உயிர்த்த சேசு பேரில் பாடல்
உயிர்த்த சேசு பேரில் பாடல் - 1
காட்சி நல்ல காட்சி தானையா பரன் உயிர்த்தார்
தாட்சியாய் திருசிலுவைதனில் உயிர் விட்டெமை
மீட்சி செய்து மோட்சம் சேர்த்தவர் - 2
தீட்சியாய் புரிந்தார் ஆட்சி
சொல்லொண்ணாத பாடுபட்டு கள்ளன்போல உயிர்விட்டு
வல்லமை மிகுந்த விதமாய் - 2
செல்வன் சேசுயிர்த் தெழுந்தார்
வானவர் மகிழ்ந்து கூட மங்கள ஜெயங்கள் பாட
ஈன அலகை வாடியோட - 2
கடவு ளன்று யிர்த்தார்
நிம்பநகர் கணுகூலனே நித்திய ஜெயசீலனே
வம்பு செய் மானிடர் ஒழிய - 2
தம்பிரா னுயிர்த் தெழுந்தார்