வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Friday 25 December 2015

களியலாட்டப்பாடல்-2




 
திவ்ய பாலனின் புகழ் பாட, வேம்பாறு சித்திரக்கவி முத்தையா ரொட்ரிகோ அவர்களின் எழுத்தோவியத்தில் உருவாகி, காலம் காலமாக வேம்பாற்று இளைஞர்களால் களியலாட்டம் மூலம் நினைவு கூறப்படும் பாடல் வரிகள் ...... 


மானுடவதாரமாயினார்
திரு மரியன்னை இடமுயர்
குருபரன் தேவசுதன் - (மானுட)


மானுடவதாரமானார் - மாட்சி சேர் பரம கோனார்
மண்டல லங்கிர்தனங்கள் - மனங்கள் சேர்வங்கிஷ
துதித்த எங்கள் - இங்கித மிகுந்த எங்கள்
ஆரணி காரணி சீரணி பூரணி
மாட்சி சேர் அன்னை மரியின் - மீட்சி மைந்தனார் தரையில் - (மானுட)

அண்டல விண்டலமெங்கும்
தொண்டர்களே வந்து - வந்து
தொண்டர்கள் மகிழ்ந்தன்பாக
எண்டிசை முழுதும் ஏக
சுடர் விடரடவியில் - அடரிடையர்கள் கண்டு
நடுநடுங்கிட - அருடரு திருமொழி நாதனைத் தூதர்கள்
நன்றே துதிப் பாடிட - பாடிட
போதினில் - போதினில்
பால்தயிரோடவர் - நாடிட - நாடிட
நலம் தரும்படி பெலம் புறந்தனில்
பெத்திலேனா வெற்றிகொளு
நற்றிட மாயுற்றிடு குணத்திசையி லுற்றவளர்
மூவர் நாமம் கொண்டு மனங்களி தெண்டனிடும்படி
கோத்திரத்தில் ஈன்றவரும் - பார்த்திபர்க் குயர்ந்ததுரை

யார் திருப்பொன் தூபம் மீரை
நேர்த்திகள் கொணர்ந்து மலர்
சீர்த்தி சேர் சரணம் வைத்து
தோத்திரம் புரிந்து பாட
பாதகப் பசாசு அறிய - பாதளம் எரிய
விம்மியே எரிய - எரிய
வெற்றிக்கபாடம் திறக்க - திறக்க
வெற்றிக்கொடிகள் பறக்க - பறக்க
மூதுரையா தெனில் - முதுவினை மாறிடப்போம்
வேத நாமம் கீத நாமம் பெத்தலேமில் அர்த்த சாமம்
சீதம் வந்து - வந்து வீச - ஓது வெல்லை மலைதனில்
வேசரியோடாடுமாடு - தாவிடும் குடிலைத் தேடி
மேவிடும் திரவியங்கள்
மாசில்லக் கன்னிமரியின்
காசினி புகழ்ந்திடும் சன்சூசையும் கைத்தாதை யாகத்தான்
தாம் தக தட்சண - திமிகிடத்தீம்
தீம் திக திட்சண - திமிகிடப்போம் - போம்
திருப்பாலகன் பாதம் தொழும் - உந்தன் செயல்
தம்பிப்பிள்ளை - ஐய்யா தம்பி கீதம் பாட - (மானுட)

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com