திவ்ய பாலனின் பேரில் புகழ் பாடல்
வேம்பாறு சித்திரக்கவி முத்தையா ரொட்ரிகோ அவர்களின்
எழுத்தோவியத்தில் உருவாகிய திவ்ய பாலனின் பேரில் புகழ் பாடல்
ஆரிராரோ - ஆரிராரோ
ஆவை மாமரி தருபாலா
சரிகம பதநிசவெனவே
சங்கீத இசையெழத்தான் துயிலுவீர்
தூறும் பனியின் குளிரின் கொடுமை
ஆரும் நடுங்கச் செய்யும் இரவில்
வெல்லை மலைவாழ் ஆயர்குடிலில்
விரும்பிப் பிறந்தாய் புவிமீது
பொன்றா மகிமைக்குரிய உன் உடலைப்
போர்த்தவும் தகுந்தவோர் துகில் இல்லாது
பிள்ளை எனவே பள்ளி கொள்ளுமோ
வல்ல கடவுளே கண் துயிலாய்
எமையாளும் தயைக் கடலே ஞானம்
எரியும் சுடரார் மதியே பரனே
இமையோர் இறைஞ்சும் பவநோய் மருந்தே
எழில்சேர் தவமே இறையோர் குலமே
எழிலோ டினிதாய் பழிபாவமற
விழியே துயில்கொண்டிடு எம் பரனே!