பாண்டி நாட்டில், மதுரை நாயக்கர்களின் ஆட்சி முறை:
மதுரையில் நாயக்க அரசை உருவாக்கிய விஜயநகர பிரதிநிதி விசுவநாத நாயக்கர்(கிபி1529-63), பாண்டி நாட்டு பகுதிகள் சிலவற்றை 72 பாளையங்களாக பிரித்து, அதனை 72 பாளையக்காரர்களின் கீழ் கொடுக்கிறார். இதனை பற்றி பழங்கால தமிழ் ஓலைச்சுவடி ஒன்றும், கி.பி.1611 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஏசுசபை பாதிரியாரின் கடிதமும் நமக்கு சான்று பகர்கின்றன.
விசுவநாத நாயக்கர் மதுரையிலே 72 கொத்தளங்களோடு கூடிய உட்கோட்டை சுவரையும், புறக்கோட்டை சுவரையும் உருவாக்குகிறார். போர் சமயங்களில் 72 பாளையக்காரர்களுமே தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் கொத்தளங்களிலே பொறுப்பேற்று அதனை எதிரியின் தாக்குதலிலிருந்து பாதுகாக்க கடமைபட்டவர்களாகும்.
பாளையக்காரர்களின் அரசாங்கம்:-
பாளையக்காரர்கள் தங்களுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள கிராமங்களில் காவல், நிர்வாகம், நீதிபரிபாலணை, வரி வசூல் ஆகியவை செய்து வந்தனர். வசூல் செய்த பணத்தில் மூன்றில் ஒரு பகுதியை நாயக்கர்களுக்கு வரியாக செலுத்திவிட்டு மற்றொரு பகுதியை படைகள் வைத்திருக்கவும், மீதமுள்ள பணத்தை தங்களது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தினர்.
பாளையக்காரர்களுக்கு கீழ் கொடுக்கப்படாத பகுதி சர்கார் நிலங்களாக இருந்தது, இங்கு வரிவசூல், நீதிபரிபாலணை ஆகியவற்றை செய்ய நாயக்கர்களால் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவ்விரண்டு நிர்வாக முறைக்கும் உட்படாத பாண்டிய நாட்டு பகுதிகள் தனியாக இயங்கியது.
(எ.கா) பரவர் நாடு(திருநெல்வேலி), கள்ளர் நாடுகள்(மதுரை)
பரவர் நாடு பற்றி போர்சுகீசிய பயணியின் குறிப்பு:-
மதுரை நாயக்கர்களின் ஆட்சி காலத்தில், பரவர் நாடு வந்திருந்த "பெர்னாவோ கெரேரோ" என்னும் போர்சுகீசிய பயணி தமது நூலில்.....
"பரவர்கள் தங்களது நிலப்பகுதியின் ஆட்சியாளர்களாக இருந்த பரதகுல தலைவர்களின் அரசாங்கத்தின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலப்பரப்பில் காவல், நிர்வாகம், நீதி பரிபாலனை ஆகியவை அனைத்தும் பரதகுல தலைவர்களிடமே இருந்தன" என்று குறிப்பிடுகிறார்.
________________________________
ஆதாரம்:-
1.The history of the Jesuit mission in madurai by J. S. Chandler pg. 2
2.Oriental Historical Manuscripts In The Tamil Language by William Taylor, Missionary Vol II pg:18
3.Portuguese Jesuit Fernao Guerreiro Pg. 108
கி.பி. 1552ல் பரதவர்க்கும் - ஆரியச் சக்கரவர்த்திக்கும் இடையே நடைப் பெற்ற திரிகோணமலை யுத்தம்..!
திருகோணமலை சமஸ்தானம் இலங்கையின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. திரிகோணமலையின் மன்னர் "வன்னிய ராஜா" இறந்தபோது இவரின் மகன் சிறுவனாக இருந்த காரணத்தால் "வன்னிய ராஜா" தம்பி "காபந்து ஆளுனராக" திரிகோணமலை நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார்.
கி.பி. 1552ல் யாழ்ப்பாண மன்னர் ஆரியச்சக்கரவர்த்தி முதலாம் சங்கிலி (1519-1561) என்பவர் இங்கு படையெடுத்து வந்து திரிகோணமலை நாட்டை கைப்பற்றி தனது ராஜ்யத்துடன் இணைத்ததோடு மட்டுமல்லாமல் எட்டு வயது சிறுவனாக இருந்த "வன்னிய ராஜா" குமாரனை கொலை செய்யவும் முற்பட்டார்.
"காபந்து ஆளுநர்" தனது அண்ணன் மகனை எப்படியோ காப்பாற்றி நாற்பது நம்பிக்கைக்குரிய பிரபுக்களுடன் திருநெல்வேலி பரதவர் நாட்டுக்கு தப்பி சென்றார், அங்குள்ள பரதகுல தலைவர்களிடம் உதவி கேட்டார். தங்களை நம்பி வந்தவர்களை கைவிடும் பழக்கம் பரதகுல சமூகத்திற்கு கிடையாது, எனவே அவருக்கு உதவ முடிவு செய்த பரதகுல தலைவர்கள் தங்களுக்கு கீழ் வெடிமருந்து ஆயுதங்களுடன்கூடிய இராணுவத்தை தயார் செய்கின்றனர்.
இப்படையை கொண்டு ஆரியச்சக்கரவர்த்தி முதலாம் சங்கிலி வசமிருந்த தன்னுடைய திரிகோணமலை நாட்டை தாக்குகிறார் "காபந்து ஆளுநர்''. மேற்சொன்ன தகவல் பிரஞ்சு வரலாற்று ஆசிரியரும் ஏசுசபை பாதிரியாருமான "டோமினிக்" அவர்கள் தனது "புனித பிரான்சிஸ் சவேரியார் வாழ்க்கை வரலாற்று" நூலில் பதிவு செய்தவைகளாகும்..
(இப்போரே தமிழர்கள் வெடிமருந்து ஆயுதங்கள் பயன்படுத்திய முதல் போராகும்..)
