கமல பந்த வெண்பா
வேம்பார் திவ்விய இஸ்பிரித்துசாந்து சர்வேஸ்பரனின் ஆலயத்தில் நடுநாயகமாக வீற்றிருக்கும் மரிய செங்கோல் நாயகியின் பேரில் வேம்பாறு சித்திரக்கவி முத்தையா ரொட்ரிகோ அவர்கள் புனைந்த கமல பந்த வெண்பா
கமலம் என்பது தாமரையைக் குறிக்கும். தாமரை மலர்களை ஓவியமாக்கி அதன் மகரந்தம் தொடங்கி அனைத்து இதழ்களிலும் கவிதையின் எழுத்துகளைக் குறிக்குமாறு கவி புனைவது கமல பந்த வெண்பா எனப்படும்.
ஜீவ பவ நீவ நவ தேவ தவமேவடிவ
தேவ சுதனைத்தரு ராஜேஸ்வரியே ஏவை
பவமாசணு காத்துய்ய செங்கோல் மாமரியே
நிம்ப நகர் வாசகசாலைக் கருளம்மா