வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Sunday 9 August 2015

அதிபத்த நாயனார் புராணம்


திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம் பன்னிரண்டாம் திருமுறை

இரண்டாம் காண்டம்

8. பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்


43. அதிபத்த நாயனார் புராணம்

 1. மன்னி நீடிய செங்கதிரவன் வழி மரபின்            3992-1
 தொன்மையாம் முதல் சோழர் தம் திருக்குலத்து உரிமைப்               3992-2
 பொன்னி நாடு எனும் கற்பகப் பூங்கொடி மலர் போல்              3992-3
 நன்மை சான்றது நாகப் பட்டினத் திரு நகரம்     3992-4

 2. தாம நித்திலக் கோவைகள் சரிந்திடச் சரிந்த                 3993-1
 தேமலர்க் குழல் மாதர் பந்து ஆடும் தெற்றிகள் சூழ் 3993-2
 காமர் பொற் சுடர் மாளிகைக் கரும் கடல் முகந்த       3993-3
 மாமுகில் குலம் மலை என ஏறுவ மருங்கு        3993-4

 3. பெருமையில் செறி பேரொலி பிறங்கலின் நிறைந்து             3994-1
 திருமகட்கு வாழ் சேர் இடம் ஆதலில் யாவும் 3994-2
 தருதலின் கடல் தன்னினும் பெரிது எனத் திரை போல்        3994-3
 கரி பரித் தொகை மணி துகில் சொரிவதாம் கலத்தால்          3994-4

 4. நீடு தொல் புகழ் நிலம் பதினெட்டினும் நிறைந்த      3995-1
 பீடு தங்கிய பல பொருள் மாந்தர்கள் பெருகிக் 3995-2
 கோடி நீள் தனக் குடியுடன் குவலயம் காணும்                3995-3
 ஆடி மண்டலம் போல்வது அவ்வணி கிளர் மூதூர்      3995-4




 5. அந்நெடும் திரு நகர் மருங்கு அலை கடல் விளிம்பில்      3996-1
 பன்னெடும் திரை நுரை தவழ் பாங்கரின் ஞாங்கர்       3996-2
 மன்னும் தொன்மையின் வலை வளத்து உணவினில் மலிந்த       3996-3
 தன்மை வாழ்குடி மிடைந்தது தட நுளைப் பாடி              3996-4

 6. புயல் அளப்பன என வலை புறம்பு அணை குரம்பை            3997-1
 அயல் அளப்பன மீன் விலைப் பசும் பொனின் அடுக்கல்      3997-2
 வியல் அளக்கரில் விடுந்திமில் வாழ்நர்கள் கொணர்ந்த         3997-3
 கயல் அளப்பன பரத்தியர் கரு நெடும் கண்கள்                3997-4

 7. உணங்கல் மீன் கவர் உறு நசைக் குருகு உடன் அணைந்த          3998-1
 கணம் கொள் ஓதிமம் கரும் சினைப் புன்னையங் கானல்   3998-2
 அணங்கு நுண்ணிடை நுளைச்சியர் அசை நடைக் கழிந்து   3998-3
 மணம் கொள் கொம்பரின் மருங்கு நின்று இழிய மருளும் 3998-4

 8. வலை நெடும் தொடர் வடம் புடை வலிப்பவர் ஒலியும்   3999-1
 விலை பகர்ந்து மீன் குவை கொடுப்பவர் விளி ஒலியும்       3999-2
 தலை சிறந்த வெள் வளை சொரிபவர் தழங்கு ஒலியும்       3999-3
 அலை நெடுங்கடல் அதிர் ஒலிக்கு எதிர் ஒலி அனைய         3999-4

 9. அனையதாகிய அந்நுளைப் பாடியில் அமர்ந்து              4000-1
 மனை வளம் பொலி நுளையர் தம் குலத்தினில் வந்தார்     4000-2
 புனை இளம் பிறை முடி அவர் அடித்தொண்டு புரியும்           4000-3
 வினை விளங்கிய அதி பத்தர் என நிகழ் மேலோர்    4000-4

 10.  ஆங்கு அன்பர் தாம் நுளையர் தம் தலைவராய் அவர்கள்            4001-1
 ஏங்கு தெண் திரைக் கடல் இடைப் பலபட இயக்கிப் 4001-2
 பாங்கு சூழ்வலை வளைத்து மீன் படுத்து முன் குவிக்கும்                 4001-3
 ஓங்கு பல் குவை உலப்பில உடையராய் உயர்வார்   4001-4