००००००००००००००००००००००००००००००००००००००००
ஆதாரம்:-
1,The Life of St Francis Xavier of The Society of Jesus, Apostle of Indies And of Japan. by Father Dominick Bohours, Pg 280
2,History of Ceylon An Abridged Translation of Professor Peter Courtenay's Work by MG. Francis. Pg 80
திரிகோணமலை யுத்தம்
Dev Anandh Fernando
05:40

மணப்பாடு நகரில் தான் பிரபல மிஷனரியும் தமிழ் மொழியின் மகா குருவுமான பாதிரியார் பெஸ்கி (வீரமாமுனிவர்) அடக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது கல்லறையை வீணாக தேடினேன். ஏனெனில் அனேகமாக இந்நகரத்தை ஆக்கிரமித்திருக்கும் மனல்மேடுகளின் கீழ் அவரை அடக்கம் செய்யப்பட்ட இடமிருக்கும். ஆயர் கால்டுவெல் மணப்பாடு நகரில் தான் வீரமாமுனிவர் அடக்கம் செய்யப்பட்டார் என்று கேள்விப்படுகிறார்.
ஆனால் அது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை நகராக இருக்கும் என்று எண்ணி அங்கு சென்றார். ஆனால் மணப்பாறை நகர மக்களும் அங்கு பணியாற்றிவரும் மிஷனரியும் வீரமாமுனிவர் திருநெல்வேலி சீமை மணப்பாடு நகரில் தான் இறந்து அடக்கம் செய்யப்பட்டதாக கூறினார்கள்.
வீரமாமுனிவர் சரியாக கிபி 1746 ஆம் ஆண்டு மரணமடைந்தார். வீரமாமுனிவர் மணப்பாடு நகரில் கிபி 1582 ஆம் ஆண்டு கட்டப்பட்ட சிலுவைநாதர் தேவாலயத்தின் பலிபீடம் பகுதியில் மற்ற மிஷனரிகள் அருகில் அடக்கம் செய்யப்பட்டார். ஆனால் அக்கோவில் தற்போது மணலால் மூடப்பட்டு 15 அடிக்கு கீழ் புதையுண்டு கிடைக்கின்றது.
வீரமாமுனிவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை குறிக்கும் வகையில் எந்த ஒரு கல்லறையும் கட்டப்படவில்லை. தற்போது இருக்கும் சிலுவையார் கோவில் கட்டுமான பணிகளின் போது இரண்டு மிஷனரிகளின் எழும்பு கூடு கிடைத்தது. ஆனால் அது யாருடையது என்ற குறியீடு கிடைக்கப்பெறவில்லை.
மணப்பாடு பரவர்களால் வீரமாமுனிவர் பெரிதும் பாரட்டப்படவில்லை என்று நான் நினைக்கிறேன். அற்புத அடையாளங்கள் செய்யக்கூடியர் என்னும் நற்பெயரைப் பெற அவர் அக்கறை கொண்டிருந்தால் கண்டிப்பாக அவர் கல்லறை பரவர்களால் பாதுகாக்கப் பட்டிருக்கும்.. .. என்று முடிக்கிறார் பிஷப் கால்டுவெல்.
----------------------------------------
Foot Notes:-
La Mission Du Madure Vol 3 By French Jesuit Father Joseph Bertrand. Pg: 59
History of Tinneveli By Bishop Caldwell. Pg: 243.
அச்சும் பதிப்பும், மா. சு. சம்பந்தன். பக்: 81
வீரமாமுனிவர் கல்லறை
Dev Anandh Fernando
11:00

பரவர்களின் வாசற்படி மறியல்
பரவர்களின் உயர்வகுப்பைச் சேர்ந்தவர்களின் திருமணம் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. இந்துக்கள் கடைப்பிடிப்பதைப் போன்றே பல இன்றியமையாத அம்சங்களும் நாட்களும் இந்தச் சடங்குகளில் உள்ளன - இவர்கள் ஒரு காலத்தில் இந்துமதத்தினராக இருந்தனர் என்பதை இது ஐயந்திரிபற எண்பிக்கிறது. இவர்களின் திருமணத்தின் ஒரு விசித்திரமான அம்சம், திருமணச் சடங்கு நடைபெறும் தேவாலயத்திலிருந்து மணமகளின் வீட்டிற்கு, பதாகைகளுடன் ஊர்வலம் செல்வது - இது அவர்களின் மூதாதையர்களின் அரசவம்ச அடையாளமாகக் கருதப்படுகிறது.
அப்பதாகைகளில் பாம்பு, மயில், பனைமரம், சங்கு, சூரியன், யானை, மீன் போன்ற உயிருள்ள மற்றும் உயிரிலிப் பொருட்களின் சாயல்களுடன் கூடிய சித்திரத்தையல் செய்யப்பட்ட இருபத்தொரு கொடிச் சின்னங்கள் உள்ளன. இவை தவிர பெரிய குடை, கவசம் இன்னபிற மணசோடனைகளும் எடுத்துச் செல்லப்படுகின்றன. மணமகன், சாதித்தலைவமோரின் அரச ஆடைகளை ஒத்த 'கபா' என்ற விசேட ஆடையை அணிகிறார். மேலும் அவர் வரும் பாதையில் அவர் செல்ல வெண்நிறத் துணிகள் தரையில் விரிக்கப்பட்டன.
இந்துமதத்திலிருந்து வெளியேறிவிட்டபடியால் முன்னைப்போல, முடிந்தவரை ஒருவன் தனது முறைப்பெண்ணை [தந்தை வழி அத்தை மகளையோ / தாய்மாமன் மகளையோ] திருமணம் செய்துகொள்ளும் முறைக் கல்யாண நடைமுறையை அவர்கள் கடைப்பிடிப்பதில்லை; ஆனால் இந்த நடைமுறையையின் முந்தைய கடைப்பிடிப்பை சுட்டிக்காட்டும் ஒரு சுவையான சடங்கு இன்னும் எப்போதாவது நிகழ்த்தப்பெறுகிறது. இஃது 'வாசபாடி மறியல்' [நுழைவுத் தடை] என்று அழைக்கப்படுகிறது.
