வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Sunday 27 August 2023

வைகைக்கரை நாகரீகம்.

பொ.யு.மு. முதலாம் நூற்றாண்டு முதல் இன்று வரை.....சங்கு வளையல்கள்.

பொலந் தொடி தின்ற மயிர் வார் முன்கை
வலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து - நெடுநல்வாடை 141,142

பொன்வளையல்கள் கழன்றுவிட்டதால் வளையல் இருந்த அழுத்தம் தோளில் காணப்பட்டது.

முன்கையில் சங்கு-வளையலும்,
காப்புக்காகக் கட்டிய கடிகைநூலும் இருந்தன.

பாண்டிமாதேவி பொன் வளைகளோடு சங்கு வளையல்களும் அணிந்திருந்தார் என்பது தெரியவருகிறது.
 
நெடுநல்வாடை நூலைப் பாடியவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார். இது 10 பாட்டு நூல்களில் ஒன்று – காலம் கி.மு. முதல் நூற்றாண்டு.
அழகன்குளம் அகழ்வாராய்ச்சியில் சங்கு வளையல்கள் மற்றும் சங்குகள் பொ.யு.மு. முதலாம் நூற்றாண்டை சேர்ந்தவை.





Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com