வுகளில் சங்கொலிக்கப் படுகிறது. இவைகள் எல்லாமே வெண்ணிற பால் சங்குகள் தான். தெய்வங்களும் இந்த பால் சங்கு ஊதுவதை அவதானிக்கலாம். இந்த பால் சங்குகளை அறுத்து தான் வளையல்கள் செய்வார்கள். சங்ககால பரதவர் பெண்களும் இந்த சங்கு வளையல் அணிவர் அதனால் தான் நக்கீரர் சங்கறுப்பது எங்கள் குலம் என்றார். 

இந்த வெண் சங்கு வளையல்கள் திருமணமான சுமங்கலி பெண்களின் முக்கிய அடையாளம் வங்காள பெண்களுக்கும், சங்ககால தமிழ் குடிகளுக்கும். இவை அனைத்தும் இடது பக்க வாய்களை கொண்டிருக்கும். இதில் பத்து லட்சத்தில் ஒன்று மரபணு பிறழ்ச்சியின் காரணமாக வலது பக்கம் வாய் கொண்டிருக்கும். அது தான் புகழ் பெற்ற வலம்புரி சங்கு.

குருச்சேத்திரப் போரில் கௌரவ, பாண்டவ மஹா ரதர்கள்(War generals) ஆளுக்கொரு சங்கை வைத்திருந்தார்கள் TRUMPET ஆக உபயோகித்து போரை வழிநடத்த. அந்த ஒவ்வொருவரின் சங்கிற்கும் தனித் தனி பெயர்கள் உண்டு. உதாரணத்திற்கு அர்ஜூனன் சங்கிற்கு பெயர் பாஞ்ச ஜைன்யம்.

வலம்புரியின் இன்றைய விலை ஒரு கிராம் எடை ₹15000 முதல் 25000 வரை.


००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००


ஆதாரம்:-

St Francis Xavier his life his times Vol 2 Pg. 303-4
















குருகுலராயன் அடப்பன்




14 ஆம் நூற்றாண்டில் காங்கேயன் புலவர் எழுதிய வலைவீசி புராணம்(84) பரதகுலத்தவர்கள் குரு வம்சத்தை உருவாக்கிய விவரத்தை நமக்கு தருகிறது.

சேந்தன் திவாகரம் உட்பட அனைத்து நிகண்டுகளும் பரதர்களை குருகுலத்தரசன் என்றே குறிக்கிறது..

17 நூற்றாண்டில் நாஞ்சி வளநாடு கோவை குளத்தை ஆட்சி செய்த பரதகுல மன்னர் செண்பகராமன் காலிங்கராயனை பாட்டுடைத் நாயகனாக கொண்டு பாடப்பட்ட தமிழ் சிற்றிலக்கிய வகையில் ஒன்றான செண்பகராமன் பள்ளு அம்மன்னரை குருகுலபரதசாதியில் அவதரித்தவன் என்றே குறிக்கிறது.

கிபி 1841 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரான்ஸ் நாட்டு ஏசுசபை பாதிரியார் பெர்டினாண்ட் மதுரையிலிருந்து எழுதிய கடிதத்தில்..'அடப்பன்'என்பவர்கள் பரதகுல தலைவர்களாக குறிக்கப்படுகின்றனர்(Joseph Bertrand,la Mission du Madure Vol III. Pg 279)
 
Dr. ஜே.பி. றட்லர் தமது அகராதியில் 'அடப்பன்' என்னும் பதத்திற்கு-பரவர்களுக்குள் வழங்கும் மகிமைக்குரிய ஒரு தானிகன் பெயர் என்று குறிப்பிடுகிறார்.

17 நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் சிற்றிலக்கிய வகையில் ஒன்றான 'செண்பகராமன் பள்ளு' பரதகுல தலைவர்கள் 'அடப்பன்' என்று பெயர் தாங்கியிருந்ததை பதிவு செய்கிறது. 
(எ.கா) அணைஞ்சுகுட்டி அடப்பன்(28)

கல்வெட்டு:-
மாவட்டம்/வட்டம்/ஊர்:காஞ்சிபுரம்
அரசு:தெலுங்கு சோழர்
அரசன்: கண்டகோபாலன்
வரலாற்று ஆண்டு:கிபி 1252
இடம்:அருளாளப்பெருமாள் கோயில் இரண்டாம் திருச்சுற்று மேற்குச் சுவர்.
கல்வெட்டு குறிப்புரை:புலியூர்கோட்டத்து வேளிச்சேரி என்னும் சீலசிகாமணிச் சதுர்வேதிமங்கலத்துக் காணியுடைய 'அடைப்பன் காட்டியகையன்' என்னும் தொண்டை மண்டலக் குருகுலராயன் என்பவன் திருவத்தியூர் அருளாளப் பெருமாளுக்கு திருநந்தாவிளக்கு ஒன்று எரிக்க 11 எருமைகளை கோயில் தானத்தாரிடம் வழங்கியுள்ளான்.


















