வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Wednesday 29 June 2016

நெத்திலி மீன் குருமா
தேவையானவை :

நெத்திலி : அரை கிலோ
எண்ணெய் : 4 மே.கரண்டி
கடுகு : அரை தே.கரண்டி
வெந்தயம் : அரை தே.கரண்டி
கறிவேப்பிலை : 2 கொத்து
ப.மிளகாய் கீறியது : 2
பெ.வெங்காயம் : 2
சி.வெங்காயம் : 2
தக்காளி : 3
மஞ்சள் பொடி : அரை தே.கரண்டி
மி.தூள் : 1 தே.கரண்டி
தேங்காய் துருவல் : 1 கப்
சோம்பு : 1 தே.கரண்டி


அரைக்க :

தேங்காய், மஞ்சள் தூள், சி.வெங்காயம் மற்றும் சோம்பு இவற்றை நன்கு அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை இவற்றைச் சேர்க்கவும். கடுகு வெடித்ததும் பெரிய வெங்காயத்ததை போட்டு பொன்னிறமாக வதக்கவும். பின்னர் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி மிளகாய் தூள் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக வதக்கவும். இரண்டு கப் தண்ணீர் சேர்த்து மிளகாய் தூள் வாசனை மறையும்வரை நன்றாகக் கொதிக்கவிடவும். இதில் நன்றாகக் கழுவிய நெத்திலி மீனைப் போட்டு மூன்று அல்லது நான்கு நிமிடம் கொதிக்கவிடவும். கடைசியாக அரைத்த விழுதைச் சேர்த்து மிதமான சூட்டில் ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கிவிடவும்.

இது சாதத்திற்கோ, இட்லி, தோசைக்கோ சேர்த்து சாப்பிடலாம்.
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com