வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Wednesday 30 December 2015

திவ்ய பாலனின் பேரில் புகழ் பாடல்

வேம்பாறு சித்திரக்கவி முத்தையா ரொட்ரிகோ அவர்களின் 

எழுத்தோவியத்தில் உருவாகிய திவ்ய பாலனின் பேரில் புகழ் பாடல் 





ஆரிராரோ - ஆரிராரோ

ஆவை மாமரி தருபாலா



சரிகம பதநிசவெனவே

சங்கீத இசையெழத்தான் துயிலுவீர்

தூறும் பனியின் குளிரின் கொடுமை

ஆரும் நடுங்கச் செய்யும் இரவில்



வெல்லை மலைவாழ் ஆயர்குடிலில்

விரும்பிப் பிறந்தாய் புவிமீது

பொன்றா மகிமைக்குரிய உன் உடலைப்

போர்த்தவும் தகுந்தவோர் துகில் இல்லாது

பிள்ளை எனவே பள்ளி கொள்ளுமோ

வல்ல கடவுளே கண் துயிலாய்



எமையாளும் தயைக் கடலே ஞானம்

எரியும் சுடரார் மதியே பரனே

இமையோர் இறைஞ்சும் பவநோய் மருந்தே

எழில்சேர் தவமே இறையோர் குலமே

எழிலோ டினிதாய் பழிபாவமற

விழியே துயில்கொண்டிடு எம் பரனே!
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com