சோழர்களின் கடல் வணிகம்

1020-ஆம் ஆண்டு சோழ மன்னர் ராஜேந்திரன் சீனாவுக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பி சாங் மன்னருடன் நட்புறவை ஏற்படுத்திக்கொண்டார். அதற்காக சீன அரசனுக்கு ஏராளமான பரிசுகளை அளித்து தூதுக்குழுவை அனுப்பி வைத்தார் .அந்த பரிசுகளை ஏற்றுகொண்ட சீன அரசர் தூதுக்குழுவினருக்கு பட்டு துணிகளை பரிசளித்து கௌரவப்படுத்தி இருக்கிறார். அதனால் சீனாவுடன் தொடர்ந்த நல்லுறவு சோழர்களின் கடல் வணிகத்திற்கு சாதகமாக அமைந்தது. அது குறித்து சீனக்குறிப்புகள் கூறுகிறபோதும்.
தமிழகத்தில் நேரடியாக கல்வெட்டு சான்றுகள் எதுவும் காணப்படவில்லை. ஆந்திராவின் நெல்லூர் அருகே உள்ள கிருஷ்ணபட்டணத்தில் கண்டறியப்பட்ட கல்வெட்டு ஒன்றில் மரக்கலம்,தோணி,படகு, கலவம், வேதி என்ற ஐந்து விதமான கடல் கலங்களை பற்றிய விவரங்கள் இருக்கின்றன .அதில் மரக்கலம், தோணி போன்றவை படகை போன்று நான்கு மடங்கு பெரியவை என கூறப்பட்டு இருக்கிறது.
நன்றி: தமிழ் வேங்கை