வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Sunday 14 April 2024

கொல்லம் பரதவர் குடியேற்றம்

ஜான் நியூஹாஃப் (Johan Nieuhof) என்னும் டச்சு கிழக்கிந்திய பயணி கிபி 1662 ஜனவரி மாதம் கொல்லம் வருகிறார். இவர் தனது குறிப்பில் ரோமாபுரியை தலைமையிடமாக கொண்ட கத்தோலிக்க திருச்சபையின் அங்கத்தினரான ஏசுசபையினர் கொல்லம் நகரின் தெற்கு பகுதியில் கடற்கரையோரம் பரவர்களுக்கு ஒரு பெரிய கிராமத்தை கட்டியிருந்தனர்.

இங்கு திருவாங்கூர் மகாராஜாவின் ஆளுநர் மற்றும் திருவாங்கூர் மகாராஜாவின் குறுநில மன்னர் வரியத்த பிள்ளை தங்கள் அரண்மனைகளை இங்கு அமைத்து வாழ்ந்து வருகின்றனர். அரசர் வரியத்த பிள்ளை மற்றும் திருவாங்கூர் அரசரின் ஆளுநர் அரண்மனைகள் அமைத்து வாழ்ந்து வந்த இந்த பரவர் கிராமம் ஒரு மைல் சுற்றளவு கொண்டதாக இருந்தது.

இதனை சுற்றி கோட்டையரண்கள் எழுப்பப்பட்டு கொத்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மீது பெரிய பீரங்கிகளை பொருத்தி உள்ளனர். இந்த புதிதாக உருவாக்கப்பட்ட பரவர் குடியேற்றம் இன்றைய கொல்லம் மாநகரில் மூதாக்கரை ஊராகும். இவ்வூரில் தேவாலயம் கிபி 1610 இல் கட்டி முடிக்கப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார். 

----------------------------------------

Foot Notes:

1.Voyages to East Indies and Brazil by Johan Nieuhof, Pg. 220

- UNI








Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com