வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday 25 August 2016

இரத்த பூமி - பாகம் 6

AANAA MAALUM KULLUM INDA ESKITH

நாயக்க படைகள் எதிர்பாரின்றி புன்னை நகரை சுற்றி வளைத்தது. உயிர் பிழைத்து கிடந்த இரப்பாளியின் கொள்ளையர்களும் இணைந்து கொள்ள வெறியாட்டம் துவங்கியது. எதிரிகளால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் இந்த நிமிடத்திலிருந்து எதுவும் நடக்கலாம் தங்களை காக்கும் தலைவன் கொற்கை கோ வின் நிலைமை என்ன அவரில்லாத நிலையில் தங்களுக்கு ஏற்படப்போகும் முடிவை நினைத்து கோட்டைக்குள் மக்கள் பீதியில் உறைந்து போய் இருந்தார்கள்.

கொற்கையை ராயன் தூக்கிக்கொண்டு பாண்டியம்பதி அரண்மனையை நோக்கி ஓடி வரும் போதே பரத்திகளின் அழுகுரலால் கோட்டையே மையானமாகி போனது வாசலில் நின்றிருந்த கொற்கை கோ வின் தாயார் வள்ளி நாச்சியம்மை என் ராசாவுக்கு என்னாச்சி என ஒரு நிமிடம் உடைந்து போனவர்கள் மக்களை சோர்வடைய விடக்கூடாது என்பதால் தன் பதட்டத்தை அடக்கி சின்னவருக்கு சின்ன காயம் தான் நான் பார்த்துக்கிறேன் என்றபடி உள்ளே போனார்கள் மற்றபடி கொற்கை கோ வின் நிலைமை என்ன எவருக்கும் எதுவும் தெரியாது.

கோட்டையின் மேற்கே அமைந்திருந்த பரதவரின் குடிசைகளை, வீடுகளை அடித்து உடைத்து நாசமாக்கி தீயிட்டு கொளுத்தி குதுகலத்தோடு கொள்ளையர்கள் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருந்தனர் ஆனாலும் கோட்டை வாசலை தாக்கி உள்ளே நுழைய பயந்தே இருந்தனர். கோட்டை தாக்குதலை தொடங்க இரப்பாளியின் வருகைக்காக காத்திருந்தனர்.

வானுயர தீ கொழுந்து விட்டெறிய கோட்டைக்கு மேலே மதிற்சுவரின் நடைவாரங்களில் பதுங்கியிருந்த பரதவ மறவர்கள் அனைவரும் பகைவரின் அட்டூழியம் கண்டு சினந்து போய் கிடந்தனர் அங்கே தான் காத்தவராயனும் காணியாளனும் இருந்தனர்.

கொற்கை கோ களமாடியிருக்க கூடாது கொட்டின் கோ போல அவரும் கட்டளையிட்டு கொண்டு கோட்டையில் இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது பாண்டியனாரின் திட்டங்கள் அனைத்தும் அறிந்தே செயல்படுத்தினார் கொற்கை கோ. ஆனால் கொற்கை இல்லாத நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன நமக்கு ஒன்றுமே தெரியாது. கேப்டன் க்காவது ஏதாவது தெரியுமோ என்னவோ மூர்படை இன்னும் வருவதாக சொல்கிறார்கள். என்ன செய்வதென்று ஒன்றுமே முடியாத நிலையில் உள்ளோமே கோட்டைக்குள்ளே நாம சமாதி தான் போல என காணியாளன் விரக்தியில் விசும்பினான்.

விடு நாச்சியம்மை பெரிய மருத்துவச்சி தெரியுமா வெட்டுப்பட்ட கையை கொடுத்தாலே ஒட்டி தந்துருவாங்க. கொற்கை நாளை காலைக்குள் பழைய கொற்கையாக வருவார் என நம்பிக்கைகூறியவன், நீயே இப்படி பயந்தால், பெண்பிள்ளைகளும் குழந்தைகளும் எப்படி..?  ஆமாம் குழந்தைகள் குமரிகள் எல்லோரும் எங்கே ஒரு சனத்தையும் இன்றைக்கு பார்க்க முடியவில்லையே? எனக் கேட்டான் காத்தவராயன்.

