ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரர் பிராத்தனை
சுவாமி கிருபையாயிரும்.
கிறிஸ்துவே கிருபையாயிரும்.
சுவாமி கிருபையாயிரும்.
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருள்ளும்.
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருள்ளும்.
பரமண்டலங்களில் இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா,
- எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா,
- எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா,
- எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
அர்ச்சியசிஷ்ட தமதிரித்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா,
- எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
வேத சாட்சிகளுக்கு இராக்கினியாகிய அர்ச்சியசிஷ்ட மரியாயே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
சர்வேசுரனுடைய மாதாவே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
கன்னியாஸ்திரிகளுக்குள்ளே உத்தம அர்ச்சியசிஷ்ட கன்னிகையே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
நற்போன பட்டணத்தின் பரிமள புஷ்பமான செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
மிலான் தேசத்தின் அபிமானமாகிய செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
மகிமை போர்ந்த வங்கிஷ குலத்தில் பிறந்த செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தர்ம மகிமையினால் அதிசங்கை யடைந்த செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
முகரூப ரேகையினால் சமஸ்தருக்கும் பிரியமான செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
ஆத்தும ரூபலாவண்ணியத்தினால் படைத்தோனுக்கு அதிபிரியமான செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
படை வீரபராக்கிரமத்தினால் இராஜக்களுக்கு உபயமான செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
ஞானசங்கிராமத்தில் தெளிந்து ராஜாதிராஜனுக்கு அதிஉபயமான செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புத்தி விமரிசையினால் முந்தின சேனையின் தளவாயான செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
ஆயிரமாயிரம் பேர்களை ஞானசங்கிராமத்துக்கு நடப்பித்து மோட்ஷ சேனாதிபதியான செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
கிறிஸ்து சேவகரை அன்ன பானத்தினால் தாங்கின செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தத்தளித்திருந்திற பிராண பரித்தியாகிகளை புத்தி போதகத்தினால் பலப்படுத்திய செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
மார்க்கு, மர்செலின் என்கிற சகோதரரை உறுதியாக்கின செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இருவருடையவும் பிதாவான, தற்குலீனுவை வேதமாக்கிக் கால்கை முடக்கத்திலிருந்து இரட்சித்த செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
நிக்கொஸ்திராத்துடைய குடும்பத்தையும், சகலரையும் ஒருமித்த வேதமாக்கின செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
ஆறு வருஷம் ஊமையாயிருந்த அவனுடைய ஸ்திரியை பேசச் செய்து தேவ துத்தியங்களை பாட வைத்த செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
கிலாவுதினுடைய இருபிள்ளைகளுக்கு ஞானஸ்நானம் கொடுப்பித்துக் குஷ்டத்திலிருந்தும், அகோரத்திலிருந்தும் இரட்சித்த செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
கொர்மான்சியூஸ் என்கிற பரிபாலனை மொழிவாதத்திலிருந்து இரட்சித்த செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அவனுடைய முழுக் குடும்பத்தையும் வேதமாக்கி தாசருக்கு மீட்சியைக் கொடுப்பித்த செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
கிறிஸ்து வேதத்திற்காக அதிபராக்கிரமத்தோடு அமராடின செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
ஒரு பயமும் அச்சமும் இல்லாமல் துஷ்ட அபிநாயக தியோக்லேசியான் முன்னால் கிறிஸ்துநாதரை வாழ்த்தின செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அதி நிஷ்டூர தியோக்லேசியானுடைய சங்கைகளையும், சீர்களையும் புறக்கணித்த செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
மரத்தில் கட்டுண்டு எய்த அம்புகளால் சர்வாங்க முழுதும் குத்துண்டும் சாகாதிருந்த செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
சொற்பத்திற்குள் குணப்பட்டு நிஷ்டூர தியோக்லேசியானுடைய துஷ்டாட்டத்தை அகற்றி மீளவும் கிறிஸ்து நாதரை உச்சரித்த செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
கொலைவாதைக்குக் கீழ்ப்படிந்து பிராணயாசின செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அதிமறைவான தலத்தில் அடக்கப்பட்டாலும் அதிசங்கையான தலத்தில் பூமிதானத்தைக் கற்பித்தருளின செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
முழு கிறிஸ்தியானி லோகத்தில் வாழ்த்தப்படுகிற செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
சகல வித ரோகங்களைப் போக்கியருள்ள வரமடைந்த செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
வைசூரி முதலான விஷரோகங்களிலிருந்து அத்தியந்த தேசங்களைக் காத்த செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
மோட்ச பிரகாசத்தை உலகத்தில் காண்பிக்க வரமடைந்த செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
எங்கள் கண்களுக்கு அதரிசனமான தேவ தூதர்களைத் தரிசனமாகக் காண்பிக்க வரமடைந்த செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
சகல தூதாதி தூதருடைய நாயகனை முழு மனதாய்ப் பின்சென்ற செபஸ்தியான் முனீயோரே,
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற மாசற்ற செம்மறி புருவையாகிய சேசுவே,
- எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற மாசற்ற செம்மறி புருவையாகிய சேசுவே,
- எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற மாசற்ற செம்மறி புருவையாகிய சேசுவே,
- எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
சேசுக் கிறிஸ்துவின் வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பத்திரவான்களாகத் தக்கதாக ...
ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீயோரே, எங்களுக்காக பிராத்தித்துக்கொள்ளும்.
பிரார்த்திக்கக்கடவோம்
கிருபை தயவு நிறைந்த அனந்த சர்வேசுரா உமது அதி உச்சித வேதசாட்சியான ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரர் உமக்காகப்பட்ட பிரயாசங்களைத் தேவரீர் பார்த்து அவர் சிந்தின உதிரம் எங்கள் ஆத்தும சரீரங்களுக்கு ஔஷதமாகத் திருவுளமானீரே; அவருடைய பெரு பேறுகளைப் பார்த்து ஆத்தும வியாதியை ஒருக்காலும் நாங்கள் காணாமல் சரீரத்தில் உண்டாகிற சகலவித வருத்தங்களிலிருந்து நிவாரணமாக்கியருளும் என்று உம்மையே மன்றாடுகிறோம். ஆமென்