வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 1 August 2023

பண்பாட்டில் சிறந்த பரதவர் 3
 

DGP A.X.Alexander IPS


உளவுப்பிரிவு DGP ஆக அவர் பணியாற்றிய போது , 1994 ஆம் ஆண்டு , ஜனவரி 20 ம் நாள்  ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.  சற்றும் எதிர்பாராத நிலையில் மறுமுனையில் அன்னை தெரசா பேசினார்... ' தமிழக முதல்வரை சந்திக்க வேண்டும் உடனடியாக பார்க்க முடியுமா?' என்று அன்னை வினவினார். அலெக்ஸாண்டர் அவர்கள் மீண்டும் அழைப்பதாக கூறிவிட்டு திகைத்து நின்றார்...

அது ஏறக்குறைய மதிய வேளை. முதல்வர் வீட்டில் உணவுக்குப்பின் ஓய்வெடுக்கலாம் என்பதால்  சற்று தயங்கியவாறே  முதல்வருக்கு போன் செய்தார்...மறுமுனையில் ஜெயலலிதா  'என்ன மிஸ்டர் அலெக்ஸாண்டர்' எனக் கேட்டார்.  அன்னையிடம் இருந்து போன் வந்த விபரத்தை கூறினார் DGP.

என்ன சொல்கிறீர்கள்?  உடனடியாகவா? தலைமைச் செயலகத்திலா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.  அலெக்சாண்டர் அன்னை ஜெயலலிதாவை அவர் வீட்டிற்கு வந்து சந்திக்க  விரும்புவதாக கூறினார். 'ஜெ ' யால் நம்ப முடியவில்லை... மிகவும் exited ஆகி கொஞ்ச நேரம் கொடுங்க ரெடியாகி விடுகிறேன் என்று சம்மதித்தார். அன்னை  போயஸ் கார்டன் வந்தார். ஜெயலலிதாவின் வீட்டில் ஒரே பரபரப்பாக இருந்தது.

முதல்வர் அன்னையை  மிகவும் உற்சாகமாக  குழந்தையைப் போல மகிழ்ச்சியுடன் வரவேற்றார்... ஆசீர் வாங்கினார்.  சிறு பிள்ளையாக மாறி அன்னையின் கரங்களைப்பற்றி பேசிக் கொண்டிருந்தார்... அன்னையின் கோரிக்கையான அனாதை இல்லத்திற்கு இடம் ஒதுக்க உத்தரவிட்டார். 

மற்றொரு கோரிக்கையான அவரது சகோதரிகளின் வாகனங்களுக்கு மாநில வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதை "உடனே பரிசீலிப்பதாக" ஜெயலலிதா உறுதியளித்தார். அரை மணிநேர சந்திப்பு ஒருமணி நேரத்தையும் தாண்டியது... அன்னையை தனது வீட்டின் வாசல்வரை வந்து வழியனுப்பினார் ஜெயலலிதா. 

வீட்டின் உள்ளே சென்றபின் அலெக்ஸாண்டரிடம்' அன்னை உள்ளே வந்தபோது  நீங்கள் முழந்தாள் படியிட்டு அவர் கையில் முத்தம் கொடுத்தீர்களே, என்னிடமும் சொல்லியிருந்தால் அவ்வாறே நானும் செய்திருப்பேன்', என்றார் இரும்பு பெண்... அலெக்சாண்டர் திகைத்து நின்றார்!

கமுதியில் பிறந்த அலெக்ஸாண்டர்,  செயின்ட் ஜோசப் கல்லூரி,  திருச்சியில் கல்லூரி படிப்பை முடித்தார். IPS படித்து அலெக்சாண்டர், 1970-பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றார். உளவுத்துறையின் புலி என்று வர்ணிக்கப்படும் அலெக்ஸாண்டர்,  அதிமுக ஆட்சியில் உளவுப் பிரிவின் தலைவராகஇருந்தார். தமிழக காவல்துறையின் உளவுப் பிரிவு டிஜிபியாக  இதுவரை உளவுப்பிரிவை ஏடிஜிபி மட்டத்திலான அதிகாரிகளே கவனித்து வந்தனர். இவர்தான்  முதல் முறையாக உளவுப் பிரிவின் தலைவர் பதவியில் டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.

பின்னர் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நெருங்கிய கூட்டம் இவருக்கு எதிராக பற்ற வைத்தனர். இதனால் மண்டபம் அகதிகள் முகாம் இன்சார்ஜ் ஆக நியமிக்கப்பட்டு, வெறும் ஜீப் மற்றும் 10 போலீஸ்காரகளுடன் பணியாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனால் அலெக்ஸாண்டருக்கு 8 மீண்டும் முக்கியத்துவம் தந்து அழைத்தார்  ஜெயலலிதா.

தமிழக குற்றப்பிரிவு டிஜிபியாக அவரை நியமித்தார். மேலும் சீருடைப் பணியாளர் (போலீஸ் செலக்ஷன்) தேர்வு வாரியத்தின்தலைவராகவும் ஆக்கினார். இந்தப் பணிகளைச் செய்து கொண்டே முதல்வருக்கு முக்கியமான ஆலோசனைகளையும் வழங்கிவந்தார் அலெக்ஸாண்டர். இந் நிலையில் அவரை உளவுப் பிரிவின் டிஜிபியாக நியமித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதற்கான உத்தரவை உள்துறைச்செயலாளர் ஷீலாராணி சுங்கத்  பிறப்பித்தார். 

