வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Sunday 31 July 2016

ஆமை புகுந்த வீடு உருப்படாது காரணம்
சனி கிரகம் மெதுவாக சுற்றி செல்வதால் அதற்கு ஆமை என்று தமிழில் வழக்கு உண்டு, குறிப்பாக நான் சந்தித்த மீனவர்களிடம் 

மெதுவாக சுற்றி செல்லும் கிரகத்தை குறிக்கும் சமஸ்க்ரித சொல், மெதுவாக செல்லும் ஆமைக்கும் குறிப்பாக இரண்டிற்கும் பொதுவாக உள்ளதால் ஆமைக்கு அவ பெயர் வந்ததோ என்னோவோ, எது எப்படி இருந்தாலும் 

புத்த மதத்தில் சனி தண்டம் ஏந்தியவராய், ஆமை வாகனம் கொண்டவராகவும் பார்க்க படுகிறார்.  வைணவர்களுக்கு கூரம் அவதாராகவும் உள்ள ஆமையை உலக கடற்கரை மக்கள் ஆமையை தெய்வமாக வணங்கியும், புலன்களை அடக்க ஆமையை வள்ளுவர் உதாரணம் காட்ட, சித்தர்கள் ஆமைகள் போல் சுவாசித்தால் நீண்ட நாள் உயிரோடு இருக்கலாம் என்ற சொல்ல 

கடல் தூதுவன், (ஆமைகளும், வாத்துகளும், முதலைகளும், பென்குயன் போன்றவை நிலத்திற்கும் கடலுக்கும் உள்ள தொடர்பு உள்ளவைகள் என்று கருதபட்டாலும் ஆமைகள் தனது இனபெருக்கதை நிலத்தில் செய்வதால் மற்றும் தாய்மையின் அடையாளமான ஆமையை செல்வம் என்று பல கடற்கரை மக்கள் கருதுவதால் கடல்ஆமைகளைக் கடல் தூதுவன் என கூறுவர் ) கடல் துப்புரவாளன், கடல் வழிகாட்டி என்ற பல நல்ல காரணிகள் இருந்து வருவதால் ஆமைகளை உணவிற்காக உண்பவர்களையும்,  ஆமைகள் அபசகுனம் என்று சொல்லி மக்களிடம் பணம் பறிக்கும் ஜோதிடர்களையும், ஆமைகள் இருந்தால் அபசகுனம் என்று சொல்லி சென்னை தேசிய விலங்கியல் அருங்காட்சியகத்தில் ஆமைகள் வைக்காத அதிகாரிகளையும் திருத்தி, மூட நம்பிக்கைகளை திருத்தி மனிதர்கள் வாழும் உலகத்தில் இயற்கையின் அங்கமான புவியின் மூத்த இனமான ஆமைகளை பாதுகாப்பது நம்மை போன்ற பலரின் செயலாகும்.


The word shani also denotes the seventh day or Saturday in most Indian languages.

The word shani(शनि) comes from Śanayē Kramati Saḥ (शनये क्रमति सः), the one who moves slowly, because Saturn takes about 30 years to revolve around the Sun.
source http://en.wikipedia.org/wiki/Shani

சிவ பாலசுப்ரமணி 
ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நடுவம்
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com