வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Sunday 25 September 2016

கடல்வழிப்பயணம் ஆவணம்
Rare Collection 

இந்தியாவிலிருந்து கடல்வழிப்பயணம் தொடர்பான இரு ஆவணங்கள் கீழே உள்ள இணைப்பில் காண்க.  

முதல் நூல் கி.பி மூன்றாம் நுற்றாண்டில் பாஹியன் சீனாவிலிருந்து வட இந்தியாவுக்கு வந்து பின்னர் அங்கிருந்து தாமிரலிபி துறைமுகத்தில் 200 பேர் அமர்ந்து செல்லக்கூடிய வணிகக் கப்பலில் பயணம் செய்து இலங்கை அடைந்ததைக் குறிப்பிடுவதைக் கணலாம்.  குளிர்காலத்தில் பயணம் தொடங்கியதாகவும் 27 நாட்கள் காற்றின்போக்கில் பயணித்து இலங்கையை அடைந்ததாகக் குறிப்புள்ளது.  இலங்கையிலிருந்து மீண்டும் இன்னொரு 200 பேர் பயணம் செய்த வணிகக் கப்பலில் பயணம்.


இரண்டாவது ஆவணமும் கி.பி 6 ஆம் நூற்றாண்டில் தாமிரலிபியில் இருந்து பயணம் தொடங்கி இலங்கையைத் தொடாமல் நக்கவரம் தீவைத் தொட்டு, மலாய, ஜாவா வழியாக மேற்கொண்ட பயணத்தைக் குறிப்பிடுவதாக உள்ளது.  மலாயா ஜாவா பகுதியில் அரசருக்குச் சொந்தமான கப்பல்களிலும் வணிகக் கப்பலிலும் பயணித்த குறிப்புகள் உள்ளன


கீழக்கடல் பகுதியான இந்துமாக்கடலில் காற்றின் திசைக்கேற்பப் பயணிக்கும் 200 பேர் அமர்து செல்லக்கூடிய வணிகக் கப்பல்கள் இயங்கியுள்ளதையும் அக்கப்பல்கள் வழியே பெளத்தமும் இந்துமாக் கடல்வழியே கீழ்த்திசை நாடுகளுக்குப் பரவியதை அறியலாம். 

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com