பரவர்களும் போர்சுகீசிய மொழியும்
கிபி 1658 ஆம் ஆண்டு போர்சுகீசிய பேரரசின் பாதுகாப்பு பெற்றிருந்த பரவர் தேசத்தை கைப்பற்றிய டச்சு கிழக்கிந்திய கம்பெனி அந்நாட்டை தங்களது பாதுகாப்பின் கீழ் எடுத்துக்கொண்ட பின் பாதிரியார் பிலிப்பஸ் பால்டேயஸ் (Philippus Baldaeus) என்பவரை பரவர்களிடையே நெதர்லாந்து நாட்டின் கால்வினிஸ்ட் கிறிஸ்துவ மதத்தை மறைப்பரப்பு செய்ய அனுப்பி வைத்தனர்.
இப்பாதிரியார் தனது குறிப்பில்....
பரவர்கள் போர்சுகீசிய மொழியோடு இணைக்கப்பட்டுள்ளனர். நான் சில பரவர்களை சந்தித்த போது அவர்கள் போர்ச்சுகல் நாட்டின் தலைநகரான லிஸ்பன் நகரில் பேசப்படும் அதே போர்சுகீசிய மொழிநடையில் என்னுடன் உரையாடினார்கள் என்கிறார்.
நான் பரவர்களுக்கு ஐரோப்பியாவின் நெதர்லாந்து நாட்டின் கால்வினிஸ்ட் கிறிஸ்துவ மதத்தை போர்சுகீசிய மொழியிலேயே போதித்தேன் என்கிறார்.
- UNI