Traditional Anthem for Vembarians
நிம்ப நகரின் மரபுகீதம்
இருதயத்தில் வரந் தந்தாளும்
இஸ்பீரீத்து சாந்தேகனே நாளும்
சருவ வுயிர்க்கும் தாயகமானவா -(2)
சாட்சாதி சதா நித்யமானவா -(2)
தானாய் நின்ற தற்சுயம்பானவா -(2)
தருணம் வந்தருள் தந்திடுமென் தேவா -(2)
திரித்துவத்தின் மூன்றாம் நாமதேயா -(2)
சிஷ்டோர் மனம் பற்றிய தூயா -(2)
சிநேகாக்கினி வீசும் நன்னேயா -(2)
தேவகாருண்ய மேவு சகாயா -(2)
மதிகுலத்தவர் துதி நிதம் செய்யும் -(2)
வல்லோய் நிம்ப மாநகர் மீதுய்யும் -(2)
மாந்தர் செழித்தோங்கத் தயை செய்யும் -(2)
வரப்பிரசாதத்தின் மழை மிகப் பெய்யும்
-(2)