 11. முட்டில் மீன் கொலைத் தொழில் வளத்தவர் வலை முகந்து 4002-1
 பட்ட மீன்களில் ஒரு தலை மீன் படும் தோறும்            4002-2
 நட்டம் ஆடிய நம்பருக்கு என நளிர் முந்நீர்          4002-3
 விட்டு வந்தனர் விடாத அன்பு உடன் என்றும் விருப்பால் 4002-4

 12. வாகு சேர் வலை நாள் ஒன்றில் மீன் ஒன்று வரினும்     4003-1
 ஏக நாயகர் தங்கழற் கென விடும் இயல்பால்   4003-2
 ஆகும் நாளில் அநேக நாள் அடுத்து ஒரு மீனே              4003-3
 மேக நீர் படி வேலையில் பட விட்டு வந்தார்   4003-4

 13. மீன் விலைப் பெருகு உணவினில் மிகு பெரும் செல்வம்             4004-1
 தான் மறுத்தலின் உணவு இன்றி அரும் கிளை சாம்பும்        4004-2
 பான்மை பற்றியும் வருந்திலர் பட்ட மீன் ஒன்று           4004-3
 மான் மறிக் கரத்தவர் கழற்கு என விட்டு மகிழ்ந்தார்               4004-4

 14. சால நாள் இப்படி வரத் தாம் உணவு அயர்த்து         4005-1
 கோல மேனியும் தளரவும் தம் தொழில் குறையாச்   4005-2
 சீலமே தலை நின்றவர் தம் திறம் தெரிந்தே      4005-3
 ஆலம் உண்டவர் தொண்டர் அன்பு எனும் அமுது உண்பார்               4005-4

 15.  ஆன நாள் ஒன்றில் அவ்வொரு மீனும் அங்கு ஒழித்துத்              4006-1
 தூ நிறப் பசும் கனக நல் சுடர் நவமணியால்     4006-2
 மீன் உறுப்பு உற அமைத்து உலகு அடங்கலும் விலையாம்             4006-3
 பான்மை அற்புதப் படியது ஒன்று இடுவலைப் படுத்தார்        4006-4

 16. வாங்கு நீள் வலை அலைகடல் கரையில் வந்து ஏற        4007-1
 ஓங்கு செஞ்சுடர் உதித்து என உலகெலாம் வியப்பத்                4007-2
 தாங்கு பேரொளி தழைத்திடக் காண்டலும் எடுத்துப் 4007-3
 பாங்கு நின்றவர் மீன் ஒன்று படுத்தனம் என்றார்          4007-4

 17. என்று மற்று உளோர் இயம்பவும் ஏறு சீர்த் தொண்டர்      4008-1
 பொன் திரள் சுடர் நவமணி பொலிந்தமீன் உறுப்பால்                4008-2
 ஒன்றும் மற்றிது என்னை ஆள் உடையவர்க்கு ஆகும்            4008-3
 சென்று பொன் கழல் சேர்க எனத் திரை யொடும் திரிந்தார்               4008-4

 18. அகில லோகமும் பொருள் முதற்றாம் எனும் அளவில் 4009-1
 புகலும் அப்பெரும் பற்றினைப் புரை அற எறிந்த           4009-2
 இகலில் மெய்த் திருத் தொண்டர்முன் இறைவர் தாம் விடைமேல்   4009-3
 முகில் விசும்பிடை அணைந்தார் பொழிந்தனர் முகைப்பூ     4009-4

 19. பஞ்ச நாதமும் எழுந்தன அதிபத்தர் பணிந்தே            4010-1
 அஞ்சலிக் கரம் சிரம் மிசை அணைத்து நின்று அவரை          4010-2
 நஞ்சு வாண்மணி மிடற்று அவர் சிவலோகம் நண்ணித்து   4010-3
 அஞ்சிறப்புடை அடியர் பாங்கு உறத்தலை அளித்தார்               4010-4

 20. தம் மறம் புரி மரபினில் தகும் பெருந் தொண்டு      4011-1
 மெய்ம்மையே புரி அதிபத்தர் விளங்கும் தாள் வணங்கி        4011-2
 மும்மையாகிய புவனங்கள் முறைமையில் போற்றும்             4011-3
 செம்மை நீதியார் கலிக்கம்பர் திருத்தொண்டு பகர்வாம்          4011-4


shaivam.org
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com