மணமகனுக்கும், முறை நடைமுறையையின்படி மணமகளைத் திருமணம் செய்திருக்கவேண்டிய அவளின் உறவினருக்கும் இடையே ஒரு போலி சொற்போர் நடைபெறும். தேவாலய திருமணச் சடங்கு முடிந்து புதிய மணமக்கள் மணமகளின் வீட்டை அடைந்ததும், 'முறை மாப்பிள்ளை' தோன்றி மணமகனை வினவுகிறார்:
"மணம்நிறை மலர் மாலைகளுடன் - மணமகனைப் போல புதிய ஆடைகளும்
தலைப்பாகையுடன் பொருந்தமான சால்வையும் பூண்டு நகர்வீதியில் ஊர்வலமாக ஏன் வந்தீர்கள் என்று சொல்லுங்கள்."
மணவாளன்: "கத்தோலிக்கர்களின் கூட்டமே, என் தரப்பு நியாயத்தைச் சற்று கேளுங்கள்! தெய்வீகக் கன்னியாம் நமது பனிமய அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட புகழ்பெற்ற தேவாலயத்தில், இன்று காலை நமது அருட்திரு பாதிரியார் எனக்கொரு மணமகளை மணமுடித்தார்; அந்த மணமகளை நாடியே நான் வந்திருக்கிறேன்."
முறை மாப்பிள்ளை: "மணமகளைச் சந்திப்பது சரிதான், அதற்காக நீங்கள் வரத்தான் வேண்டும்; தீபங்களுடன் கூடிய இந்த ஆடம்பர ஊர்வலம் எதற்காக ? இந்தக் கம்பள விரிப்பு, இந்தப் பதாகைகள் மற்றும் இந்த மாபெரும் கூட்டம் எதற்காக? கல்யாணம் ஆனதிலிருந்து இவ்வளவு நேரம் மாப்பிள்ளை காலந்தாழ்த்தியது ஏன்?"
மணவாளன்: "நானிங்கு வருவதற்கான காரணத்தைக் கேட்பீர். நான் இவ்மணமகளை என் மனைவியாக ஏற்றுக்கொள்வது நமது இரட்சகராகிய இயேசுவின் விருப்பம். உங்கள் வீணாடம்பர வாதத்தை நிறுத்த உடன்படுங்கள். என் மணமகளை திருமணப் பந்தலுக்கு வெளியே அழைத்து வாருங்கள்."
முறை மாப்பிள்ளை: "கூடாரத்தில் உள்ள மணமகள் எனக்கு உரிமையான மணவாட்டி. ஆயிரம் பொற்காசுகள், யானைகள், குதிரைகள் மற்றும் கன்றுகளுடன் கூடிய பசுக்களை எனக்குக் கொடுத்தால் நான் அவளை உனக்கு மனைவியாகக் கொடுக்கிறேன்."
மணவாளன்: "நாளைய உதயத்தில் நீ கேட்பதை எல்லாம் தருகிறேன்;
எனது வாக்குறுதியின் அடையாளமாக தற்சமயம் நான் இந்த தங்க மோதிரத்தை உன்னிடம் ஒப்படைக்கிறேன்."
--------------------------------------------------------------------------‐-
Paravans - 'Vasapadi Mariyal'
[The marriage of a member of the upper classes is conducted with much ceremony. The ritual is in many essential features similar to that observed by the Hindus, and dates, no doubt, from the time when the Paravans were a Hindu caste. A peculiar feature of the wedding is the procession from the church (where the rite of marriage is performed) to the bride’s house with virudhus or banners, supposed to be the insignia of the kingly ancestors of the race. The emblems consist of twenty-one flags embroidered with representations of various objects, animate and inanimate, such as a snake, a peacock, a palmyra, a chank, the sun, an elephant, a fish, and so on. In' addition to these a large umbrella, a shield and other trappings are carried. The bridegroom wears a costume called kapa, resembling the state robes of the Jathitalavai-more, and white cloths are spread before him in his path.
Being no longer Hindus, they do not observe the morai system by which a man should always marry, where possible, a particular relation ; but a picturesque ceremony which points to the former observance of this rule is still occasionally performed. It is known as the “ Vasapadi Mariyal — “obstruction of the entrance ” — and consists in a mock contest of words between the bridegroom and the bride’s cousin, who, according to the morai rule, should have taken her in marriage. When the bridegroom reaches the bride’s house, after the church ceremony is over, the “ morai candidate ” appears and asks :—
Tell me why you came here in procession through the town With garlands of sweet-scented flowers —Attired like a bridegroom in head-dress and new cloths With a scarf over all to match.
Bridegroom — Hear, you assembly of Catholics, the justness of my cause !
In the glorious church, dedicated to the Virgin, Our Lady of the Snows, Our holy priest gave me a bride this morning in marriage;
To seek for that bride have I come.
Morai-bridegroom — Meet and right is it that you should come ; But why comes not the bridegroom all this while since the marriage was made ? What means all this pompous procession with torches, This spreading of carpets, these banners and this great gathering ?
Bridegroom — Hear the reason of my coming.
It is the will of Jesus our Saviour that I take the bride to be my wife. A truce to your prating vainglorious chatter ! Bring out the bride to the marriage- tent.
Morai-bridegroom — The bride in the tent is my rightful bride. Give me a thousand pieces of gold, Elephants, horses, and cows with calves, And I give her to you to be your wife.
Bridegroom-- At sunrise tomorrow I give all that you ask ; In token of my promise I surrender this gold ring
*You know well, as the old poetess Auvaiyar says; In making gifts we are the foremost.]
(NS: Liberius Fernando)
வாசற்படி மறியல்
Dev Anandh Fernando
22:47

Digital Rare Book :
Indian Shipping - A history of the sea-borne trade and maritime activity of the Indians from the earliest times.
Published by Longmans, Green & Co., London - 1912
Download pdf book:
https://bit.ly/4edOY3I
Radha Kumud Mukherjee (also spelled Radhakumud Mookerji; (25 January 1884 – 9 September 1963), also known as Radha Kumud Mukhopadhyaya, was an Indian historian and a noted Indian nationalist during the period of British colonial rule. He was the brother of the sociologist Radhakamal Mukerjee.
