தமிழகத்தின் குட்டி இங்கிலாந்து
நூறு வருடங்களுக்கு முன்பு தமிழகத்திலிருந்த குட்டி இங்கிலாந்து
நாம் இன்று யாரிடமாவது தமிழகத்தில், இங்கிலாந்தை போல காட்சியளிக்ககூடிய சில பகுதிகள் உள்ளன என்று சொல்வோமானால் அவர்கள் அதனை துளியும் நம்பமாட்டார்கள். ஆனால் நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில், ஒரு குட்டி இங்கிலாந்து இருந்தது என்று எத்தனை பேருக்கு தெரியும்.
ஆங்கிலேய அரசு அதிகாரியான, எச்.ஆர்.பேட் என்பவர் தமது நூலில்....
பரவர் நாட்டில், மணப்பாடு, ஆலந்தலை, வீரபாண்டியன் பட்டினம் போன்ற கிராமங்கள் மற்ற இந்திய கிராமங்களை போல் அல்லாமல் மாறாக ஐரோப்பிய நாடுகளில் உள்ள நகரங்களை போல் காட்சியளிக்கிறது" என்று குறிப்பிடுகிறார்.
மேலும் எச். ஆர். பட்டே கூறுகையில்....
மணப்பாடு நகரை பற்றி குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் அங்குள்ள வீடுகள் அனைத்தும் அச்ச அசலாக ஆங்கிலேயர்களின் வீட்டு மாடல்களில் கட்டப்பட்டிருக்கிறது. மணப்பாடு நகரில் மாடி வீடுகளானாலும் சரி, மாடி இல்லாத வீடுகளானாலும் சரி, அனைத்துமே கற்களால் கட்டபட்டு, வீடுகளின் மீது ஓடுகள் பதிக்கப்பட்டு, காற்றோட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
மணப்பாடு பரவர்கள் அனைவரும் இலங்கையில் தங்கியிருந்து வர்த்தகம் செய்து வந்தனர். இடைவெளி கிடைக்கும் போது மணப்பாடு நகருக்கு சென்று தங்களது மனைவி, பிள்ளைகளுடன் நேரம் செலவழித்து வந்தனர்.
००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००
ஆதாரம்:-
MADRAS DISTRICT GAZETEER, TINNEVELI by H. R PATE,I.C.S,Volume 1,Pg:101,
- UNI