வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday 7 July 2016

பனிமய நாயகியின் பெருவிழா அழைப்பிதழ்
எழு கடற்றுறைக்கும் ஏக அடைக்கலத் தாயாக திருமந்திர நகரிலே கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் அருள்மிகு பனிமய நாயகியின் மகோன்னத ஆண்டுப் பெருவிழா வரும் 26.07.2016 அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று நண்பகல் 12.00 மணியளவில் நம் ஆத்தாளுக்கு பொன் மகுடம் அணிவிக்கும் சடங்கு நடைபெறுகிறது. 

11 நாட்கள் நடைபெறும் விழா நிகழ்வுகளில் தினமும் சிறப்புத் திருப்பலிகளும், மாலை 3.00 மணியளவில் தேர்ஸ்ஸும் நடைபெறும். 31.07.2016 அன்று மாலை 5.00 மணியளவில் எழு கடற்றுறை வாழ் பரதகுல மக்களுக்கென சிறப்புத் திருப்பலியும், 02.08.2016 அன்று மாலை 5.30 மணியளவில் கப்பல் மாலுமிகளுக்கென சிறப்புத் திருப்பலியும், 03.08.2016 அன்று காலை 11.00 மணியளவில் மீன்பிடித் தொழிலாளர்களுக்கான திருப்பலியும் நடைபெறுகிறது. 

தொடர்ந்து 31.07.2016 அன்று மாலை 6.15 மணியளவில் திவ்ய நற்கருணைப் பவனியும், 04.08.2016 அன்று மாலை  7.00 மணியளவில் பெருவிழா மாலை ஆராதனையும் 05.08.2015 அன்று காலை 5.30 மணி, 7.30 மணி, 12.00 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு சிறப்பு மகா ஆடம்பர பெருவிழா திருப்பலிகளும், அன்று 7.00 மணியளவில் நகர வீதிகளில் நாயகியின் மகோற்சவ பவனியும் வெகு விமரிசையாக நடைபெறும்.

06.08.2016  அன்று காலை 6.30 மணிக்கு கொடியிறக்கத்துடன் பெருவிழா நிகழ்வுகள் நிறைவு பெறுகின்றன. அனைவரும் பெருவிழா நிகழ்வுகளில் கலந்து கொண்டு பரதர் மாதவாம் பனிமய நாயகியின் அருள் பெற அன்புடன் அழைக்கிறோம்.  

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com