சிலுவை நண்டு

மறுநாள் நண்டு ஓன்று தன்னுடைய இடுக்கு கைகளில் சவேரியார் கடலில் விழுந்த இயேசுவின் பாடுபட்ட சிலுவையை பிடித்துக் கொண்டு வந்தது. இதைக் கண்ட தூய சவேரியார் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தார். சிலுவையை பெற்றுக் கொண்ட சவேரியார், மகிழ்ச்சி பொங்க அந்த நண்டை ஆசீர்வதித்தார்.
அந்த இனத்து நண்டுகளின் முதுகில் இன்றளவும் அந்த சிலுவை அடையாளம் உள்ளது என்பது வியக்கத்தக்கதாகும். இங்குள்ள பரதவர்கள் இந்த இனத்தின் நண்டுகளை குருசு நண்டு என அழைகின்றார்கள். அவற்றைப் புனிதமாகக் கருதுவதால் இன்றளவும் உணவுக்கு குருசு நண்டுகளை பயன்படுத்துவதோ கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.