அலைகளின் மைந்தர்கள் - 1

கட்டுமரம் அப்படியே கவிழ்ந்தாலும் நீருக்குள் மூழ்காது..
சிலர் நீந்தி கரையேறினார்கள்..
சிலர் இறந்து போனார்கள்..
சிலர் கட்டுமரத்தை பிடித்தபடி வெவ்வேறு ஊர்களில் கரையேறினார்கள்..
ஒரு ஏழு கட்டுமரமும் அதைப்பிடித்து கொண்டு வந்தவர்களும் ஒரு ஊரில் கரையேறினார்கள்..
அந்த ஊர்தான் மூக்கையூர்..
ஒரு இனத்தின் தவிர்க்க முடியாத நகரம் மட்டுமல்ல கடவுளின் நேரடி பார்வையில் உண்டான நகரம் தங்கச்சிமடம்..
அதனை தொடர்ந்து பாம்பன் ஒரு இனம் நிலைகொண்ட வரலாறு..
அலைகளின் மைந்தர்கள்...
எப்பொழுதுமே போராடிக்கொண்டிருக்கும் ஒரு இனத்தின் வாக்குமூலம்..
ஏழு கட்டுமரத்தில் வந்த 14 பேரும் மூக்கையூர் கடற்கரையில் ஒதுங்கி பேச்சு மூச்சற்று கிடந்தார்கள்.. அவர்கள் அருகிலேயே கட்டுமரமும் கரை ஒதுங்கி கிடந்தது..
மோயிசா.. ( மோசே)..
ஆண்டவரின் அதட்டலான குரலுக்கு அடுத்த நொடியே கடவுளின் எதிரே கைகளை கட்டியபடி பவ்யமாக நின்றார் மோயிசன்..
ஒம்மர்ட்ட என்னவே சொன்னேன்..
இவர்கள் எனக்கு பிடித்த இனம்..
இஸ்ராயேல் மக்களுக்கு அடுத்து இவர்கள் மீதுதான் என் பார்வை நிலைகுத்தி நிற்க்கிறது.. இந்த சமூகம் கடற்கரை ஓரங்களில் பல்கி பெருக வேண்டும் என்றுதானே உன்னை இடம் மாற்ற சொன்னேன்.. எகிப்திலிருந்து இஸ்ராயேல் மக்களை செங்கடலை கடந்து கானான் பிரதேசம் கொண்டு சென்றதை போல் இவர்களையும் கூட்டிக்கொண்டு போ என்றுதானே உன்னிடம் சொன்னேன்.. இங்க பாரு.. அவ்வளவு பேரும் சாக கிடக்கானுக.. கடவுள் மோயிசனிடம் கோபத்துடன் சொன்னார்.. ஆண்டவரே இப்பொழுது என்னால் கடலையெல்லாம் பிளக்க முடியாது.. என்றார் மோயிசன் ..
ஏன்...
கானான் பிரதேசத்துல செங்கோல் தொலைந்து போனது.. தலை குனிந்தபடி கடவுளிடம் சொன்னார் மோயிசன்.. (பாரோனின் படைகளிடம் அப்பவே உன்னை ஒப்படச்சிறுக்கனும் மனதுக்குள் நினைத்து கொண்டார் கடவுள்..) கடற்கரைல ஒதுங்கி கிடந்தவன் அவ்வளவு பேரையும் எழுப்பிவிட்டு கருவங்காட்டு பிரதேசமான மூக்கையூருக்குள் அவர்களோடு உள் நுழைந்தார் கடவுள்...
...தொடரும்...
- சாம்ஸன் பர்னாந்து