Mukherjee obtained a doctorate from the University of Calcutta in 1905 and joined the newly established National Council of Education, teaching at the Bengal National College. After 1915, he embarked on a series of tenures at universities in Benares, Mysore, and Lucknow.
He published Indian Shipping: A History of Seaborne Trade and Maritime Activity of the Indians from the Earliest Times in 1912. He was an advocate of the notion of Greater India in which Indian merchants and adventurers with huge fleets brought Indians to Southeast Asia and became the foundation of kingdoms in that region.
He was awarded the Padma Bhushan in 1957 for his contribution to Public Affairs.
- Wiki
Indian Shipping - A history of the sea-borne trade and maritime activity of the Indians from the earliest times.
By Radhakumud Mookerji
Published by Longmans, Green & Co., London - 1912
Download pdf book:
https://bit.ly/4edOY3I
Radha Kumud Mukherjee (also spelled Radhakumud Mookerji; (25 January 1884 – 9 September 1963), also known as Radha Kumud Mukhopadhyaya, was an Indian historian and a noted Indian nationalist during the period of British colonial rule. He was the brother of the sociologist Radhakamal Mukerjee.
Mukherjee obtained a doctorate from the University of Calcutta in 1905 and joined the newly established National Council of Education, teaching at the Bengal National College. After 1915, he embarked on a series of tenures at universities in Benares, Mysore, and Lucknow.
He published Indian Shipping: A History of Seaborne Trade and Maritime Activity of the Indians from the Earliest Times in 1912. He was an advocate of the notion of Greater India in which Indian merchants and adventurers with huge fleets brought Indians to Southeast Asia and became the foundation of kingdoms in that region.
He was awarded the Padma Bhushan in 1957 for his contribution to Public Affairs.
- Wiki
Indian Shipping
Dev Anandh Fernando
21:49

மின் > மீன்
மீன் என்றால் இன்றைய தமிழரில் பலரும் கடலில் வாழும் மீனினையே ( fish) நினைப்பர், உண்மையில் மீன் என்பது கடலில் மின்னும் மீன்களை மட்டுமல்லாது, வானில் மின்னும் மீனினையும் குறிக்கும். சங்க இலக்கியங்களில் மீன் என விண்மீன்கள் குறிக்கப்படுவதனைப் பல இடங்களில் காணலாம். மீன் என்பது தமிழில் இவ்வாறு நீர்நிலை மீனினையும் விண்மீனையும் சேர்த்துக் குறிப்பது போன்றே சிந்துவெளி முத்திரைகளிலும் மீன் என்பது குறித்தது.
அண்மையில் வெளிவந்த 'அகிம்சா' (Ahimsha) எனும் சிந்துவெளி நாகரிகம் பற்றிய நூலிலும் தேவ்தத் பட்நாயக் என்பவர் சிந்துவெளி முத்திரைகளிலுள்ள மீன் குறியீடானது விண்மீனையும் சேர்த்தே குறிக்கின்றது என்பதனை மீனின் உடம்பினில் வரையப்பட்டுள்ள ******* ( நட்சத்திர) வடிவத்தினைக் கொண்டு விளக்குவார். சிந்துவெளி நாகரிகத்துக்கும் தமிழுக்குமான தொடர்பினை வெளிக்கொண்டு வரும் மற்றொரு கூறு இதுவாகும்.
அரப்பா முத்திரைகளில் எழுமீன் (ஏழு மீன்கள்) பற்றியும் குறிப்பிடப்படுவதனைப் படங்களில் காணலாம். எழுமீன் என்பது வானில் எளிதாக வெற்றுக் கண்களால் பார்க்கக் கூடியதாகவுள்ள விண்மீன் கூட்டமாகும். இதனை பெருங்கரடி (Usra Major) என இன்று அழைக்கின்றனர். எழுமீன் பற்றிச் சங்க இலக்கியமான நற்றிணைப் பாடலும் குறிப்பிடுகின்றது.
"மை அற விளங்கிய மணி நிற விசும்பில் கை தொழும் மரபின் எழுமீன் போல" ( நற்றிணை 31 : 1-2) .
மூவேந்தர்களின் சின்னங்களான மீன், புலி, வில் ஆகிய மூன்றுமே சிந்துவெளி முத்திரைகளிலும் முகன்மை வகித்திருப்பதனையும் நாம் இங்கு நோக்கலாம்.
மின்னுவதால் மீன், அதாவது மீன்கள் (விண்மீன்) தாமாக ஒளிரக் கூடியவை, அதனால் மின்னுவதால் மீன் எனப்பட்டது . கோள்கள் அவ்வாறு தாமாக ஒளிர மாட்டாதவை, அவை மீன்களிலிருந்து ஒளியினைக் கொண்டு ஒளிரும், அதனால் கொள்வதனால் 'கோள்' எனப்படுகின்றது. எத்தகைய அறிவார்ந்த பெயரிடல் பார்த்தீர்களா!
மின்னுவதால் மீன்,
கொள்வதால் கோள்,
மீன், கோள் ஆகியன முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்கள்
Star = மீன் = விண்மீன்
நட்சத்திரம்
Planet = கோள் = கிரகம்.
- இலங்கநாதன் குகநாதன்
எழுமீன்
Dev Anandh Fernando
21:44

திருநெல்வேலி பேட்டை
பாண்டி நாட்டு கடலிலிருந்து எடுக்கப்படும் முத்துக்களை சந்தைப்படுத்த பரவர்கள் மூன்று அல்லது நான்கு பேட்டைகளை உருவாக்கியிருந்தனர். அவற்றுள் ஒன்றான திருநெல்வேலி டவுன் அருகிலிருக்கும் 'பேட்டை' முன்பு முத்து வணிகம் நடைபெற்று வந்த பரவர்களின் நகராக மட்டுமே இருந்தது...
பிரான்ஸ் நாட்டு ஏசுசபை பாதிரியார் மார்ட்டின் மற்றொரு பிரஞ்சு பாதிரியார் ஜோசப் பெர்ட்ராண்ட்க்கு கிபி 1838 ஜூலை மாதம் 14 ஆம் தேதி புன்னைகாயலிலிருந்து எழுதிய கடிமொன்றில்....
