ஐங்குறுநூறு - நெய்தல் திணையின் வளைப்பத்து பாடல்கள் தொகுப்பு
நெய்தல் என்பது கடலும் கடல்சார்ந்த இடமும் ஆகும். நெய்தல் நிலமக்களை பரதவர் என்று அழைப்பர். நெய்தல் நிலமக்கள் கடலில் கிடைக்கும் உப்பு, மீன் போன்றவற்றையே முக்கிய வாழ்வு ஆதாரமாக கொண்டு வாழ்ந்து வந்தனர்.
ஐங்குறுநூறின் நெய்தல் திணையில் உள்ள வளைப்பத்து பாடல்களையும் கீழ்க்கண்டவாறு பகுக்கப்பட்டுள்ளது.
191.தலைவன் கூற்று
கடல்கோடு செறிந்த வளையார் முன்கைக்
கழிப்பூத் தொடர்ந்த இரும்பல் கூந்தல்
கானல் ஞாழல் கவின்பெறு தழையள்
வரையர மகளிரின் அரியள்என்
நிறையரு நெஞ்சம் கொண்டுஒளித் தோளே.
192.தலைவி கூற்று
கோடுபுலம் கொட்பக் கடல்எழுந்து முழங்கப்
பாடுஇமிழ் பனித்துறை ஓடுகலம் உகைக்கும்
துறைவன் பிரிந்தென நெகிழ்ந்தன
வீங்கின மாதோ தோழியென் வளையே.
193.தோழிகூற்று
வலம்புரி உழுத வார்மணல் அடைகரை
இலங்குகதிர் முத்தம் இருள்கெட இமைக்கும்
துறைகெழு கொண்கநீ தந்த
அறைபுனல் வால்வளை நல்லவோ தாமே.
194.தோழிகூற்று
கடற்கோடு அறுத்த அரம்போழ் அவ்வளை
ஒண்தொடி மடவரல் கண்டிகும் கொண்க
நன்னுதல்இன்று மாஅல் செய்தெனக்
கொன்றுஒன்று கடுத்தனள் அன்னையது நிலையே.
கடல்கோடு செறிந்த வளையார் முன்கைக்
கழிப்பூத் தொடர்ந்த இரும்பல் கூந்தல்
கானல் ஞாழல் கவின்பெறு தழையள்
வரையர மகளிரின் அரியள்என்
நிறையரு நெஞ்சம் கொண்டுஒளித் தோளே.
192.தலைவி கூற்று
கோடுபுலம் கொட்பக் கடல்எழுந்து முழங்கப்
பாடுஇமிழ் பனித்துறை ஓடுகலம் உகைக்கும்
துறைவன் பிரிந்தென நெகிழ்ந்தன
வீங்கின மாதோ தோழியென் வளையே.
193.தோழிகூற்று
வலம்புரி உழுத வார்மணல் அடைகரை
இலங்குகதிர் முத்தம் இருள்கெட இமைக்கும்
துறைகெழு கொண்கநீ தந்த
அறைபுனல் வால்வளை நல்லவோ தாமே.
194.தோழிகூற்று
கடற்கோடு அறுத்த அரம்போழ் அவ்வளை
ஒண்தொடி மடவரல் கண்டிகும் கொண்க
நன்னுதல்இன்று மாஅல் செய்தெனக்
கொன்றுஒன்று கடுத்தனள் அன்னையது நிலையே.
195.தலைவன் கூற்று
வளைபடு முத்தம் பரதவர் பகரும்
கடல்கெழு கொண்கன் காதல் மடமகள்
கெடல்அரும் துயரம் நல்கிப்
படல்இன் பாயல் வௌவி யோளே.
196.தோழிகூற்று
கோடுஈர் எல்வளைக் கொழும்பல் கூந்தல்
ஆய்தொடி மடவரல் வேண்டுதி ஆயின்
தெண்கழிச் சேயிறாப் படூஉம்
தண்கடல் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ.
197.தலைவன் கூற்று
இலங்குவளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி
முகம்புதை கதுப்பினள் இறைஞ்சிநின் றோளே
புலம்புகொள் மாலை மறைய
நலம்கேழ் ஆகம் நல்குவள் எனக்கே.
198.தோழிகூற்று
வளையணி முன்கை வால்எயிற்று அமர்நகை
இளையர் ஆடும் தளையவிழ் கானல்
குறுந்துறை வினவி நின்ற
நெடுந்தோள் அண்ணல் கண்டிடும் யாமே.
வளைபடு முத்தம் பரதவர் பகரும்
கடல்கெழு கொண்கன் காதல் மடமகள்
கெடல்அரும் துயரம் நல்கிப்
படல்இன் பாயல் வௌவி யோளே.
196.தோழிகூற்று
கோடுஈர் எல்வளைக் கொழும்பல் கூந்தல்
ஆய்தொடி மடவரல் வேண்டுதி ஆயின்
தெண்கழிச் சேயிறாப் படூஉம்
தண்கடல் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ.
197.தலைவன் கூற்று
இலங்குவளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி
முகம்புதை கதுப்பினள் இறைஞ்சிநின் றோளே
புலம்புகொள் மாலை மறைய
நலம்கேழ் ஆகம் நல்குவள் எனக்கே.
198.தோழிகூற்று
வளையணி முன்கை வால்எயிற்று அமர்நகை
இளையர் ஆடும் தளையவிழ் கானல்
குறுந்துறை வினவி நின்ற
நெடுந்தோள் அண்ணல் கண்டிடும் யாமே.
199.தோழிகூற்று
கானலம் பெருந்துறைக் கலிதிரை திளைக்கும்
வானுயர் நெடுமணல் ஏறி ஆனாது
காண்கம் வம்மோ தோழி
செறிவளை நெகிழ்த்தோன் எறிகடல் நாடே.
200.தோழிகூற்று
இலங்குவீங்கு எல்வளை ஆய்நுதல் கவினப்
பொலந்தேர்க் கொண்கண் வந்தனன் இனியே
விலங்கரி நெடுங்கண் ஞெகிழ்மதி
நலங்கவர் பசலையை நகுகம் நாமே.
கானலம் பெருந்துறைக் கலிதிரை திளைக்கும்
வானுயர் நெடுமணல் ஏறி ஆனாது
காண்கம் வம்மோ தோழி
செறிவளை நெகிழ்த்தோன் எறிகடல் நாடே.
200.தோழிகூற்று
இலங்குவீங்கு எல்வளை ஆய்நுதல் கவினப்
பொலந்தேர்க் கொண்கண் வந்தனன் இனியே
விலங்கரி நெடுங்கண் ஞெகிழ்மதி
நலங்கவர் பசலையை நகுகம் நாமே.