ஆங்கிலேய பேரரசின் ஆட்சியில்
ஆங்கிலேயர் பேரரசின் ஆட்சியில் பரதவர் கிராமங்கள் இந்திய கிராமங்களை போல் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நகரங்களை போல் காட்சியலித்தது.
----------------------------------------
பரவர் நாட்டின்(Fishery Coast) மணப்பாடு நகரம்.
மணப்பாடு நகரின் வீடுகள் அனைத்தும் இலங்கையில் வசித்து வரும் பிரிட்டிஷ் குடிமக்களின் வீடுகளின் மாடலில் கட்டப்பட்டிருந்தது. சில அடுக்கு மாடி வீடுகளும் அதே மாடலில் கட்டப்பட்டிருந்தது. அனைத்து வீடுகளும் ஓடுகள் பதிக்கப்பட்டு காற்றோட்ட வசதி செய்யப்பட்டுள்ளது.
மணப்பாடு நகர் பரவர்கள் அனைவரும் இலங்கையில் தங்கி வர்த்தகம் செய்து வந்தனர். இடைவெளி கிடைக்கும் போது மணப்பாடு சென்று தங்கள் மனைவி, பிள்ளைகளுடன் நேரம் செலவழித்து வந்தனர்.
----------------------------------------
Foot Notes:-
MADRAS DISTRICT GAZETEER, TINNEVELI by H. R PATE,I.C.S,Volume 1,Pg:502.
பிரிட்டிஷ் இந்தியாவின் ஆட்சியில் பரவர்களின் தலைமையகம் தூத்துக்குடி ஆகும். அவர்களின் குலாதிபன் (ஜாதி)தலைவன் என்று அழைக்கப்படுகிறார். அவர்கள் தங்களை பண்டைய பாண்டிய மன்னர்களின் க்ஷத்திரியர்கள் என்று கூறுகின்றனர்.பரவர்கள் பிராமணர்கள் வீட்டில் மட்டுமே உணவு உண்ணும் பழக்கமுடையவராக இருந்தனர்.
________________________
CENSUS OF INDIA 1901 MADRAS PART 1 REPORT BY W. Fransis pg 173.
- UNI