வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Friday 11 March 2016

சிறந்தோர் தாழ்ந்தோரைப் பேணுதல் செல்வம்

பதிமுத லதிகா ரத்தோர் 
பண்ணவர் உழவர் மேலோர் 
மதியுறு பரதர் நூலோர் 
மருத்துவர் முதலோர் தத்தம் 
விதிவழி யொழுகித் தம்மை 
மேவுறு தாழ்ந்தோர் தம்மை 
அதிதயை யொடுநன் கோம்பி 
ஆண்டிடக் கடனா மாதோ. 14 

மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல் 


நாடாளும் முதன்மை அதிகாரத்தில் உள்ள மன்னர், அந்தணர், வேளாளர் எனப்படும் மேன்மையானவர்கள், அறிவு நுட்பமுடைய வணிகர், உயிர் நோயாகிய அறியாமையை அகற்றும் நூலாசிரியர், உடல் நோய் தீர்க்கும் மருத்துவர் முதலியவர்கள் அவரவர்களுக்கு உரிய முறைப்படி நடந்து தம்மைச் சார்ந்து வாழும் தாழ்ந்தோரை மிக்க பரிவுடன் நன்கு பாதுகாத்துப் பேணுதல் கடமையாகும்என்கிறார் இப்பாடலாசிரியர். 


Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com