எனக்கென்ன தெரியும் ஏதோ ஏற்பாடு பண்ணியிருக்கிறேன்னு கொற்கை சொன்னார். அதானே நேற்று இரவே கடல்வழி கடத்தியிருப்பார். இல்லை நமக்கு தெரியாமலா இருக்காது. கோட்டைக்கு வெளியே அப்போது எழுந்தது காட்டுக் கூச்சல் இருவரும் கோட்டை மதிற்சுவரின் மேலே பதுங்கி இருந்த மற்றவர்களை கடந்து கிழக்கு கோட்டை வாசல் பக்கமாக தவழ்ந்தபடி ஊர்ந்து சென்றனர். அங்கே... கடற்கரையில் வரிசை வரிசையாக 10, 15 பாய்மரக் கப்பல்கலில் கொள்ளையர்கள் வந்து இறங்கி கொண்டிருந்தார்கள்.

காணியாளன் கருவினான் ஒரு ஊரை பிடிக்க உலகத்தையே திரட்டிவிட்டு வந்திருக்கானா நாயக்கன். விவரம் தெரியாம பேசாதே கால காலமா இதுதான் நடக்குது. எங்க பூட்டா சொல்லியிருக்காரு வடக்க கைலாச மலையிலையிருந்து கன்னியாகுமரிக்கு தெக்க குமரி நாடு வரைக்கும் பாண்டியமார் நாமதான் இருந்தோமாம். அப்போ மேக்கால இருந்து வெள்ளை காட்டானுவ ஆயிரக்கணக்கா வந்து வந்து நம்ம இடத்தையெல்லாம் புடிச்சிட்டானவளாம் நம்ம பாண்டிமார் சரித்திரங்களை பாண்டவர்னு மாத்தி அயோத்தி பரவமார் நம்மளை விரட்டியே வுட்டுட்டானுவளாம்.

இப்படித்தான் ஒருத்தனை பத்து பெரு சேர்ந்து அடிக்கிறதுதான் கோழை பயலுவ வீரம் அதான் பேசாதே நடப்பதை கவனி. அவனை அமைதியாக்கினான் ராயன். கையில் தீப்பந்தங்களோடு படைசூழ ஒரு கூட்டம் கடற்கரையிலிருந்து இரப்பாளி... இரப்பாளி.... இரப்பாளி.. என கூக்குரலிட்டபடி மேலேறி வந்தது. நாயக்க தளபதி ஒருவன் கட்டி அனைத்து வரவேற்றான்,....... அது... இரப்பாளி, ஆறடி உயரத்தில் மெல்லிய தேகத்தோடு ஒடுங்கிய கன்னத்தோடு பெரிய பெரிய புருவமும், மீசை தாடியுமாய் இருந்தான். ஆனால் இருட்டிலும் அவனது பொடி கண்களில்தெரிந்த வெறி அவனை ஒரு கொள்ளைகாரன் என்பதை விட கொலைகாரனாகவே காட்டியது.
கொள்ளைக்கார தளபதிக்கே உருவான கரடுமுரடு உடையும் தொப்பியும் அணிந்திருந்த அவனது கையிலிருந்த வாள் மட்டும் நாலடி நீளமாக இருந்தது. இருபக்கமும் கூறான வாள் வெட்டி வெட்டி மின்னியது. பக்கத்தில் அவனைவிட நெட்டையாய் ஒருத்தன் நாயக்க தளபதி பேசுவதை இரப்பாளிக்கும் இரப்பாளி பேசுவதை நாயக்கனுக்கும் சொல்லி சொல்லி புரிய வைத்து கொண்டிருந்தான்.

இராயா இவன் யாரு... மெதுவாக கேட்டான். இவன் தான் மூர்படை தளபதி போல இலை தாடியாம் இவன் பேரு அரபி நாட்டு துலுக்கன் போல இருக்கான் என்றான் ராயன். பதிலுக்கு காணியாளன் சொன்னான் பாத்தா பிச்சைகாரன் போல இருக்கான் ஆனா சொளவு தாடில வச்சிருக்கான். இவனா தளபதி இராயன் அவனை அதட்டி இன்னும் கவனமானான். அந்த கூட்டம் அப்படியே இவர்கள் மறைந்திருந்த கோட்டை மதிற்சுவரின் கீழே கிழக்குவாசல் பக்கம்வந்து வாசல் கதவை தடவிபார்த்து கோட்டையின் கிழக்கு பகுதியில் புதைக்கப்பட்டிருந்த வலைகளை பற்றி அறியாது அதன் மேலேயே நின்று ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர்.

