வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Friday 18 December 2015

முத்துக்களை பாதுகாக்கும் முத்தான வழிகள்…

அழகிய ஆபரணங்களில் முத்துக்கு முக்கிய இடமுண்டு. தங்க நகைகளைப் போலவே முத்துக்களை விரும்பி அணிபவர்கள் ஏராளம். நம் பண்பாட்டில் பன்னெடும் காலம் தொட்டே ஆழ்கடலில் மூழ்கி முத்துகளை சேகரிக்கும் வழக்கமும், முத்து நகை அணியும் வழக்கமும் தமிழரிடையே இருந்து  வந்துள்ளதை சங்கநூல்கள் இவ்வுலகிற்கு  தெளிவுபட எடுத்தியம்புகின்றன.

  • முத்துக்கள் ஒன்றுடன் ஒன்று உரசாமல் வைக்க வேண்டும்.
  • தங்க நகை அல்லது மற்ற ஆபரணங்களோடு முத்து நகைகளை வைப்பதை தவிர்க்க வேண்டும். அப்படி வைத்தால் முத்துக்களில் கீறல் விழும்.
  • காற்றுப் புகாத அறைகளில் முத்து ஆபரணங்களை வைக்க வேண்டாம்.
  • சென்ட், ஸ்பிரே மற்றும் வாசனைத் திரவியம், பொருட்களுடன் முத்து மாலைகளை வைக்கக்கூடாது. ஏனெனில் ரசாயனங்கள் முத்துக்களின் தன்மையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
  • முத்துமாலையை அணிவதற்கு முன்பும், கழட்டிய பின்பும் பருத்தி துணியால் சுத்தம் செய்ய வேண்டும்.
  • காகிதம் மற்றும் சாயம் போகும் துணியில் முத்துநகைகளை பொதிந்து வைக்கக்கூடாது. இவற்றைப் பயன்படுத்தி முத்து நகைகளை துடைக்கவும் கூடாது.
  • அமிலங்கள், ரசாயனப் பொருட்களுக்கு அருகே முத்துக்களை வைக்க வேண்டாம்.
  • நகைகளை கைகளால் எடுப்பதற்குப் பதில் ஹேர்பின், குச்சிகளைக் கொண்டு இழுக்கவோ, தரையில் உரசியபடி இழுப்பதையோ தவிர்க்க வேண்டும்.
  • நகைப் பெட்டியில் துணிமெத்தையில் முத்துநகைகளை வைத்துப் பயன்படுத்துவதே சரியான முறை.
  • பசுவின் சிறுநீர்,புளிப்புவகை காடி,பழச்சாறு ஆகியவற்றில் சுத்தி செய்து பசும்பாலில் சுத்தம் செய்ய வேண்டும். 
  • குண்டலி பரு ரசம்,புவியின் ரசம்,பொன்னங்காய் ரசம் ஆகிய வற்றில் மூன்று நாட்கள் ஊற வைத்தும் முத்தை சுத்தம் செய்யலாம்.
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com