மேல்மாந்தை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம்
மேல்மாந்தை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தை
திருநெல்வேலி மேடைத்தளவாயில் வசிக்கும் அரியநாயகி முதலியார் குடும்பம் நிர்வகித்து
வருகிறது. இக்குடும்பத்துக்கே பத்தியப்பட்டது. மேல்மாந்தையில் உருவான முதல் ஆலயம்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் ஆகும். ஜமின் காலத்தில் மிகுந்த செல்வாக்குடனும்
சீருடனும் திகழ்ந்தது. பற்பல இடங்களில் நிலபுலன்கள் இருந்தன. தற்போது ஆலயமும்
அதனைச் சுற்றிய இடங்களும் மட்டுமே உள்ளன.
வேம்பார் சிவபெரும்குன்றம் பகுதி இன்றும்
அரசின் வருவாய் துறையால்
‘சிவபெரும்குன்றம் மால்’ என்றே அழைக்கப்படுகிறது. (இது டிமேல் காட்டுப்
பகுதியில் அமைந்துள்ளது.)
- சங்கரநாராயணன்
– அர்ச்சகர்
மீனாட்சி
சுந்தரேஸ்வரர் ஆலயம், மேல்மாந்தை
(4
தலைமுறையாக இவ்வாலயத்தில் பணி செய்யும் குடும்பத்தை சேர்ந்தவர்)
நேர்காணல்
நாள் : 15.07.2013