உள்துறைச் செயலாளர் ஷீலா ராணி சுங்கத்தைப் போலவே சங்கராச்சாரியார் விவகாரத்தில் டிஜிபி கோவிந்தின் ஒத்துழைப்பும் அரசுக்குப்பரிபூரணமாகக் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் சுங்கத்துடன் சேர்த்து கோவிந்தும் மாற்றப்பட்டார். சங்கராச்சாரியார் விவகாரத்தைக் கையாளும் முக்கிய பொறுப்புகளில் இருந்து வந்த பிராமண சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அனைவரும் படிப்படியாக கழற்றிவிடப்பட்டனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று ஒரே நாளில் உள்துறைச் செயலாளரும், மாநில காவல்துறைத் தலைவரும் (டிஜிபி) அடுத்தடுத்து மாற்றம் செய்யப்பட்டது கோட்டை வட்டாரத்தில்பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்குப் பின்னரே அவர் மீண்டும் உளவுப்பிரிவுத் தலைவராக நியமனமானார். இப்போது மாநில டிஜிபியாகிவிட்டார்.

இவரது விசாரனை காலத்தில் சங்கரராமன் கொலை வழக்கு மற்றும் சங்கர மடம் மீதான புகார்களில் சிக்கினோரிடம் விசாரணை நடத்துவதற்குபுதிய பங்களா ஒன்றை காஞ்சிபுரம் போலீஸார் ஏற்பாடு செய்துள்ளனர். சங்கரராமன் கொலை வழக்கில் 20 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதவிர சங்கர மடத்தில் நடந்தபல மர்ம சாவுகள் குறித்த புகார்களும் வெளிக் கிளம்பி வருகின்றன. இதேபோல பாலியல் புகார்களும் வெளியாகின.

மத்திய அரசின் அழுத்தம் அதிகமாக இருந்தபோதும் முதல்வரின் ஆலோசனை பெற்று  சிறப்பாக செயல்பட்டார்.  நேர்மையான அதிகாரி என்று பெயர் பெற்றார். ஓய்வுபெற்ற பின் DGP நடராஜை தொடர்ந்து இவரும் அ தி மு க வில் சேர்ந்தார்.  ஆனால் ஜெயலலிதா இறந்து விட்டதால் அரசியலில் அக்கறை காட்டவில்லை. 

இலவசமாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான இறுதி தேர்வான நேர்முகத் தேர்வில் கலந்துகொள்வது எப்படி? என்ற மாதிரி interview நடத்தி பயிற்சி அளிக்கிறார். முன்னாள் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஏ.எக்ஸ். அலெக்சாண்டர் தனது ஒவ்வொரு விலைமதிப்பற்ற பேனாவைப் பற்றியும் சில சுவாரஸ்யமான கதைகளை விவரிப்பார். அவர் தனது சேகரிப்பின் எண்ணிக்கையை உண்மையில் வைத்திருக்கவில்லை என்றாலும், ஒரு பேனா எப்போது காணாமல் போகிறது என்பது அவருக்குத் தெரியும். 

"நான் வீட்டை தலைகீழாக மாற்றுகிறேன்," என்று அலெக்சாண்டர் சிரிக்கிறார். பார்க்கர் 51, ஷீஃபர், கிராஸ், வாட்டர்மேன் மற்றும் ST டுபான்ட் ஆகியவை அவரது மதிப்புமிக்க உடைமைகளில் சிலவற்றை உள்ளடக்கிய வழக்குகளில் அடங்கும் - மேலும் அவை அனைத்தும் அவரது வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டன.

பார்க்கர் 51 பேனாக்கள் மீதான அவரது மோகத்தைத் தூண்டியபோது அவருக்கு ஐந்து வயது. “எனது தந்தை கொழும்பிலிருந்து ஒரு பேனாவைக் கொண்டுவந்தார், அதை நான் இழுத்து திறக்க முயற்சித்தேன். நான் தவறுதலாக அதை முறுக்கிவிட்டு, சுத்த பயத்தில் உடனடியாக அதை திரும்பப் போட்டேன். என் தந்தை கண்டுபிடித்தார், நான் ஒரு சத்தம் பெற்றேன், ”என்று அவர் நினைவு கூர்ந்தார். ஆனால், பரீட்சைகளின் ஊடாகவும், பொலிஸ் சேவையில் நுழைந்தபோதும் அவருடன் இணைந்து கொண்டது இந்தப் பேனாதான். "இது எனக்கு விசேஷமாக இருந்தது...என்று 1970-பேட்ச் டாப்பர் கூறுகிறார்.

இவரது துணவியார் சென்னையில் புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவர்.டாக்டர். சிந்தியா அலெக்சாண்டர் குழந்தை பாக்கியம் எளிதில் கிட்டாதவர்கள் இவரது ஆலோசனை பெற்று  மக்கட் செல்வம் கிடைக்க பெருகின்றனர்.

- தேன்வளன்@ Joemel Fernando
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com