திடீரென்று இரப்பாளி நாயக்க தளபதி யை பார்த்து சத்தமிட்டான்

AANAA MAALUM KULLUM INDA ESKITH 
RO .... KUL INDA MUDIR

அதே வேகத்தோடு நெட்டையனும் சத்தமிட்டான். எனக்கெல்லாம் தெரியும் நீ மூடு இல்லை உன் அரசன் கிட்ட போ.

NESIL KULLUM PEERANKI 
PAATH KULLUM SUKAL FESUF SUPA 
INSA ALLAA KULLUM NAFAR NOM

மீண்டும் நெட்டையன் சொன்னான். எல்லா பீரங்கியையும் கரையிலே இறக்கு எல்லாம் காலையில் தான் நிம்மதியாக படுத்து தூங்குங்கள். கூட்டம் கலைந்து கடற்கரை நோக்கி போனது. ஆங்.. இப்போ சொல்லு , காணியாளன் கேட்டான். உள்ளாலையே பிரச்சனை வந்தாச்சு நாயக்கன் ராத்திரியே வாசலை உடைக்க சொல்லுறான். துலுக்கன் காலையில பாத்துக்கலாம்னு சொல்றான். பயலுவ உள்ள வந்து சாகுறதுக்கு துடிக்கிற துடிப்பை பாரு.

பக்கத்தில் பதுங்கி இருந்த பரதவன் இளைஞன் ஒருவன் கேட்டான். ஏம்பா... ரெண்டு பேருக்கும் பயமே கிடையாதா..? சும்மா கிண்டல் பண்ணிக்கிட்டு..

ஓ... செட்டியா....... மருமவனே ! எங்க மச்சான் வீரசெட்டி மவனா நீ, தொடை நடுங்கி பயவுள்ளா பயந்தா என்ன நடக்கும் பயப்படலைனா என்ன நடக்கும்...? நடக்கிறது நடக்கத்தான் செய்யும்...பாரு நேத்தே சொட்டய முறிச்சு நாயக்கமாரை போட்டிருக்கனும் இந்த அவசரக்குடுக்கை தீவைச்சிவுட்டுட்டான். சரி, இன்னைக்கு கொள்ளைகாரன்வளை மொத்தமா வெட்டி சாய்கும் போது நாயக்கன் வந்துட்டான் இருக்கிறது 500 பேரு வாரது 5000 பேரு, அதான் உயிரை கப்பாத்தனும்தான் உடனே கோட்டையை திறக்க சொன்னாரு, அதுக்குள்ளாடி அவரை வெட்டி சாச்சிட்டானுவ… ஐயோ..! சின்னராசா.. என்னாச்சி, செட்டி பதறினான். ஏ.. ஏ.. நீ சத்தம் போடாதே ஒன்னுமேயில்லை… வருவான், நாளைக்கு வருவான். எடா, பாண்டி பரவமாரை அழிக்க நினைச்சவமெல்லம் போயிட்டனுவ இலத்தாடி யாருடா…

சரி மருமவனே இங்கேயே இருங்க நாங்க கீழே போய் பார்க்கிறோம் என்றபடி இருவரும் நகர்ந்தனர். தூயதந்தை யை பார்த்தால்தான் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி தெரியும் என்பதால் இருவரும் அவரை காண ஏசு சபை அலுவலகம் சென்றனர் அங்கே கோட்டின் கோவின் மனைவி குழந்தைகளை பரதவ பெண்களோடு கலந்திருக்க தூய தந்தை சொன்னதை மறுத்த கொட்டின் கோ தனக்கு எந்த ஆபத்தும் விளையாது. நடந்தால் போர்சுகல் அரசு சும்மா விடாது என அரசியல் பேசிக் கொண்டிருந்தார். நாளை நடக்க போகும் விபரீதம் அறியாமல்…….

(தொடரும்)
கடற்புரத்தான் 
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com