INDO-CEYLON TRAIN



A rare 1890 photo of a Boat Mail or Indo-Ceylon Train approaching Tuticorin Port. This was an unusual but feasible setup of rail and steamer service to reach Ceylon from Madras. Passengers could buy a single ticket for the whole journey. Although a bit tedious but served the purpose for the fortune seekers at that time.

The boat train was introduced in the Madras to Tuticorin Port route in 1880 by the British. Departing from Madras it took 21 hours to reach Tuticorin (Thoothukudi) Port (by the same Indo-Ceylon train shown in this photo). British Ceylon (now Sri Lanka) was a land of job and business opportunities in the late 1800s and early 1900s. To cater to the ever-increasing global demand for tea, the British set up tea plantations on the island.

But the country just did not have the labour to handle the work in the plantations and factories. To fill this gap the British encouraged people from India to crossover to the island for jobs. Many grabbed the opportunity. So to convey the movement of people and goods the ‘Boat Mail’ a combination of train and steamer ship travel from India To Ceylon was established in the 1880s. By 1914 after the Pamban Bridge was built, the train route changed from Madras to Dhanushkodi instead of Tuticorin, resulting in a much shorter ferry ride.


About Us

Vembar (Vembaru/ Bempaar/ Bempaer) is a coastal village in Tamilnadu situated in the Gulf of Mannar between 2 major towns, namely Tuticorin (56 km) and Ramanathapuram (70 km). This village holds a significant place in the history of Tamilnadu and specifically for the Pearl fishing Community.

A strategic village for the Pandya kings, Vembar has acted as an important trade centre for the kingdom. This village has been a pioneer in pearl harvesting, fishing, sea trading and magnificient churches. Let's explore more about this village's history, culture, people, churches and more..

Vembar Holy Spirit, is one of the ancient catholic parishes of the Pearl Fishery Coast in India (Since 1604). Vembarians are converted to Christianity on 1536. St. Francis Xavier who came to the Pearl Fishery Coast in 1542, visited Vembar several times and had mentioned about this village in his letters. The Jesuit record of 1571 notes the existence of a large beautiful church (Basilica) at Vembar.

Rev. Fr. Henrique Henriquez (The Father of Tamil Press), Veearma Munivar and more Jesuits priests are learnt Tamil in this Parish. In the years 1742 and 43, Rev. Fr. Constantine Joseph Beschi (Veerama Munivar) worked in this parish. Since 1876, Vembar has been a big catholic mission with 60 substations. From 1908 onwards, these substations joined one by one with Tuticorin. At 1967, a Shrine was dedicated to St. Sebastian, a patron of Vembar. Most. Rev. Dr. Fidelis Lional Emmanual Fernando, as a bishop of Mannar, Sri Lanka is from this parish.

img

Thambi Ayya Fernando

Pioneer, The Heritage club of Vembar

Thambi Ayya Fernando was born in Vembar. Single handed he went about recording the Photographs of many epigraphic inscriptions in and around Tirunelvely and Tuticorin districts and preserved them for posterity. He has an impressive library which contains innumerable books and writings including those of St. Francis Xavier, and Fr.Henry Henriques.The contribution of Thambi Ayya to the researchers in coastal affairs. coastal history, coastal literature, coastal church affairs, coastal ethos is immense and Himalayan.

img

Dev Anandh Fernando

Founder, The Heritage club of Vembar

Dev Anandh Fernando, a local Vembarian is passionate on finding facts about the village. As a historian he has done several research studies about coastal villages in Tamilnadu. He has dug deep into the history of these villages, spread of Christianity, Pearl Fishing, sea trade from Pandya kingdom to Moors and then Portuguese, establishment of first churches in Tamilnadu.

img

Anton Niresh Vaz

Adviser, The Heritage club of Vembar

Niresh Vaz, as he is called lives in Chennai but is passionate about his native Vembar. He has done a lot of study and published few blogs on the important churches across the coastal villages from Ramnad to Kanyakumari.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com