கணவாய் [ SQUID (calamari) ] பிரட்டல்
தேவையானவை -
கணவாய் - 1
எண்ணெய் - 1 தேக்கரண்டி சின்ன வெங்காயம் - 6
பச்சைமிளகாய் - 2
பெருஞ்சீரகம் - சிறிதளவு
கருவேப்பிலை
பூண்டு– 4
மிளகாய்த்தூள் - 3 தேக்கரண்டி
புளி – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு.
செய்முறை –
(முக்கிய குறிப்பு மத்திமச்சூட்டில் அடுப்பை வைத்திருத்தால் மாத்திரமே உணவு சுவையானதாக இருக்கும்.)
1. முதலில் கணவாயைச் சுத்தமாக்கி துண்டுதுண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2. சின்ன வெங்காயம், பூண்டு சிறுசிறுதுண்டுகளாகவும், பச்சை மிளகாய்கயை நீளப்பாட்டுக்கு பிளந்தும் வைத்துக் கொள்க.
3. அடுப்பில் நீங்கள் சமைக்க இருக்கும் பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி எண்ணெயை விட்டுச் மெல்லிய சூட்டில் சூடேற்றவும்.
4. சூடேறிய எண்ணெயில் முதலில் பெருஞ்சீரகத்தைப் போட்டு வாசம் வரும்போது வெட்டி வைத்த வெங்காயம், உள்ளி, பச்சைமிளகாய் ஆகியவற்றையும் சேர்த்து வதங்கவிடவும்.
5. இளம்பருவமாக வதங்கியவுடன் கருவேப்பிலையைச் சேர்த்துக் கொள்ளவும்.
6. கருவேப்பிலை வாசைன கமகமக்கும் போது நறுக்கி வைத்திருக்கும் கணவாய்த்துண்டுகளை அதனுடன் சேர்த்து கிளறி மூடி மத்திமச் சூட்டில் அவியவிடவும்.( ஊசிக் கணவாய், குண்டுக்கணவாய் அவியும் நேரத்தில் வித்தியாசம் உண்டு)
7. தண்ணீர் விடவேண்டிய தேவை இருக்காது. கணவாய் தானே தண்ணீர்விட்டு அவியும். அதன் தண்ணீர் வற்றிய மாதிரித் தெரியும் தருணத்தில் மிளகாயத்தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டுக் கிளறவும்.
8. இப்போது கரைத்து வைத்திருக்கும் பழப்புளியையும் விட்டு கிளறி பிரட்டல் ஆக்கி சிறிது வேக விடவும்.
9. இப்போது கணவாய் பிரட்டல் ரெடி.
எண்ணெய் - 1 தேக்கரண்டி சின்ன வெங்காயம் - 6
பச்சைமிளகாய் - 2
பெருஞ்சீரகம் - சிறிதளவு
கருவேப்பிலை
பூண்டு– 4
மிளகாய்த்தூள் - 3 தேக்கரண்டி
புளி – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு.
செய்முறை –
(முக்கிய குறிப்பு மத்திமச்சூட்டில் அடுப்பை வைத்திருத்தால் மாத்திரமே உணவு சுவையானதாக இருக்கும்.)
1. முதலில் கணவாயைச் சுத்தமாக்கி துண்டுதுண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2. சின்ன வெங்காயம், பூண்டு சிறுசிறுதுண்டுகளாகவும், பச்சை மிளகாய்கயை நீளப்பாட்டுக்கு பிளந்தும் வைத்துக் கொள்க.
3. அடுப்பில் நீங்கள் சமைக்க இருக்கும் பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி எண்ணெயை விட்டுச் மெல்லிய சூட்டில் சூடேற்றவும்.
4. சூடேறிய எண்ணெயில் முதலில் பெருஞ்சீரகத்தைப் போட்டு வாசம் வரும்போது வெட்டி வைத்த வெங்காயம், உள்ளி, பச்சைமிளகாய் ஆகியவற்றையும் சேர்த்து வதங்கவிடவும்.
5. இளம்பருவமாக வதங்கியவுடன் கருவேப்பிலையைச் சேர்த்துக் கொள்ளவும்.
6. கருவேப்பிலை வாசைன கமகமக்கும் போது நறுக்கி வைத்திருக்கும் கணவாய்த்துண்டுகளை அதனுடன் சேர்த்து கிளறி மூடி மத்திமச் சூட்டில் அவியவிடவும்.( ஊசிக் கணவாய், குண்டுக்கணவாய் அவியும் நேரத்தில் வித்தியாசம் உண்டு)
7. தண்ணீர் விடவேண்டிய தேவை இருக்காது. கணவாய் தானே தண்ணீர்விட்டு அவியும். அதன் தண்ணீர் வற்றிய மாதிரித் தெரியும் தருணத்தில் மிளகாயத்தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டுக் கிளறவும்.
8. இப்போது கரைத்து வைத்திருக்கும் பழப்புளியையும் விட்டு கிளறி பிரட்டல் ஆக்கி சிறிது வேக விடவும்.
9. இப்போது கணவாய் பிரட்டல் ரெடி.