பரவர்களின் மிகப்பெரிய ஊராகிய 'பேட்டை' திருநெல்வேலிக்கு மிக அருகிலும் பாளையங்கோட்டையிலிருந்து ஒரு லீக் தூரத்திலும் உள்ளது என்று பதிவு செய்கிறார்...
குறிப்பு: இராமநாதபுரம் கடல்பகுதியில் குழிக்கபடும் முத்துகளின் விற்பனை மையம் பெரியபட்டிணத்தை அடுத்துள்ள முத்துபேட்டை. இங்கு பூர்வீக பரவர்கள் இன்றும் வாழ்கிறார்கள். முத்துகுழித்தல் வழக்கொழிந்தபின் இப்பரவர்கள் மீன்பிடித்தொழிலுக்கு மாறாமல் விவசாயம் சார்ந்த வெற்றிலை கொடிக்கால் தொழிலை முதன்மையாகச் செய்கிறார்கள்.
சோழமண்டல கடற்கரையில் மல்லிபட்டிணம் அருகே ஒரு முத்துபேட்டை உண்டு.
----------------------------------------
Encounters On The Opposite Coast by Markus Vink. Pg 77।
பேட்டை
Dev Anandh Fernando
20:15

ஆங்கிலேய - பிரஞ்சு கூட்டு படையினருக்கு எதிராக டச்சுக்காரர்க்கு படையுதவி செய்த பரதவர்கள்..!
கி.பி. 1672 முதல் கி.பி. 1678 வரை ஐரோப்பியாவில், பிரெஞ்சு நாட்டவர்களுக்கும் டச்சுக்காரர்களுக்கும் இடையே மிகப்பெரிய போர் நடைபெற்று வந்தது. இங்கிலாந்து இப்போரிலே பிரான்ஸ் நாட்டுடன் கூட்டணி வைத்திருந்தது. கி.பி. 1673 ஆம் வருடம் இங்கிலாந்து, பிரானஸ் கூட்டு படையினர் டச்சுக்காரர்கள் வசமிருந்த இலங்கை மீது தாக்குதல் நடத்த இருப்பதாக அபாயம் ஏற்பட்டிருந்தது.
டச்சுக்காரர்கள், பிரான்ஸ் - இங்கிலாந்து கூட்டு படையினருக்கு எதிராக திருநெல்வேலி பரதவர் நாட்டு தலைவர்களிடம் உதவி கேட்டனர். பரதகுல தலைவர்கள் டச்சுக்காரர்களுக்கு ஆதரவாக 500 பரதவர்களை அங்கு அனுப்பி வைத்தனர்.
இப்படையை கொண்டு, இலங்கையில் தங்கள் வசமிருந்த கோட்டைகளை, எதிரி படையினரின் தாக்குதலுக்கு எதிராக வலுப்படுத்தினர். படையுதவி செய்த பரதவர்களுக்கு 250 கலம் நெல்லும், 138 கிலோ வெள்ளியும் கொடுத்தனர்.
----------------------------------------
ஆதாரம்:-
Encounters on the opposite coast by Markus P.M.Vink Pg 293
டச்சுக்காரர்க்கு உதவிய பரதவர்
Dev Anandh Fernando
22:37

பரதவர்களின் பழமையான நாட்டமைப்பு & படைபலம்:
(விசுவநாத நாயக்கருக்கு முன்)
கி.பி. 1529 முதலே விசுவநாத நாயக்கர், விஜயநகர பிரதிநிதியாக மதுரையில் ஆட்சி பொறுப்பில் இருந்தாலும் திருநெல்வேலி அவருக்கு கட்டுபட்ட பகுதியாக இருக்கவில்லை. கி.பி. 1550 மேல் தான் திருநெல்வேலியை விஜயநகர படை உதவியுடன் தனது கட்டுப்பாட்டில் கீழ் கொண்டு வருகிறார். விசுவநாத நாயக்கரின் ஆட்சி திருநெல்வேலியில் ஏற்படும் முன்னரே அங்கு பரதவர்கள் நாட்டமைப்பு, படை பலத்துடன் இருந்ததை பற்றி ஆதாரத்துடன் காண்போம்.
திருநெல்வேலியில் கூட்டப்புளி முதல் வேம்பார் வரையிலான கிராமங்களை உள்ளடக்கியதே பரதவர் நாடு..!
பரதவர் நாடு பற்றி போர்சுகீசியரின் குறிப்பு:-
"மனுவேல் டி மொரையஸ் என்னும் போர்சுகீசியர் கி.பி. 1549 ஜனவரி 3 ஆம் தேதி தான் எழுதிய கடிதத்தில் இந்நிலப்பரப்பை பரதவர் ராஜ்யம் என்றே தான் பதிவு செய்கிறார்" முத்துக்குளித்தலுக்கு இந்நாடு உலகபுகழ்பெற்று விளங்கியதால் பரதவர் நாட்டை மேலைநாட்டு ஆவணங்களில் "முத்துக்குளித்துறை" என்றும் பதிவு செய்திருப்பதை நாம் காணலாம்.
பரதவர்களின் நாட்டமைப்பு பற்றி ஸ்பெயின் நாட்டவரின் குறிப்பு:-
கி.பி. 1542ல் பரதவர் நாட்டுக்கு வந்திருந்த ஸ்பானிஷ் மிஷனரி பிரான்சிஸ் சேவியர் தனது குறிப்பில்.....
"பரதகுல கிராமங்கள் தனி அரசாங்கத்தை கொண்டிருக்கிறது, அங்கு மன்னர்களின் தலையீட்டின்றி முழு அதிகாரமிக்கவர்ளாக பரதகுல தலைவர்களே இருக்கிறார்கள்" என்று குறிப்பிடுகிறார்.
பரதவர்களின் படைபலம்:-
நாடாளும் நட்பு அரசுகள் தங்களது போருக்கு வீரர்கள் தேவைப்பட்டால் பல்லாயிரக்கணக்கான போர்வீரர்களை தயார் செய்யும் கட்டமைப்பிலிருந்தது இந்த பரதவர் நாடு.
எடுத்துக்காட்டாக ....
