வைகைக்கரை நாகரீகம்.
பொ.யு.மு. முதலாம் நூற்றாண்டு முதல் இன்று வரை.....சங்கு வளையல்கள்.
பொலந் தொடி தின்ற மயிர் வார் முன்கை
வலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து - நெடுநல்வாடை 141,142
வலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து - நெடுநல்வாடை 141,142
பொன்வளையல்கள் கழன்றுவிட்டதால் வளையல் இருந்த அழுத்தம் தோளில் காணப்பட்டது.
முன்கையில் சங்கு-வளையலும்,
காப்புக்காகக் கட்டிய கடிகைநூலும் இருந்தன.
பாண்டிமாதேவி பொன் வளைகளோடு சங்கு வளையல்களும் அணிந்திருந்தார் என்பது தெரியவருகிறது.
நெடுநல்வாடை நூலைப் பாடியவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார். இது 10 பாட்டு நூல்களில் ஒன்று – காலம் கி.மு. முதல் நூற்றாண்டு.
அழகன்குளம் அகழ்வாராய்ச்சியில் சங்கு வளையல்கள் மற்றும் சங்குகள் பொ.யு.மு. முதலாம் நூற்றாண்டை சேர்ந்தவை.