பனிமய தாயை நோக்கிய இலங்கை வாழ் பரதர்களின் புகழ் பாடல்
பனிமயத் தாயின் பக்தர்களே – நீங்கள்
இடைவிடாது சகாயம் புரியும் – அந்த
அன்னையை கேளுங்கள்
தெய்வீக கலைஞனின் பெரும் படைப்பாம் – அவள்
தெய்வத்தின் சன்னிதி ஒளிவிளக்காம்
பரமனின் உள்ளம் வாழ்பவள் நீயே
மண்ணகம் வாழ்வோர் முதற்கனி நீயே – பனிமய
கொழும்புமா நகரின் அணிகலன் நீயே
விரும்பிய விண்ணக நிறையருள் தாயே
நொந்திடும் உள்ளங்கள் எல்லாமே வருக
இறைவனின் சொல்லிலே நிம்மதி பெறவே – பனிமய