கி.பி. 1478ல் சிங்கை பரராசசேகரன் என்பவர் யாழ்ப்பாணத்து மன்னராக முடிசூட்டிக் கொண்டார். இம்மன்னர் முதல் மனைவி இராசலட்சுமியம்மாள் மூலமாக சிங்கவாகு, பண்டாரம் என்னும் இரண்டு பிள்ளைகளையும், இரண்டாவது மனைவி வள்ளியம்மை மூலமாக பரநிருபசிங்கம் என்னும் பிள்ளையும், மற்றொரு பெண் மங்கத்தம்மாள் மூலமாக சங்கிலி என்னும் குமாரனையும் பெற்றார்.
முதல் மனைவியின் மூத்த மகன் சிங்கவாகுவை சங்கிலி விசம் வைத்து கொன்று விட்டான். முதல் மனைவியின் இரண்டாவது மகன் பண்டாரத்தையும், அவரின் இரண்டாயிரம் ஆதரவாளர்களையும் சங்கிலி வாளால் வெட்டி கொன்றான்.
இரண்டாவது மனைவியின் மகனான பரநிருபசிங்கத்திடம் அதிகார பங்கீடு செய்து கி.பி. 1519ல் தனது ஆட்சியை தொடங்கினான் சங்கிலி. இது வெகுநாட்கள் நீடிக்கவில்லை, சீக்கிரமே யாழ்ப்பாண அரசை தனக்கென வைத்து கொண்டான் சங்கிலி. கி.பி. 1546ல், பரநிருபசிங்கம் தனது குடும்பம், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் போர்சுகீசியர்களிடம் தஞ்சம் அடைந்தார்.
போர்சுகீசியர்களோ திருநெல்வேலியில் படை பலத்துடன் திகழ்ந்த பரதவர் நாட்டு தலைவர்களிடம் உதவி வேண்டி ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தினார். முடிவில் யாழ்ப்பாணத்தை சங்கிலியிடமிருந்து கைப்பற்றி முறையான வாரிசான பரநிருபசிங்கத்திடம் ஒப்படைப்பதற்க்காக 10,000 போர்வீரர்களை தங்களுக்கு கீழ் திரட்டத் தயார் என்று பரதகுல தலைவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பரதகுல தலைவர்களின் அறிவுறுத்தலின்படி செப்டம்பர் மாதத்தில் யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்து செல்ல போர்சுகீசிய பேரரசு முடிவு செய்தது..!
இப்படி பழமையான நாட்டமைப்பு முறை, படைபலம் போன்றவை எல்லாம் விசுவநாத நாயக்கர் திருநெல்வேலியில் கால்பதிக்கும் முன்னரே பரதவர்கள் கொண்டிருந்தனர்.
----------------------------------------
ஆதாரம்:
1. St. Fransis Xavier His life, His times Vol 3
By Father George Schurhammer Page 334, 371
2. St. Fransis Xavier His life, His times Vol 2 by Father George Schurhammer Page 307
பரதவரின் படைபலம்
Dev Anandh Fernando
20:44

கிரேக்க பயணி தாலமி'யின் குறிப்பில் பரதவர் நாடு..!
கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாலமி என்னும் கிரேக்க பயணி தனது பயணக் குறிப்பில் பரதவர் நாட்டை பற்றியும், அதன் முக்கிய நகரங்கள், முத்து குளித்தல் ஆகியவற்றை பற்றியும் பதிவு செய்கிறார்......
தாலமியின் குறிப்பு பரதவர் நாட்டை பற்றி கூறும் நான்கு விஷயங்களை இங்கு நாம் பார்ப்போம்.....
1. பரதவர் நாடு என்பது இன்றைய திருநெல்வேலி சீமையின் கடற்கரை பகுதி என்று குறிக்கப்படுகிறது. (குறிப்பு: மேற்சொன்ன கிரேக்க பயணி தாலமி தனது குறிப்பில் பரதவர் நாட்டை, பரதவர்களுக்கு வழங்கப்படும் மற்றொரு பெயரான கரையூர்வர் என்ற பெயரில் கரையூர்வர் நாடு என்று பதிவு செய்கிறார்)
2. முத்து குளித்தல் நடைபெறும் இடமாக கொற்கை வளைகுடா குறிக்கப்படுகிறது(இது இன்று மன்னார் வளைகுடா என்று அழைக்கப்படுகிறது)
3. தூத்துக்குடி, பரதவர் நாட்டின் முக்கிய துறைமுக நகரமாக குறிக்கப்படுகிறது.
4. தாமிரபரணி ஆற்று முகத்துவாரத்தில் அமைந்துள்ள, பரதவர் நாட்டின் முக்கிய நகரமான "கொற்கை" வர்த்தக ஸ்தலமாக திகழ்கிறது என்று குறிப்பிடுகிறது.
பரதவர் சமூகத்திற்கு கரையூர்வர் என்ற மற்றொரு பெயர் ஆதிகால தொட்டு உண்டு. இதனை பற்றி பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த காங்கேயனின் வலைவீசி ஓலைச்சுவடியும் பதிவு செய்கிறது பக்கம் எண். 53ல்.
__________________________________
ஆதாரம்:
Ancient India As Described by Ptolemy by J. W. McCrindle. Pg 57
தாலமி குறிப்பிடும் கரையூர்வர் நாடு
Dev Anandh Fernando
22:42

பரதகுல வில்லவராயர் கல்வெட்டுகள்:
வில்லவராயர் கல்வெட்டு: 1
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் ஐயா "ராவ் சாகிப் குஞ்சன் பிள்ளை"அவர்கள் தனது "Census of India, 1931 Travancore Part 1 பக்கம் எண். 381ல் பரதர் என்ற தலைப்பின் கீழ்......
"கத்தோலிக்க சமயத்துக்கு மாற்றப்பட்ட கன்னியாகுமரி பகுதி வில்லவராயர்கள், வில்லவராயர் என்னும் பரதவர்குல மகாராஜாவின் வம்சாவளியினராக தங்களை அடையாளம் காண்கின்றனர்" என்று குறிப்பிடுகிறார்.
