வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday 17 September 2015

சந்த மரிய தஸ்நேவிஸ் ஆண்டவளின் பெருநாள் கட்டளை
திரிபுவன சராசரப் பொருளனைத்தையுமோ குரையாலருளிய தேவத்துவத்தின் ஊற்றாகிய பிதாவாகிய சர்வேசுரனுடைய குமாரத்தியுமாய்

தீய கனியால் விளைந்த மாய வினையொழிக்க மானுட ஜெனனமெடுத்த சுதனாகிய சர்வேசுரனுடைய தாயாருமாய்

திருச்சபைக்கலங்காரக் கிரீடமுந் தீர்க்க தரிசனர்க் கருட்பிரகாசமுமளித்த... திவ்விய இஸ்பிரீத்து, சாந்து சர்வேசுரனுடைய பத்தினியுமாய்

திரித்துவத்திலே ஏகத்துவத்தையறிந்துணரக் கிருபை புரிந்த, பரம இரகசியமாகிய தமத் திரித்துவத்தின் உன்னத தேவாலயமுமாய்

அரிய எஸ்கலீன் மலையில் யுவாம் பத்திரீஸ் அருளப்பருக்கு உறைபனி காட்சி தந்து ஆலயஞ் செய்பிக்க நிருபித்த தயாபரியுமாய்

அஞ்ஞான இருளினின்று மெய்ஞானத்தில் நிலைநிறுத்திய நமது ஞான பிதாவாகிய அர்ச்சியசிஷ்ட சவேரியார் நமக்கு பாதுகாவலாய் குறிப்பித்த பத்திராசனமுமாய்

1555-ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஒன்பதாந் தேதி மெனிலாப் பட்டணத்திலிருந்து சந்தலேனாள் கப்பல் வழியாய் நமக்கு கிடைக்கபெற்ற பொக்கிஷமுமாய்

அளவறுக்கப்படாத கிருபாகடாட்சத்தோடு தம் தம் போருகப் பத்மண்டினோரை ஆதரித்திரட்சை புரியும் மஹா அருட் பிரகாசியுமாய்

கிருபை திகழ் அன்னையிவளென நம்பினோர்க்கொரு துயரில்லையென்னும் ஆச்சரியத்திற்கோர் ஆஸ்பதமுமாய்

கிரீடாதிபதி கோத்திரத் துதையதாரகையாயெழுந்த உத்தம பாக்கியவதியுமாய்

கெஞ்சி மன்றாடுவோர் மனச்சஞ்சலந் தீர்த்தருளும் மூவஞ்சு தேவ இரகசியச் சஞ்சீவியுமாய்

கீர்த்தியாய் ஜோதிமதி மீனதனை ஒரொளியாய் ஜொலிக்கச் சீர்த்தி அமைத்த அற்புத அலங்காரியுமாய்

பரலோக பூலோக இராஜேஸ்பரியுமாய்
பாவிகளுக்ககடைக்கலமுமாய்

பிரீதியுடன் எழுகடல் துறைக்கும் நாமுண்டென்று சொல்லிப் பிசகாது பாதுகாக்கும் பேரின்ப இராக்கினியுமாய்

நமக்கு விசேஷ பாதுகாவலும் ஏக அடைக்கலமும் நேசமுள்ள தாயாருமாகிய

பனிமய தாயாகிய நமது திவ்விய
சந்த மரிய தஸ்நேவிஸ் ஆண்டவளின் மஹா கெம்பீரமான மகோன்னத திருநாள் கொண்டாடுவதற்கு வருகிற ஞாயிற்றுக்கிழமைப் பின்னேரம் நவநாள் துவக்கமென்றறிவீர்களாக.........!
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com