ஐங்குறுநூறு - நெய்தல் திணையின் தொண்டிப் பத்து பாடல்கள் தொகுப்பு
நெய்தல் என்பது கடலும் கடல்சார்ந்த இடமும் ஆகும். நெய்தல் நிலமக்களை பரதவர் என்று அழைப்பர். நெய்தல் நிலமக்கள் கடலில் கிடைக்கும் உப்பு, மீன் போன்றவற்றையே முக்கிய வாழ்வு ஆதாரமாக கொண்டு வாழ்ந்து வந்தனர்.
ஐங்குறுநூறின் நெய்தல் திணையில் உள்ள தொண்டிப் பத்து பாடல்களையும் கீழ்க்கண்டவாறு பகுக்கப்பட்டுள்ளது.
171.தலைவன் கூற்று
திரைஇமிழ் இன்னிசை அளைஇ
அயலது
முழவுஇமிழ் இன்னிசை மறுகுதொறு
இசைக்கும்
தொண்டி அன்ன பணைத்தோள்.
ஒண்தொடி அரிவைஎன் நெஞ்சுகொண் டோளே.
172.தலைவன் கூற்று
ஒண்தொடி அரிவை கொண்டனள்
நெஞ்சே
வண்டிமிர் பனித்துறைத் தொண்டி
ஆங்கண்
உரவுக் கடலொலித் திரையென
இரவி னானும் துயிலறி
யேனே.
173.பாங்கன் கூற்று
இரவி னானும் இன்துயில்
அறியாது
அரவுறு துயரம் எய்துப
தொண்டித்
தண்ணறு நெய்தல் நாறும்
பின்னிரும் கூந்தல் அணங்குற்
றோரே.
174.தலைவன் கூற்று
அணங்குடைப் பனித்துறைத் தொண்டி
அன்ன
மணம்கமழ் பொழில்குறி நல்கினள்
நுணங்கிழைப்
பொங்கரி பரந்த உண்கண்
அங்கலிழ் மேனி அசைஇய
எமக்கே.
175.தலைவன் கூற்று
எமக்கு நயந்து அருளினை
ஆயின் பணைத்தோள்
நன்னுதல் அரிவையொடு மென்மெல
இயலி
வந்திசின் வாழியோ மடந்தை
தொண்டி அன்னநின் பண்புபல
கொண்டே.
176.தலைவன் கூற்று
பண்பும் பாயலும் கொண்டனள்
தொண்டித்
தண்கமழ் புதுமலர் நாறும்
ஒண்தொடி
ஐதுஅமைந்து அகன்ற அல்குல்
கொய்தளிர் மேனி கூறுமதி
தவறே.
177.தோழிக்கூற்று
தவறிலர் ஆயினும் பனிப்ப
மன்ற
இவறுதிரை திளைக்கும் இடுமணல்
நெடுங்கோட்டு
முண்டக நறுமலர் கமழும்
தொண்டி அன்னோள் தோள்உற்
றோரே.
178.தலைவன் கூற்று
தோளும் கூந்தலும் பலபா
ராட்டி
வாழ்தல் ஒல்லுமோ மற்றே
செங்கோல்
குட்டுவன் தொண்டி அன்ன
எற்கண்டு நயந்துநீ நல்காக்
காலே.
179.தோழிகூற்று
நல்குமதி வாழியோ நளிநீர்ச்
சேர்ப்ப
அலவன் தாக்கத் துறைஇறாப்
பிறழும்
இன்னொலித் தொண்டி அற்றே
நின்அலது இல்லாது இவள்சிறு
நுதலே.
180.தோழிகூற்று
சிறுநனி வரைந்தனை கொண்மோ
பெருநீர்
வலைவர் தந்த கொழுமீன்
வல்சிப்
பறைதபு முதுகுருகு இருக்கும்
துறைகெழு தொண்டி அன்னஇவள்
நலனே.