மேலும் "ராவ் சாகிப் குஞ்சன் பிள்ளை" கூறுகையில்....
"கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இருக்கும் 800 வருடங்கள் பழமையான கல்வெட்டு மேற்கூறிய பரதவர்குல மகாராஜாவின் ஆட்சி அதிகாரத்தை குறித்து நமக்கு சான்று பகர்கின்றன" என்று பதிவுசெய்கிறார்.
வில்லவராயன் என்னும் பட்டப் பெயரை இன்றும் திருநெல்வேலி சீமை மற்றும் நாஞ்சி வளநாட்டில் பரதவர்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர். "சூசன் பெய்லி" என்னும் ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர் தனது "புனிதர்கள், பெண் தெய்வங்கள் மற்றும் அரசர்கள்" என்னும் நூலில்....
"பரதவர்கள் மத்தியில் இன்றும் பொதுவாக பயன்படுத்தப்படும் கிரிஸ்துவமல்லாத பரம்பரை பெயர்களாக வில்லவராயர், காலிங்கராயர்,
பூபாலராயர் மற்றும் ராயர் ஆகியவை என்று பதிவு செய்கிறார்.
வில்லவராயர் கல்வெட்டு: 2
மாவட்டம்: திருநெல்வேலி
வட்டம்: பாளையங்கோட்டை
ஊர்: மணப்படைவீடு
அரசு: -
அரசன்: -
வரலாற்று ஆண்டு: கி.பி. 1441
இடம்: முன்றீஸ்வரமுடைய நாயனார் கோவில் மகாமண்டபம் தெற்கு அதிட்டானம்
கல்வெட்டு குறிப்புரை: "மார்த்தாண்டப் பெருமாளான வில்லவராயர்" என்பவருக்கு நொந்தாவிளக்கு எரிவதற்காக கோயில் தேவன் மகள் 100 பணம் வழங்கிய செய்தியைத் தருகிறது.
----------------------------------------
Foot Notes:-
Census of India, 1931 Travancore Part 1 by Rao Sahib N. Kunjan Pillai. Pg 381.
வில்லவராயர்
Dev Anandh Fernando
06:37

இன்று நாங்கள் பழங்கால கல்நகரத்தை சீனாவில் கண்டுபிடித்துள்ளோம் என்று உலக தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் பரவர்களோ வருடா வருடம் ஒரு கல்நகரத்தை உருவாக்கி வந்தனர் என்று எத்தனை பேருக்கு தெரியும்.
"சீசர் ஃபிரடெரிக்" என்ற இத்தாலி நாட்டு பயணி இது குறித்த குறிப்புகளை தமது நூலில் நமக்கு தருகிறார். அவற்றுள் சில ....
கன்னியாகுமரி தொடங்கி இலங்கையில் உள்ள சிலாபம் முடிய உள்ள இடைப்பட்ட கடற்பரப்பில் முத்து குளித்தல் நடைபெற்று வந்தது. ஒவ்வொரு வருடமும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் முத்து குளித்தல் ஆரம்பமாகி, பிறகு தொடங்கிய பதினைந்தாவது நாளில் முடிவடையும்.
பரவர்களுள் மூழ்கி முத்தெடுப்பதில் மிக சிறந்தவர்கள். கன்னியாகுமரி முதல் இலங்கையின் சிலாபம் முடிய உள்ள இடைப்பட்ட கடற்பரப்பில் கடலுக்கு அடியில் சென்று முத்து சிப்பிகளின் இருப்பை கண்டறிவர். அதன்பிறகு கடலில் எந்த இடத்தில் முத்து சிப்பிகள் தென்படுகிறதோ அதற்கு எதிரே உள்ள கரையில் கற்களாலான ஒரு நகரத்தை கட்டியெழுப்புகின்றனர் பரவர்கள்.
இந்த கல்நகரில் உள்ள அம்சங்கள்:
பரவர்கள் அங்கு தற்காலிகமாக தங்கியிருந்து முத்துக்குளிக்க அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகள் முழுவதும் கற்களால் கட்டப்படுகிறது. கூடவே கடலில் மூழ்கி எடுத்த முத்துக்களை வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வசதியாக முழுவதும் கற்களால் கட்டப்பட்ட கடைகளை கொண்ட ஒரு பஜார் உருவாக்கப்படுகிறது.
முத்து குளித்தல் பதினைந்து நாட்களில் முடிவடைந்து, முத்துக்களை பஜாரில் வியாபாரிகளுக்கு விற்பனை செய்த பிறகு தாங்கள் கட்டியிருந்த மாபெரும் கல்நகரத்தை பரவர்கள் தீக்கிரையாக்குவர்.
०००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००
ஆதாரம்:
Purchas His Pilgrims Vol X Pg. 105
- UNI
பரவர்களின் கல்நகரம்
Dev Anandh Fernando
23:03

பண்டைய சேரநாட்டில் பரவர்கள் பெயரில் வழங்கிவந்த வயல் நிலங்கள்:
ஸ்ரீ வல்லவங்கொதை என்பவன் கிபி பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த வேணாட்டு அரசன் ஆவான். இவன் கேரளா மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் திருவண்வண்டூர் நகரில் அமைந்துள்ள கோவிலுக்கு பரவர்களுடைய வயலிலிருந்து ஆண்டுதோரும் இருபது கலம் நெல் தானமாக ஒதுக்கியுள்ளதை பற்றி.....
"கோவிந்தனார்கரி நூற்றுக்கலமும் #பரவனார்கரி இருபது கலமும்.... "
என்று திருவண்வண்டூர் கோவில் கல்வெட்டு பதிவு செய்கிறது.
இதன்மூலம் சேரநாட்டில் வாழந்த பரவர்கள் தங்களுடைய வயல்களுக்கு தங்களுடைய இனப்பெயரையும் அதற்கு பெயராக வைத்துள்ளனர் என்பதனை ஆதாரபூர்வமாக அறியமுடிகிறது.
०००००००००००००००००००००००००००००००००००००००००००००००
Foot Notes:-
Travancore Archaeological Series Vol II Part II Pg. 23, 24
- UNI
சேரநாட்டில் பரவர்கள்
Dev Anandh Fernando
23:17

விஜயநகர பேரரசு ஆட்சியில் பாண்டிய நாடு
விஜயநகர பேரரசின் பிரதிநிதியாக கிபி 1529 முதல் கிபி 1623 வரை மதுரையை ஆண்டவர்களின் பெயர் பட்டியல்....
1.விசுவநாத நாயக்கர்(1529-1564)
2.குமார கிருஷ்ணப்ப நாயக்கர்(1564-1572)...
3.வீரப்ப நாயக்கர்(1572-1595)
4.இரண்டாம் குமார கிருஷ்ணப்ப நாயக்கர்(1595-1602)
5.முத்து கிருஷ்ணப்ப நாயக்கர்(1602-1609)
6.முத்து வீரப்ப நாயக்கர் (1602-1623)
7.திருமலை நாயக்கர் (சில ஆண்டுகள் மட்டுமே)
விஜயநகர பேரரசின் மதுரை ஆளுநர்கள் தங்களுக்கு கப்பம்கட்ட மறுக்கும் நாடுகளின் செல்வங்களை கொள்ளையடித்து வந்தனர். அறிவிப்பின்றி அந்நாடுகளுக்குள் வடுகப்படைகளுடன் நுழைந்து கிராமங்களை சூறையாடி செல்வதாகும். இவ்வாறு, விஜயநகர பேரரசுக்கு வரிகட்ட மறுக்கும் திருவிதாங்கூர் மகாராஜாவின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளை நாயக்கர் படைகள் ஒவ்வொரு வருடமும் கொள்ளையடித்து செல்வது வழக்கம்.
ஒவ்வொரு வருடமும் விஜயநகர பேரரசின் மதுரை நாயக்கர் படைகள் வரி கெட்ட மறுக்கும் பரவர் நாட்டை தாக்கி கிராமங்களை கொள்ளையடித்து செல்லுவது வழக்கமாக இருந்தது. கிபி 1596 ஆம் ஆண்டு பரவர்கள் சார்பில் நல்லுறவை ஏற்படுத்த மதுரை சென்றிருந்த போர்சுகீசிய ஏசுசபை பாதிரியார் கொன்சாலோ பெர்ணான்டஸை மன்னர் இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர்(1595-1602) வரவேற்று தன் தலைநகர் மதுரையில் தங்கியிருந்து வணிகம் செய்து வரும் பரவர்களின் வழிபாட்டு தேவைகளுக்காக அங்கேயே தேவாலயம் மற்றும் மடாலயம் கட்டி கொள்ள அனுமதி வழங்கினார்.
புதிதாக கட்டப்பட்ட இத்தேவாலயத்தில் பங்கு தந்தையாக பணியாற்றியது மட்டுமின்றி பரவர்கள் சார்பில் நாயக்கர் மன்னர் அரசவையிலும் போர்சுகீசிய ஏசுசபை பாதிரியார் கொன்சாலோ பெர்ணான்டஸ் இடம்பெற்றிருந்தார். அடுத்து வந்த விஜயநகர பேரரசின் மதுரை ஆளுநர் முத்து கிருஷ்ணப்ப நாயக்கர்(1602-1609) பரவர்களுடன் சுமுகமான போக்கினை கைகொள்ளவில்லை. இம்மன்னரின் தளவாய்களில் ஒருவராக சடையக்க தேவர்(எ) உடையான் சேதுபதி என்னும் தமிழர் நியமனம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.(சேதுபதி மன்னர் வரலாறு Dr. எஸ். எம். கமால் பக்கம்.20)
கிபி 1606 ஆம் ஆண்டு போர்சுகீசிய வணிக கப்பல் விபத்துக்குள்ளாகி தூத்துக்குடி அருகில் சேதமடைந்த நின்று விட்டது. கப்பலில் இருந்து பொருட்களை பரவர்கள் மீட்டனர். இதற்கு நன்றியாக மீட்கப்பட்ட பொருட்களில் நான்கில் ஒரு பகுதியை பரவர்களுக்கு விட்டுதருவதாக போர்சுகீசியர்கள் வாக்களித்திருந்தனர்.
இதனை கேள்வியுற்ற முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் தனது அரசவையில் இருந்த மேற்கூறிய போர்சுகீசிய ஏசுசபை பாதிரியார் கொன்சாலோ பெர்ணான்டஸை பரவர்களிடம் தூதனுப்பி கப்பல் மீதும் அவற்றிலுள்ள பொருட்கள் மீதும் உரிமை கோரி 5,00,000 போர்சுகீசிய நாணயங்களை கேட்டு மிரட்டினார். தரவில்லையெனில் கொன்று விடுவதாகவும் அச்சுறுத்தினார்.
பரவர்கள் மறுக்கவே முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் தமது படைகளை அவர்களுக்கெதிராக போருக்கு அணிவகுத்து சென்றார். பரவர்களுடன் இரண்டு மாதங்கள் கடுமையாக மோதி பின்வாங்கினார் முத்து கிருஷ்ணப்ப நாயக்கர். இதற்கு அடுத்து வந்த முத்து வீரப்ப நாயக்கர் (1609-1623) தமது விஜயநகரபேரரசு படைகளுடன் வரிகெட்ட மறுத்த பரவர் நாட்டை கிபி 1612 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தாக்கி, கிராமங்களை கொள்ளையடித்து சென்றார். இம்மன்னருக்கு அடுத்து வந்தவரே திருமலை நாயக்கர். இந்த திருமலை நாயக்கரின் ஆட்சியின் தொடக்கத்திலேயே விஜயநகர பேரரசின் ஆட்சி பாண்டி நாட்டில் முடிவுற்று தன்னாட்சி உருவானது.
----------------------------------------
Foot Notes:-
Travels of Jesuit in to various parts of the world by John Lockman. Pg 367.
Aravidu Dynasty of Vijayanagar by Jesuit Henry Heras. Pg 363-64
Goa Portuguese Doc,HAG,MDR,livro 12,Codice 15/3/4.
- UNI
விஜயநகர ஆட்சியில் பாண்டி நாடு
Dev Anandh Fernando
07:27
